திராவிடம் எவ்வளவு விஞ்ஞான களஞ்சியம்?
எவ்வளவு பெரிய உண்மை வரலாற்றில் மறைக்கபட்டிருக்கின்றது..
திராவிடம் எவ்வளவு விஞ்ஞான களஞ்சியம்?
பெரியார் எவ்வளவு பெரும் விஞ்ஞானி, ஈரோட்டில் பெரியர் 1900களிலே ராக்கெட் விட்டு ஆடியிருக்கின்றார்.
அந்த மாபெரும் கண்டுபிடிப்பினை பிராமணர் அலட்சியம் செய்ததுதான் அவரின் பிராமண வெறுப்புக்கு காரணம்..
1903ல் ரைட் பிரதர்ஸ் விமானம் கண்டுபிடிக்கும் முன்பே விமானம் கண்டறிந்தது பெரியார் & கோ
படுபாவி வெள்ளைக்காரன் அந்த நுட்பத்தை விமானத்தை ராக்கெட்டை கடத்திகொண்டு ஓடிவிட்டான்
பெரியார் வைத்திருந்த விமான நுட்பத்தை வெள்ளையனுக்கு திருட்டுதனமாக கொடுத்தது பார்ப்பான், அது பார்பானிய சதி
அந்த நன்றிக்கே வெள்ளையன் பிராமணனுக்கு மட்டும் ஆங்கிலம் சொல்லிகொடுத்து அரசு பணியில் வைத்திருந்தான்
அதன் பின் பெரியாரோடு அண்ணா வந்தார் , அவர் மாபெரும் ஏவுகனை விஞ்ஞானி
இருவரும் உலகின் முதல் ஏவுகனையினை காஞ்சிபுரத்தில் செய்தார்கள்
அந்த நேரம் படுபாவி ஹிட்லர் வந்து அந்த நுட்பத்தை பிராமணன் மூலம் கடத்தி சென்று வரலாற்றின் முதல் ராக்கெட் நான் செய்தது என உலகை மிரட்டினான்
அத்தோடு விட்டதா திராவிடம்?
அசையவில்லையே, அது முயற்சியினை தொடர்ந்தது, அண்டவெளியில் திராவிட கிரகம் படைக்கும் ஆவலில் இருந்தது
அண்ணாவோடு மாபெரும் அணுசக்தி மற்றும் ஏவுகனை விஞ்ஞானி கருணாநிதி என்பவர் சேர்ந்தார், அவர் வெளிபார்வைக்கு எழுத்தாளர் என பேனாவோடு சுற்றினார், ஆனால் அதில் இருந்தது செயற்கைகோள் ரிமோட்
ஆம் அவரும் அண்ணாவும் கோபாலபுரத்திலும் பெரியார் திடலிலும் 1950களில் செயற்கைகோள் செய்தார்கள், வான்வெளியில் திராவிட கோள் படைக்கும் ஆய்வு அது
அந்த விஞ்ஞானிகள் கூட்டத்தில் இதர மாபெரும் வானியல் மேதைகள், விஞ்ஞான கலாநிதிகளான நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன் எல்லோரும் உண்டு
இவர்கள்தான் ராக்கெட்டின் பூஸ்டர் உட்பட பலவற்றை வடிவமைத்தவர்கள்
அவர்களிடம் இருந்து அனுபவ கல்வியினை கற்றவர் இன்றைய பிரபல விஞ்ஞானியும் அடிக்கடி நாசாவுக்கும் மாஸ்கோவுக்கும் ராக்கெட் நுட்பங்களை சரிபார்க்க செல்லும் அந்த வீரமணி.
இதில் இன்னொரு பிரதான விஞ்ஞானி உண்டு, அவர் எம்ஜி ராம சந்திரன்.
மின்னலில் இருந்து சக்தியினை பிரிக்க முடியும் என மாபெரும் கண்டுபிடிப்பினை அவர்தான் நிகழ்த்தினார் அதை கடத்த நினைத்த அசோகன் எனும் அந்நாளைய தாவூத் இப்ராஹிமை எல்லாம் பந்தாடி ரகசியம் காத்தார்
கிரையோஜெனிக் எந்திரம் அவர் வடிவமைத்து கொடுத்தது.
இப்படி எல்லோரும் உழைத்து திராவிட செயற்கை கிரகம் படைத்து விண்ணில் நிறுத்தும் நேரத்தில்தான் படுபாவி சோவியத் யூனியன் உள்ளே வந்தது
மொத்த நுட்பத்தையும் பெரியார் சோவியத்துக்கு சென்றபொழுது மிரட்டி வாங்கி கொண்டது போதா குறைக்கு அண்ணாவினை கடத்தி சென்று ஸ்புட்னிக், லூனார் என என்னவெல்லாமோ செய்தது
எல்லாம் சோவியத் உளவுதுறை கேஜிபியின் விளையாட்டு, எங்கு எதை கடத்தி செல்ல வேண்டுமோ அதை அட்டகாசமாக செய்தார்கள் , துணை போனது பார்பானிய சமூகம்
உலகின் முதலில் விண்வெளிக்கு சென்றிருக்க வேண்டிய முரசொலிமாறனுக்கு பதிலாக யூரி ககாரின் சென்றார்
முதல் விண்வெளி மங்கையாக வந்திருக்க வேண்டிய மணியம்மைக்கு பதிலாக ரஷ்ய தெரஸ்கோவா சென்றார், எல்லாம் பிராமண சதி.
விடுமா அமெரிக்கா?
அது டாக்டர் மில்லரை அனுப்பி அண்ணாதுரைக்கு சிகிச்சை என ஒரு பக்கமும், ஏல் பல்கலைகழகம் மூலம் டாக்டர் பட்டம்ம் கொடுத்து அந்த நுட்பத்தை வாங்கியது
அதன் பின்பே நாசா உருவானது, முதலில் அது நாதி அதாவது நாங்கள் திராவிடர்கள் என்றுதான் பெயர் இருந்ததாம், பின்பு நாங்கள் சாமான்யர்கள் என மாற்றிகொண்டார்களாம்
இங்கே முதலில் நிலவுக்கு செல்ல பட்டுகோட்டை அழகிரியினைத்தான் யார்படுத்தினார்கள், ஆனால் நுட்பத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் களவாடியதால் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்றுவிட்டார்
இல்லாவிட்டால் பட்டுகோட்டை அழகிரியோ இல்லை முக ஸ்டாலினோதான் முதலில் நிலாவுக்கு சென்றிருப்பார்கள்
ஆக அமெரிக்காவும் ரஷ்யாவும் திராவிட பெரியார் சீடர்களின் ராக்கெட்டை திருடி பெயர்பெற்றிருகின்றன
இன்று இந்தியா ராக்கெட் செலுத்தவும் திராவிடமே காரணம்
(உலகில் ராக்கெட் நுட்பம் வந்தது 1950க்கு பின் அதுவும் 1960களில்தான் அது வேகமாக வளர்ந்தது
சுதந்திர இந்தியாவில் கல்வி வளர்ந்து இன்று பெண்களும் விஞ்ஞானியாகிவிட்டார்கள்
இதில் பெரியாரும் அண்ணாவும் எங்கிருந்து வந்தார்கள்?
பகுத்தறிவும் திராவிட மானமும் உணர்வும் உள்ளவன் வரலாற்றில் எப்பொழுதும் ராக்கெட் விடலாம் போல..)
