திமுக ஏதோ பிறந்தவுடன் ஆட்சிக்கு வந்ததா?
திமுக ஏதோ பிறந்தவுடன் ஆட்சிக்கு வந்தது போல பேசிகொண்டிருக்கின்றார்கள்
திகவிலிருந்து வெளியேற அண்ணா கோஷ்டிக்கு ஏகபட்ட தயக்கம் இருந்தது, பெரியார் இல்லாத இயக்கம் என்னாகும் என்ற அச்சமும் இருந்தது, ஆயினும் பெரியார் இருக்கும் வரை அரசியலுக்கு வரமுடியாது என எண்ணிய அண்ணா கோஷ்டி மணியம்மை திருமணத்தை சாக்காக வைத்து பிரிந்தது
அண்ணா பிரிந்தவுடன் கலைஞர் ஓடி சென்று சேர்ந்தவர் அல்ல, தடுமாறினார். பெரியாரை மீறி எப்படி வெல்லமுடியும் என்ற தயக்கம் இருந்தது
“அய்யா ஆணையிடுகின்றார், அண்ணா ஊழையிடுகின்றார்..” என பிரிவுக்கு முன்பே சுதந்திரத்தையொட்டி எழுதி பல்ஸ் பார்த்தவர் கலைஞர்
அந்த கட்சி அப்படித்தான் இருந்தது
“திண்ணையில் படுத்தேனும் திராவிட நாடு காண்போம்” என அண்ணா சொன்னபொழுது இன்று பாஜக கூட்டத்தின் முன்பிருக்கும் நாய் கூட இல்லை
அப்பொழுதும் திமுக ஈவிகே சம்பத்தை முன்னிறுத்தியது, சம்பத்தின் பிரிவுக்கு பின்பே அண்ணா முன்னிறுத்தபட்டார்
அண்ணாவிற்கும் தனித்து நின்று வெற்றிபேறுவோம் என்ற நம்பிக்கை துளியுமில்லை, இன்றைய நாம் தமிழர் போலத்தான் கத்திகொண்டிருந்தார்கள்
ஆனால் சீனப்போருக்கு பின் தனிநாட்டை கைவிட்டது, இந்தி எதிர்ப்பு தீவிரம் என 1960களில் அரசியலை பரபரப்பாக்கினார்கள்
ராமசந்திரன் உட்பட்ட சினிமா நட்சத்திரங்கள் அவர்களுக்கு கைகொடுத்தன
“கூத்தாடிகள்” என எல்லா கட்சியும் ஏற்க தயங்கிய அந்த கூட்டத்தை “கலைஞர்கள்” என அண்ணா ஆதரித்ததுதான் தமிழ்நாட்டின் திருப்பு முனை.
இதற்கும் மேல் காங்கிரஸின் எதிர்கட்சியான ராஜாஜியின் சுதந்திரா கட்சி முதல் இஸ்லாமிய கட்சிகள் வரை 7 கட்சி கூட்டணி அமைத்துத்தான் தேர்தலுக்கு வந்தார் அண்ணா
ராஜாஜிக்கோ திமுக பெரும்பான்மை பெறாது, குடுமி நம் கையில் சிக்கும் என்ற எண்ணம் இருந்தது, நரிதந்திரம் அது
ஆனால் ராமசந்திரன் சுடபட்டதும் அன்றிருந்த அரிசி தட்டுபாடும், இந்தி எதிர்ப்பில் தமிழகம் இழந்த 70 உயிர்களும் திமுகவினை ஆட்சியில் அமர்த்தின
திமுக பெற்ற பெரும்பான்மையில் ராஜாஜியும் தவிடுபொடியனார்
திமுக கடந்து வந்த பாதை இதுதான் மணியம்மை திருமணத்திற்கு பின்னரான 17 வருடங்களில் இப்படி பாடுபட்டுத்தான் ஆட்சிக்கு வந்தது
சும்மா ஏதோ திமுக லெனின் இயக்கம், மாசேதுங் இயக்கம், கமால் பாஷா இயக்கம் போல தொடங்கியவுடன் மக்கள் ஆதரவுடன் வந்து அமர்ந்தது என்றெல்லாம் சிலர் நம்பிகொண்டிருந்தால் நம்பிகொண்டே இருக்கட்டும்
இன்றைய பாஜக போல, நாம் தமிழர் போல 1950களில் இருந்த கட்சிதான் திமுக
அந்த வரலாறை யார் மறைக்க முடியும்?