திமுக ஒரு தமிழர் விரோத கட்சி : தும்பிகள் கும்பல்
ரஜினி தூத்துகுடி மக்களுக்கு 50 கோடி கொடுத்தார் என எவனோ புரளி கிளப்பி இருக்கின்றான்
அப்படி எல்லாம் ரஜினி கொடுப்பது சாத்தியமில்லை. தன் குருநாதர் பாலசந்தர் நிதி சிக்கலில் இருந்தபொழுது கூட , தன்னை ஆக்சன் ஹீரோவாக உருவாக்க்கிய எஸ்.பி முத்துராமனுக்கு கூட ரஜினி உதவியதாக சரித்திரமில்லை
இது உண்மையா என தெரியவில்லை, ஒருவேளை உண்மை என்றால் பாபா முதல் லிங்கா வரை பாதிக்கபட்டவர்கள் பால்டாயில், சயனைடு குப்பி, பெட்ரோல் கேனுடன் அவர் வீட்டு முன் அமர்ந்துவிடுவார்கள்
அப்படியே அந்த வாடகை பாக்கிகாரர்கள் விடுவார்களா என்ன?
திமுக ஒரு தமிழர் விரோத கட்சி என சொல்லிகொண்டே இருப்பது இந்த தும்பிகள் கும்பல்
இப்பொழுது முக ஸ்டாலின் 89 எம்.எல்.ஏக்கள் வைத்து என்ன செய்கின்றார்? ஆட்சியினை கலைத்தால் என்ன என ஒரே அழிச்சாட்டியம்
ஆக திமுகவினை திட்டி கொண்டே இருக்க வேண்டும் என்பது இவர்கள் முக்கால கொள்கை
அவ்வளவு நல்லவர்கள், திமுகவுடன் சேர்ந்து போராடி அதன் போராட்டங்களில் பங்கு பெற்று பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்க தயாரா? என்றால் ஒரு பயலையும் காணோம்