திராவிடம் தமிழீழம் Vs தமிழக, இலங்கை இந்துக்கள்

இந்த சுகி.சிவம், நெல்லை கண்ணன் போன்றோரெல்லாம் அதிதீவிர பார்ப்பன வெறுப்பை கொண்டிருப்பதும், அந்த வெறுப்பால் தமிழக இந்து வேறு பார்ப்பனிய இந்துமதம் வேறு என சொல்வதெல்லாம் ஏன்? உண்மையிலே பிராமணர்கள் இந்துமதத்தில் அப்படி செய்தார்களா? தமிழக இந்துவாழ்வில் அப்படி குழப்பினார்களா விளக்க முடியுமா? என கேட்டால் எளிதில் சொல்லலாம்

இந்த விவகாரமெல்லாம் கொஞ்சம் நீண்டவை, கொஞ்சம் ஆழமாக பார்க்காமல் விளங்காது

இங்கு ஆதிகாலம் கொஞ்சம் குழப்பமானது, மிக தொன்மையான வரலாறு கொண்டது, ஆனால் அந்த வரலாற்றிலெல்லாம் பிராமணர்கள் இருந்துதான் வந்திருக்கின்றார்கள், அவர்களால் குழப்பம் ஏதும் இருந்ததாக தெரியவில்லை

இங்கு தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியரே ஒட்டக கன்று பற்றி சொல்கின்றார், அதாவது தமிழகத்தில் ஒட்டகம் இல்லா நிலையில் அவரின் பரந்த அறிவு அப்படி எழுத வைத்திருக்கலாம், அப்படி பரந்த அறிவுடன் இந்துக்களாக இருந்த இனம் தமிழினம் அதனில் மாற்றுகருத்து இல்லை

இங்கு சமஸ்கிருதமும் தமிழும் கொண்டாடபட்டிருக்கின்றன, வழிபாட்டு மொழி என சொல்லபடும் சமஸ்கிருதம் கூட முழு சமஸ்கிருதமாக இல்லை, அதனில் உச்சரிக்கபடும் சில சொற்கள் மந்த்ர வழிபாட்டுக்கே அன்றி முழு சமஸ்கிருதம் அல்ல‌

சமஸ்கிருதம் ஒரு இணைப்பு மொழியாக பாரதம் முழுக்க இருந்தது, அது இந்திய மொழிகளின் ஞானங்களை செல்வங்களை இணைக்கும் பொதுமொழியாகத்தான் இருந்தது

பாரதம் முழுக்க இந்து ஆலயங்களும் சமஸ்கிருதமும் அந்த இணைப்பை செய்தன மற்றபடி பிராந்திய மொழிகள் அந்தந்த பக்கம் செல்வாக்கோடு இருந்தது

காளிதாசனின் பாதிப்பு கம்பனிலும் மீராவின் பாதிப்பு ஆண்டாளிலும் இருந்தது இப்படித்தான், சாணக்கியனின் வரிகளில் குறளும் இன்னும் பலவற்றின் சாயலும் இருப்பதும் இப்படித்தான்

இந்த இந்து தமிழினம் 12ம் நூற்றாண்டு வரை சரியாக இருந்தது, 12ம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த ஆப்கானிய படையெடுப்பில் எல்லாமே சரிந்தது

பின் தெலுங்கு நாயக்க மன்னர்கள் தமிழகத்தை மீட்டபொழுது அழிந்த ஆலயங்களை மறு நிர்மாணம் செய்தனர், அப்பொழுது பிராமணர்கள் மூலம் பல பூஜைகள் நடந்தன அந்த பூஜைகளை இந்துக்களின் முறைபடியே நாயக்க மன்னர்களும் செய்தனர் தமிழக இந்துக்களும் ஏற்றும் கொண்டனர்

