திமுக பொதுக்குழு கூடியது
கனத்த இதயத்துடன் பதவியின ஏற்றுக்கொள்கிறேன்: மகிழ்ச்சியாக அல்ல: மு.க.ஸ்டாலின் உருக்கம்
இது என்னடா கழகங்களுக்கு வந்த சோதனை?
அங்கே சசிகலாவும் கனத்த இதயம் என்கின்றார், இங்கே இவரும் கனத்தை இதயம் என்கின்றார்
அவ்வளவு கனமான விஷயம் என்றால், இதயம் சுமக்க முடியாத பொறுப்பு என்றால் கூட 4 தலைவர்களை வைத்துகொள்ளலாம் அல்லவா?
அவ்வளவு ஏன் உடன்பிறப்பான அழகிரியோடு பகிர்ந்துகொண்டாலே கனத்த இதயம் லேசாகாதா?
எதையும் தாங்கும் இதயம் உள்ள திமுகவினருக்கு பதவி கொடுத்தால் நெஞ்சு கனக்குமா?
அவ்வளவு மகிழ்ச்சி இல்லை என்றால் அருகிலிருக்கும் துரை முருகனுக்கு கொடுத்தால் என்ன?
ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கபட்டுவிட்டது, உடன் பிறப்புக்கள் கொண்டாட்டம்
சரி இனி என்ன செய்வார்?
முன்பு செய்ததையே செய்வார், முன்பு போலவே அறிக்கை விடுவார், போராட்டம் நடத்துவார், கட்சி அவர் கட்டுபாட்டில் இருக்கும்
முன்பும் அப்படித்தானே இருந்தது
ஆமாம், இனியும் அப்படித்தான் இருக்கும்
இதற்கு எதற்கு புதிய பதவி?
ஆமாம் எதற்கு?
அது அப்படித்தான்..
திமுக பொதுகுழு கூடியது, அதிமுக பொதுகுழு கூட அவசியம் இருந்தது, எதிர்பார்ப்பும் இருந்தது
இந்த பொதுகுழுவில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்? ஒன்றுமில்லை
எப்படியும் இறுதி மூச்சு உள்ளவரை திமுக தலைவர் ஸ்டாலின் என சொல்ல கலைஞர் விடவே மாட்டார்.
அதாவது ஸ்டாலின் திமுக தலைவராகும் பொழுது கலைஞர் இருக்க மாட்டார், அதுவரை இம்மாதிரியான விளையாட்டுகள் நடக்கும்
“செயல் தலைவர்” என வேண்டுமானால் ஸ்டாலினை அறிவிப்பார்கள்
ஸ்டாலினை “செயல் தலைவர்” என அறிவித்து விட்ட மறுநொடி என்னாகும்? அழகிரி ஆட்டம் காட்டுவார்
ஸ்டாலின் செயல் தலைவர் என்றால், நான் செயல்படாத தலைவனா? என்ன கொடுமை இது என அவர் பொங்கலாம்.
கலைஞர் என்ன சொல்வார்?
“செயல் படாத தலைவர்” என அன்பழகனை அறிவித்துவிடலாம். உன்னை “புயல் தலைவர்” என அறிவித்துவிடட்டுமா?
இனி
ஸ்டாலின் “செயல்” தலைவர்
அழகிரி “புயல்” தலைவர்
கனிமொழி “பெயில்” தலைவர்
மாறன் கோஷ்டி “முயல்” தலைவர்
யாரும் முன்னாள் குஷ்பூ போல இணைந்தால் அவர் “மயில்” தலைவர்
நாகூர் ஹனிபா இருந்திருந்தால் அவர் “குயில்” தலைவர்
பல தலைவர்கள் திமுகவில் மட்டுமே சாத்தியம்.
இப்படி பல தலைவர்கள் அங்கிருக்க, மற்றவர்கள் எல்லாம் யார்?
அவர்கள் பாணியில் சொல்வதென்றால்,
“கட்சியில் எல்லோருமே தொண்டர்கள், எல்லோருமே தலைவர்கள் என்றார் நம் அண்ணா
அப்படியே தொண்டர்களாகிய நீங்கள் வெயிலில் அலைந்து கஷ்டபட்டு கட்சி வளர்ப்பதால் இனி வெயில் தலைவர்கள்”
தொண்டர்கள் எல்லாம் “வெயில்” தலைவர்கள்.
கலைஞர் இல்லாமல் நடக்கும் முதல் கூட்டம் இது என பலர் புலம்பிகொண்டிருக்கின்றான்
திமுக முதலில் தொடங்கும்பொழுது கலைஞரே அங்கு இல்லை
அந்த ராபின்சன் பூங்கா கூட்டத்தில் அண்ணாவும், சம்பத்தும் தான் பிராதானம்
கலைஞர் அப்பொழுது ஏதோ விவகாரம் தொடர்பாக “அய்யா ஆணயிடுகின்றார், அண்ணா ஊளையிடுகின்றார்” என சொல்லி சில சர்சைகள் வந்த காலம்
அதெல்லாம் கடந்துதான் கலைஞர் பின்பு திமுகவில் சங்கமித்தார்
அதன் பின் ஒரு பொதுகுழு கூட்டத்தில் சம்பத் தாக்கபட்டார், அதோடு விரட்டபட்டார்.
அண்ணா மறைந்தபின் ஒரு பொதுகுழு கலைஞரை தலைவராக்கியது
பின் ஒரு பொதுகுழு ராமசந்திரனை, வைகோவினை விரட்டியது
இன்று அதே பொதுகுழு இன்று ஸ்டாலினை செயல் தலைவர் என ஏற்றுகொண்டது, அதுவும் செயல் தலைவர் என்று மட்டும்தான்
ஆக பொதுகுழு என்பது யார் காலின் கீழ் புழு என்பது இப்பொழுது புரிந்திருக்கும்.
ஜெயலலிதாவிற்கு சக தொழிலாளி அல்லது சக முதலாளியாக அஞ்சலி செலுத்தினார்கள் சரி
பிடல் காஸ்ட்ரோவிற்கு எதற்கு அஞ்சலி?
அவர் கொள்கைகளுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
ஓஓ தன் தம்பியிடம் பொறுப்பினை ஒப்படைத்த காஸ்ட்ரோவினை இவர்களுக்கு மிக பிடித்திருக்கலாம்
எப்படியோ அவர்கள் நோபல் என்றால் இவர்கள் காஸ்ட்ரோ என்கின்றார்கள்
சர்வதேச தரத்திற்கு சென்றுவிட்டார்கள்
விரைவில் ஒபாமாவிற்கு பிரிவு உபச்சாரம் , டிரம்பிற்கு வெல்கம் பார்ட்டி என களமிறங்கினாலும் இறங்குவார்கள்