திமுக தலமைக்கு புதிய சிக்கல் ஆரம்பித்தாயிற்று
தமிழக பத்திரிகை செய்திகளை படித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் விளங்கும்
ஆம், திமுக தலமைக்கு புதிய சிக்கல் ஆரம்பித்தாயிற்று, சிக்கலை தேடிகொண்டது யாரென்றால் சாட்சாத் அவரேதான்
ஆம் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இரு பெண்கள் கோலமிட்டனர், காவல்துறை கைதுசெய்தது
உடனே திமுக களத்தில் குதித்து “போர்கோலம்” பூண்டது, அவர்களின் படை, குத்தீட்டி, களம், போர், கேடயம், வெற்றிகொடி,கோட்டை எல்லாமே கற்பனை
அப்படி அவர்கள் கண்ட கோல போராட்டாம் அவர்கள் போர்கோலம்
போர்கோலம் முடிந்து அந்த கைதான பெண்கள் விடுதலையாகி திமுக தலமையினையும் சந்தித்தார்கள், திமுக தலமையும் வெற்றி சிரிப்பு சிரித்தது
பண்டைய அரசர்கள் வெற்றிபெற்று சூடும் வேப்பம்பூ மாலை மட்டும் தலையில் இல்லை
திமுக அறிவித்த போராட்டத்தை அடுத்து சில பெண்கள் கோலமிட்டு சர்ச்சையில் சிக்கினர், அதாவது அடுத்தவர் வீட்டு முற்றதில் கோலம் போட்டு இம்சை செய்த சர்ச்சை அது
அங்குதான் காவல்துறை வந்தது
கைதான பெண்களின் பின்னணியினை விசாரித்த காவல்துறை அப்பெண்கள் பத்திரிகையாளராகவும் பாகிஸ்தானுடன் தொடர்பில் அதாவது பாகிஸ்தானிய பத்திரிகை உலகுடன் தொடர்பில் இருந்ததையும் தூக்கிவிட்டார்கள்
சமீபத்தில் ஈரானில் பெரும் போர்கோலம் வெடித்தது, முதன் முறையாக புரட்சி ஈரானில் ஏற்பட்ட கலகம் காரணமாக காரணத்தை கண்டறிய முடியாமல் தவித்த ஈரான் பின்பு தன் நாட்டு பத்திரிகையாளர் 8 பேர் அமெரிக்க பத்திரிகையுடன் தொடர்பில் இருப்பதையும் அவர்களே சிக்கலுக்கு காரணம் என அறிந்து தூக்கியது
அத்தோடு நாட்டில் அமைதி திரும்பிற்று
தமிழக காவல்துறையும் அதே பாணியினை கையில் எடுத்து காட்சிகளின் மூலத்தை கண்டறிந்துவிட்டது, இது சாதாரணமாய் முடியாது
திமுக கோலம் போடும் போராட்டத்தை அறிவிப்பதும் அதில் பாகிஸ்தானிய தொடர்புள்ள பத்திரிகையாளர் சிக்குவதும் தற்செயலாக நடக்குமா என்ன?
தமிழக காவல்துறையின் உயர் அதிகாரி ஆதாரமின்றி பேசவும் முடியாது
ஆக இம்ரான்கானின் தளபதிகளான டான் நெல்லை கண்ணன் சிக்கிவிட்டார், அவரின் தமிழக ஜெனரல் இதோ சிக்க போகின்றார்
ஆக திமுகவினை விட இம்ரான்கானுக்கே மகா சோகமான காலம்