திமுகவுக்கான பெரும் எச்சரிக்கை

இந்த கதிர் ஆனந்த் என்பவரின் தோல்விகரமான வெற்றிக்கு என்ன காரணம் என ஆளாளுக்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன‌

விஷயம் ஒன்றுமில்லை , எப்படியும் வெல்ல போகின்றோம் வென்றாலும் அமைச்சரவையில் இடமில்லை மந்திரி பதவியில்லை என்ற ஒருவித விரக்தியில் தேர்தலை வெறும் ஈகோ பிரச்சினை ஒன்றில் மட்டுமே அணுகியிருக்கின்றது திமுக தரப்பு

பெரும் பணம் இறக்கவுமில்லை, கனிமொழி முதலான பெரும் நட்சத்திரங்களை இறக்கவுமில்லை

துரைமுருகனும் எளிதாக வென்றுவிடலாம் எனும் ஒருவித அநீத தன்னபிக்கையில் மல்லாக்க கிடந்ததாக சொல்கின்றது வேலூர் செய்திகள்

எது எப்படி ஆயினும் திமுகவின் இரண்டாம் கட்ட தலமை இப்படி தடுமாறியிருப்பது திமுகவுக்கான பெரும் எச்சரிக்கை