திமுக என்பது நல்ல சிந்தனையாளர்களின் சிறைகூடம்

ஏன் நீ திராவிடவாதி ஆகவில்லை, முன்பு ஏன் எழுதினாய் என்றால் விஷயம் இதுதான்

நாம் புலிகளின் அட்டகாசத்தையும் முன்பு திமுக அவர்களுக்கு செய்த உதவியினையுமே சொன்னோம்

திராவிட திமுக சித்தாந்தம் மிக குறுகியது, அதில் கலந்துவிட்டால் தமிழ், தமிழகம் தமிழக அரசியல் திராவிடம் இந்த குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்வீர்கள்

அது மலைமேல் ஏறி உலகத்தை பார் என காட்டாது, மாறாக அய்யகோ ஆபத்து வளையில் பதுங்கு என்றுதான் பயமுறுத்தும்

யாரையாவது பார்த்து சினேகமாக புன்னகைத்தால் அய்யகோ அவனுடன் பழகாதே என தனிமைபடுத்தும்

மொழிகற்க விடாது, மதத்தை நோக்க விடாது, உலக சமூகத்தோடு தமிழனை கலக்க விடாது.

அங்கு பெருந்தன்மையான உலக பார்வையோ, பல விஷயங்களையோ படிக்கவோ பேசவோ முடியாது

பெரியார், அண்ணா, கலைஞர், திமுக என சுற்றி சுற்றி குண்டு சட்டிக்குள் எலி போல சுற்றவேண்டுமே தவிர வேறு வழியில்லை

மகா திறமையானவர்கள் எல்லாம் திமுகவில் சிக்கி இறக்கை ஒடிக்கபட்ட பறவையாக சிறைபட்டு வீழ்ந்துவிட்டார்கள்

அது முழுக்க முழுக்க அரசியல் மேடை

உலகின் பல விஷயங்களை ரசிக்க, ஆன்மீக விவகாரங்களில் திளைக்க, பல இனங்களொடு பழக, எல்லா மக்களையும் நேசித்து கடக்க திராவிடம் தமிழகம் என சிக்கிவிட்டால் நிச்சயம் முடியாது

உலகமே தமிழனை ஒழிப்பது போலவும்,இந்தியா கொல்ல துடிப்பது போலவும், தமிழுக்கு இவர்களை விட்டால் யாருமில்லை என்பது போலவும் பயமுறுத்துவார்கள்

உண்மைக்கும் அதற்கும் வெகுதூரம்…

அவர்களிடம் சிக்கினால் உலகமே தமிழனுக்கு எதிரி என்பது போல மாயபிம்பம் ஏற்படும், ஏதோ தமிழகம் பெரும் ஆபத்தில் இருப்பது போல மனநோய் ஏற்படும்

அந்த நோய்க்கு மருந்தும் மருத்துவமும் நாங்களே என இவர்கள் அரசியல் செய்வார்கள்..

அதில் கவனமாக சம்பாதிப்பார்கள்

அங்கு உங்கள் சிந்தனை கட்டபடும், கண்களுக்கு கடிவாளம் இடபடும், கால்களுக்கு சங்கிலி இடபடும்

இப்படித்தான் பார்க்க வேண்டும்,இப்படித்தான் சிந்திக்க வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என இழுத்து செல்லபடுவீர்கள், நிறைய பேர் அப்படித்தான் தொலைந்து போனார்கள் அல்லது அடிமையானார்கள்

அந்த கோழி கூட்டத்தில் எத்தனையோ கழுகுகள் தாம் கழுகுகள் என்பதை அறியாமல் குப்பையினை கிளறிகொண்டிருகின்றன‌

எத்தனையோ சிங்கங்கள் தாம் சிங்கமென்பதை உணராமல் ஆட்டுமந்தை பின்னால் அடங்கி செல்கின்றன‌

எத்தனையோ குயில்கள் தாம் குயிலென அறியாமல் காக்கைகளோடு கத்திகொண்டிருக்கின்றன‌

எல்லாம் பட்டம்,பதவி,அதிகாரம், அங்கீகாரம் என்ற ஏக்கமன்றி வேறல்ல‌

திமுக என்பது நல்ல சிந்தனையாளர்களின் சிறைகூடம், ஓடிவரும் நதியின் அணைகட்டு

அதில் சிக்கிகொண்டால் மிக குறுகிய சிந்தனையும், மிக குறுகிய வட்டமுமே போட்டுகொண்டு ஒருமாதிரி எழுத வேண்டும் வாழ வேண்டும்

அதற்கு தயார் என்பவன் அதில் இருக்கட்டும், நமக்கு என்ன வந்தது?