திராவிடத்தை சில இடங்களில் ஒதுக்கியதால் வீழ்ந்தோம்
பிரிட்டன் வெளியேறிய பின் சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையும்பொழுது இருந்த சர்ச்சையே இங்கு மொழிவாரி மாநிலங்கள் பிரியும் பொழுதும் வந்தது
அதில் குடகு மக்கள் கன்னடரோடு இணைய விரும்பவில்லை, காரணம் குடகு பகுதிக்கும் மைசூர் சமஸ்தானத்திற்கும் அக்காலத்தில் இருந்தே உரசல் உண்டு
இதனால் அவர்கள் தமிழகத்தோடு இணைய விரும்பினர், ஆனார் திருப்பதி கன்னியாகுமரி என பிசியாக இருந்த தமிழகம் அதனை கண்டுகொள்ளவில்லை
சென்னை மீட்பு போராட்டத்தினை மபொசி நடத்தினார், ஆதரவு பெரிதாக இல்லை ஆயினும் வென்றார். குமரியில் நேசமணி நடத்தினார், குமரி போராட்டத்திற்கு காமராஜரின் ஆசி இருந்தது
குடகினை யாரும் கண்டுகொள்ளவில்லை, பெரியார் மட்டும் சொன்னார்
குடகில் இருந்தே காவேரி வரும், இது தமிழருக்கு முக்கியமான பகுதி. இதை இணைக்கவேண்டும் என சொல்லிபார்த்தார்
பெரியார் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக அது அலட்சியம் செய்யபட்டது
கன்னியாகுமரி முற்போகம் விளையும் என கணக்கிட்டவர்கள் தஞ்சையின் நெல்லுக்கு ஆதாரமான குடகினை மறந்தது விசித்திரம்
ஆழ யோசித்து தீர்க்கமாக சொன்ன பெரியார் சொற்படி கேட்டிருந்தால் இன்று காவேரியில் இவ்வளவு பெரும் சிக்கல் வந்திருக்காது
திராவிடத்தை சில இடங்களில் ஒதுக்கியதாலும் வீழ்ந்தோம்