திமுக கொஞ்சம் கொஞ்சமாக திருந்துகின்றதா?

“இந்திராவினை சேலை கட்டிய ஹிட்லர்” என மிக தீவிரமாக எதிர்த்த திமுகவில் மோடியினை அயோக்கியன் என சொன்னது சலசலப்பை ஏற்படுத்துகின்றதாம்

என்றுமே ஒருவரை எதிரி என முடிவெடுத்துவிட்டால் திமுக பாடும் வசைகள் கொஞ்சமல்ல‌

நேரு, இந்திரா, காமராஜர் இன்னும் பலரெல்லாம் பட்டபாடுகளும் , கேட்ட வசைகளும் கொஞ்சமல்ல‌

அந்த அளவிற்கு மோடியும் அவரின் பாடிகாட்களும் இன்னும் பழிச்சொல் வாங்கவில்லை

அயோக்கியன் மோடி என சொல்வதற்கே அரண்டவர்கள், திமுகவின் பழைய வரலாற்று சான்றுகளான எருமை மாடு, கரிவண்டி, காக்கா, பெண்ணின் ரத்தம், என மிக மிக கடுமையான திமுகவின் சொல்வீச்சு பாணிகளை எல்லாம் மறந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள்

முட்டுசந்தில் நின்றுகொண்டு பல நேரம் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்குமே சவால் விட்ட இயக்கம் அது

அவர்களிடம் தமிழன் பிரசன்னா எல்லாம் கிட்ட வரமுடியாது

அப்படிபட்ட இயக்கத்தில் அயோக்கியன் மோடி என்பதெல்லாம் சாதாரண விஷயம்

ஏன் அயோக்கியன் என்பதோடு நிறுத்தினார்கள்?

திமுக கொஞ்சம் கொஞ்சமாக திருந்துகின்றதா? இல்லை அஞ்சுகின்றதா என்பதை இனி அவர்களின் பட்டிமன்ற தலைவர் லியோனியிடம்தான் கேட்க வேண்டும்