திமுகவில் வாரிசு சண்டைகள்…
இன்று மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கபட்ட தினம் என பலருக்கு திடீர் நினைவு வந்தாயிற்று
திமுகவில் வாரிசு சர்ச்சைகள் திராவிட கழகத்தில் இருக்கும்பொழுதே தொடங்கியது, அப்படித்தான் பிரிந்து வந்தார்கள்
பின் ஈவிகேஎஸ் சம்பத் அடித்தே விரட்டபட்டார், கண்ணதாசன் போன்றோர் தலைதெறிக்க ஓடினர்
அதன் பின் ராமசந்திரன் தனிகொடி பிடித்ததும் வேகம் தணிந்தது
பின் வைகோவா ஸ்டாலினா என்பதில் வைகோ பாகத்தை பிரித்துகொண்டு போனார், பின் ஒன்றுமில்லாமல் வந்து கஞ்சிக்கு காவல் இருப்பது வேறுவிஷயம்
அப்படிபட்ட திமுகவில் கலைஞரின் இறுதிகாலங்களில் அவரை மீறி பல விஷயம் நடந்தது
அதில் ஒன்றுதான் தினகரன் பத்திரிகை நடத்திய கருத்துகணிப்பு
கலைஞர் மகா வித்தகர் தான் உயிரோடு இருக்கும் வரை முன்னாள் திமுக தலைவர் எனும் பெயரை கேட்க அவர் தயாராக இல்லை, ஆனால் ஸ்டாலின் தன் அரசியல் வாரிசு என அடுத்தவர்களை பேசவைத்து அப்படியா? என கேட்டுகொண்டார்
தயாநிதிமாறன் கோஷ்டிக்கு அப்பொழுது டெல்லி சூனியம் வைக்கபட்டிருந்தது, கலைஞரின் விருப்பத்தை மீறி அந்த கருத்து கணிப்பை வெளியிட்டார்கள்
ஸ்டாலின், அழகிரி , கனிமொழி, தயாநிதிமாறன் இதில் யார் கலைஞரின் வாரிசு என அது செய்தி வெளியிட்டது
விஷயம் எகிறியது, ஆளாளுக்கு குதித்தார்கள். செய்தி அதிகம் பரவசெய்ததில் அதிமுக பங்கும் உண்டு
அழகிரி கோட்டையான மதுரையி அணல் தெரித்து தினகரன் பத்திரிகை அலுவலகத்தை கோஷ்டி கொளுத்தியது, 3 பேர் செத்தனர்
அத்தோடு கலைஞர் குடும்பத்திற்கும் தயாநிதி கோஷ்டிக்கும் சண்டை வெடித்தது, தனது பிள்ளை பாசத்தை கலைஞர் மறுபடியும் நிருபித்தார்
பின் எப்படியோ அமைதியாகி கண்கள் பனித்தது, இதயம் உருகி சமாதானம் ஆகிவிட்டார்கள்
ஆனால் செத்த 3 பேர் வருவார்களா? வரமாட்டார்கள்
இந்த கருத்துகணிப்பு 3 பேர் கொலை எனும் பழிமட்டும் அல்ல, இன்னும் பெரும் சரிவினை ஏற்படுத்தியது
திமுகவின் பெரும் பலவீனம் பெண்கள் வோட்டு அறவே கிடையாது, ஆங்காங்கு கிடைக்கும் வோட்டுகளையும் வெற்றிகொண்டான் போன்றோர் தன் இலக்கிய பேச்சுக்களால் தடுக்கும் வேலையினை செய்தனர்
அதிமுக இதில் சமத்து, ஜெயா நின்றது பெண்கள் வோட்டிலே. அதனால்தான் கடைசி வரை விந்தியா என பெண் முகத்தையே அவர்கள் முன்னுறுத்தினார்கள், பலனும் இருந்தது
இதை எல்லாம் கணித்துத்தான் தலைவி குஷ்பு திமுகவிற்கு கொண்டுவரபட்டார், அவருக்கு பெரும் கூட்டம் கூடிற்று
இந்த கருத்துகணிப்பு தொடர்பாக அவரிடமும் கேட்டார்கள், திமுக ஜனநாயக இயக்கம், யார் அடுத்த தலைவர் என உட்கட்சி தேர்தல்தான் முடிவு செய்யும் என தைரியமாக சொன்னார்
மற்றவர்களை போல தளபதி , உதயநிதி, துர்காஜி, அஞ்சா நெஞ்சன், காவிய தலைவி கனிமொழி என்றெல்லாம் தலைவிக்கு தெரியாது
ஒரு உண்மையான திமுக தொண்டர் எப்படி சொல்வாரோ அப்படி அருமையாக சொன்னார்
விடுவார்களா?
அவர் வீட்டின் மேல் கல் எறிந்து பாடாய் படுத்தினார்கள். கண்ணீரோடு விடைபெற்றார் தலைவி
சங்கம் பல நேரங்களில் திமுக மேல் ஏன் சாடுகின்றது என்றால் இப்படியான கொடூர செயல்களாலே
அதன் பின் தலைவி வெளியேறினார், பெண்கள் வோட்டும் இல்லை திமுக தோற்றது
அப்படியாக இந்த தேவையற்ற கருத்துகணிப்பு திமுகவினை சரித்து, 3 பேரை கொன்று, கலைஞர் குடும்பதில் அணல் வீசி, தலைவி மேல் கல் வீசி ஓய்ந்தது
இன்றுவரை தலைவி தாக்கபட்டதற்கு திமுகவின் இரண்டாம் மட்டம் மன்னிப்பு கோரவில்லை, கலைஞர் மட்டும் சீறினார் ஆனால் பலனில்லை
தலைவி மேல் வீசபட்ட கல் ஒவ்வொன்றும் சங்கத்தார் மனதிலே விழ்ந்த இடி, அந்த வடு மாறாது
இப்படி திமுகவில் கலைஞருக்கு பின் யார் என கருத்துகணிப்பு செய்தவர்கள், அதிமுகவில் ஜெயாவிற்கு பின் யார் என செய்தார்களா?
செய்தால் மதுரையில் மட்டுமா?
விண்வெளிக்கும் சென்று சன்டிவி , தினகரன் பத்திரிகையின் சாட்டிலைட்டை எரித்திருப்பார்கள்
அதனால் அப்படி ஒரு கணிப்பில் அவர்கள் இறங்கவே இல்லை, இன்றுவரை இல்லை
கலைஞரை எத்தனையோ பேர் மனம் நோகடிக்க வைத்து இன்பம் கண்டார்கள்
ஆனால் அவர் வளர்த்த , என் மனசாட்சி என வளர்த்த மாறனின் குடும்பம் கதறவைத்த நிகழ்வு இது