திமுக அத்தியாயத்தில் இந்நாள் கறுப்பு நாள்
இவர்களுக்கு வாக்களித்து சட்டமன்றத்தில் எங்கள் பிரச்சினைகளை பேசுங்கள் என அனுப்பி வைத்தால் அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றம் நடத்துகின்றார்களாம்
இதெல்லாம் கேலி கூத்தான விஷயங்கள்
ஸ்டெர்லைட்டில் அதிமுக, திமுக என இருவரின் கரங்களும் கட்டாயம் உண்டு. தலைகீழாக நின்றாலும் ஸ்டாலின் மறைக்க முடியாது
தமிழகத்தில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்றே தவிர தமிழகத்தின் ஒரே பிரச்சினை அது அல்ல
காவேரி முதல் கரைகாணா சிக்கல் ஏராளம் உண்டு, ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் பிரச்சினை இருக்கின்றது
அதுவும் ஆலை மூடபடுகின்றது என அறிக்கை வந்தபின், பூட்டை காட்டு, சாவியினை காட்டு என அழிச்சாட்டியம் செய்வது சரி அல்ல
இப்பொழுதெல்லாம் பழனிச்சாமி பொறுப்பானவராக தெரிய ஆரம்பித்துவிட்டார்
89 தொகுதி மக்களின் சார்பாக சட்டமன்றத்தில் பேசவேண்டியவர்கள் அறிவாலயத்தில் இருந்துகொண்டு புலம்புவது மாபெரும் அவமானம் வெட்க கேடு
எப்படி இருந்த திமுக?
சட்டசபையில் தன் வாத திறமையால் காமராஜர் முதல் ராமசந்திரன் வரை கதறவிட்ட திமுக அது
ஜெயலலிதாவினை காயபட வைத்து கடைசி வரை அவர் ஒரு அச்சத்துடனே வந்து செல்ல வைத்த திமுக அது
மாபெரும் சிங்கம், யானை, நீர் யானைகளை எல்லாம் பார்த்த திமுக, ஒரு சிறு முயலுக்கு அஞ்சி அறிவாலயதில் அடங்கிவிட்டதாம்,
உண்மையான திமுககாரன் எல்லாம் கோபலபுரத்தில் ஓய்வில் இருக்கும் அந்த சிங்கத்தின் முன்னால் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடும் நேரமிது, நிச்சயம் அவமானம்
லியோனி, மனுஷ் என முன்னிறுத்திய திமுக இன்று காமெடி கட்சியாகவே ஆகிவிட்டது
துருக்கியின் கமால் பாஷா இயக்கம், இத்தாலியின் கரிபால்டியின் தொண்டர் படை, கோமேனியின் புரட்சி படை, லெனினின் செம்படை போல தமிழகத்தில் பெரும் ஆர்பரிப்போடு இருந்த திமுக இன்று காமெடி சர்க்கஸ் கட்சி என்றாகிவிட்டது
திமுக அத்தியாயத்தில் இந்நாள் கறுப்பு நாள்
இந்த முக ஸ்டாலினை விட, சட்டசபையில் நல்லமுறையில் மக்கள் பிரச்சினைகளை விவாதியுங்கள் என மொத்தமாக எல்லா எம்.எல்.ஏக்களுக்கும் கோரிக்கை வைத்த அந்த கமலஹாசன் எவ்வளவோ பரவாயில்லை