திராவிடத்தால் நல்ல படங்களை பெற்றோம் உறவே
தமிழ் சினிமாவில் முதன் முதலில் கிராமத்து காவியம் என சொல்லி சாதிய படங்களை எடுக்க தொடங்கியவர் பாரதிராஜா
அல்லி நகரத்து பால்பாண்டி பாரதிராஜா என மாறினாலும் அந்த ஜாதிபெருமை மட்டும் மாறவே இல்லை
(பாக்யராஜ் ஒரு சிலர் பாரதிராஜாவின் படங்களை போல கோயம்புத்தூர் கவுண்டர் படங்களை கொடுத்தாலும் அதில் கிராமத்து சாயல் இருந்ததே தவிர சாதி வெறி இல்லை
அக்கால கோவை பகுதி சினிமாக்காரர்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள்
இதில் சின்னப்ப தேவர் போன்றவர்கள் அப்படித்தான் அவர் தேவராக இருந்தாலும் சாதிய அடையாளங்களை ஒரு காலமும் காட்டவே இல்லை
சொந்த சாதிக்காரன் என்றாலும் சிவாஜி கணேசனை வைத்து ஒரு படம் கூட அவர் எடுத்துவைத்ததில்லை)
பாரதிராஜா போட்டு வைத்த பாதையில் யாரெல்லாமோ வந்தார்கள், ஏன் சைமன் கூடஅவர் பழைய படங்களில் முத்துராமலிங்க தேவரை மறக்காமல் காட்டிகொண்டிருந்தார்
அதே நேரம் இன்னொரு விஷயமும் இங்கு நடந்தது
அதுவரை தமிழ் சினிமாவின் பைனான்சியர்கள் எனப்படும் பெரும் பொறுப்பு செட்டி மார்வாடி என சிலர் கையில் இருந்தது
சசிகலாவின் எழுச்சிக்கு பின் கந்துவட்டி கும்பல் சினிமா உலகத்தை வளைத்தது
கவனித்து பாருங்கள் , இந்த மதுரை தேனி பகுதி கதைகள் அதிகம் வர ஆரம்பித்தது இந்த அன்புசெழியன் போன்றவர்கள் திரைப்படம் தயாரிக்க வந்தபின்பு தான், அதற்கு முன் நிலமை அப்படி அல்ல
ஆக இந்த தேவராட்டம் போன்ற படங்கள் வர முதல் காரணம் பாரதிராஜா, அடுத்த காரணம் சசிகலாவின் பினாமிகள்
அவ்வளவுதான் விஷயம்
ஜாதியினை வைத்து சினிமாவில் சம்பாதிக்கலாம் என வந்த இன்னொரு முகம் பா.ரஞ்சித்
முதலில் இந்த ரஞ்சித்திடம் இருந்தும், முத்தையாவிடமிருந்தும் தமிழ்சினிமாவினை காப்பாற்ற வேண்டும்
ஒரு விஷயத்தை கவனித்து பார்க்கலாம், 1960களிலும் சாதிவெறி இருந்தது ஆனால் திமுக போன்ற கட்சி பிரமுகர்களின் சினிமா பிடி ஜாதி வெறி படங்கள் வராமல் பார்த்து கொண்டது
சிவாஜிக்கும் ராமசந்திரனுக்கும் இன்னும் பலருக்கும் சாதி அடையாளமின்றி திராவிட கட்சி பிரபலங்கள் வராமல் பார்த்துகொண்டன
பல நல்ல கதையம்சம் உள்ள படங்கள் , சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு வந்தது அந்த பொற்காலத்தில்தான்
1990க்கு பின் அதாவது திராவிட சிந்தனையுள்ள அரசியல்வாதிகள் சினிமாவிலிருந்து வெளியேற, கலைஞரும் பல சிக்கல்களில் சிக்கிகொண்ட பின்பே இம்மாதிரி ஜாதிவெறி படங்கள் வரதொடங்கின
திராவிடம் செய்த நல்ல விஷயம் சுமார் 30 ஆண்டுகாலம் சினிமாவில் ஜாதி மதம் கலக்காமல் பார்த்துகொண்டது ஒன்றே
திராவிடத்தால் நல்ல படங்களை பெற்றோம் உறவே…