மலையாளம், கன்னடம், தெலுங்கு பகுதி போல தமிழகமும் இயல்பாகவே இருந்தது

சிக்கல் 18ம் நூற்றாண்டில் வெள்ளையன் ஆட்சி இங்கு வலுத்த பொழுது வந்தது, 15ம் நூற்றாண்டிலே போர்ச்சுக்கீசியர் தென் தமிழகத்தில் வலுவாக கால் ஊன்றினார்கள்

கோவா பக்கம் இந்து மராட்டியரும், மலையாள பக்கம் இந்து மன்னர்களும் இருந்ததால் அவர்களால் கால் ஊன்ற முடியவில்லை, அவர்கள் இலக்கு கடற்கொள்ளையால் பாதிக்கபட்ட தென்னக தமிழக பகுதிகளாகவும் இலங்கையாகவும் மாறிற்று

இந்த இரு கடற்கரையிலும், அதாவது தமிழக இலங்கை கடற்கரைகளிலே 15ம் நூற்றாண்டிலே பெரும் பலத்துடன் போர்ச்சுகீசியர் கால் வைத்தாலும் உள் நுழையமுடியாதபடி அரசுகள் இருந்ததால் எல்லையிலே தங்களை நிறுத்தினர், கடும் மதமாற்றம் நிகழ்ந்தது

கோவா பக்கம் பிராமணர்களை குறிவைத்து பொய்களை சொன்ன கும்பல், இலங்கையில் பிராமண ஆதிக்கம் இல்லாததால் அப்படியான பொய்களை பரப்பமுடியாமல் திகைத்து என்னவெல்லாமோ சொல்லி குழப்பியது

இங்கே பிராமணர்கள்தான் இந்துமதத்தில் புகுந்தார்கள் அவர்கள் வந்தேறிகள் என சொன்ன கும்பலால் இலங்கையில் அப்படி செய்யமுடியவில்லை திணறினார்கள் அங்கிருக்கும் சாதிக்குள்ளும் புகுந்தார்கள் ஆனால் பிராமணர் அதிகமில்லை என்பதால் அங்கிருக்கும் உயர்சாதியினை குறிவைத்தார்கள்

இப்படி இரு பக்கமும் பொய்களை பரப்பி மக்களை குழப்பி மதமாற்றமும் போர்ச்சுகல் அரசும் நடத்திகொண்டிருந்த காலங்களில் மொகலாய மராட்டிய பெரும் யுத்தத்தில் பிரிட்டிசார் புகுந்து ஆட்சியினை இந்தியாவில் கைபற்றினார்கள், அந்த பலத்தில் இலங்கையிலும் கைபற்றினார்கள்

ஒரு அரசும் மக்களும் வேறு வேறு மதமாய் இருப்பது கொஞ்சம் சிக்கலானது, அரசினர் பின்பற்றும் மதத்துக்கு மக்களை மாற்றுவது ஆட்சி நிலைக்க வழி

இதனால் மதமாற்றம் எல்லா காலத்திலும், புத்த சமண இஸ்லாமிய காலங்களில் நடந்ததை போல கிறிஸ்தவ ஆட்சி காலத்திலும் இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்தது

கிறிஸ்தவ மிஷனரிகளால் இந்து வாழ்வியலை மக்கள் மனதை வெல்லமுடியவில்லை, இயல்பானதும் வாழ்வில் ஒட்டிவருவதும் கலாச்சாரமானதுமான அந்த மதத்தை ஒழிக்கமுடியவில்லை

இப்படி மிஷனரிகள் சிந்திக்கும்பொழுதே கிறிஸ்தவ ஆட்சியாளர்களும் ஆட்சி நிலைக்க பிரிவினையும் குழப்பமும் அவசியம் என கருதினார்கள்

வடக்கே இந்தியாவில் இந்து இஸ்லாம் உரசல் இருந்த நிலையில் தமிழகத்தில் அப்படி ஏதுமில்லை, இதனால் தமிழக இந்துக்களை திசை திருப்ப பிராமணர்கள் மேல் குறிவைத்தார்கள்

இந்த புள்ளிக்கு தமிழக சில சாதிகளை பயன்படுத்திகொண்டார்கள், அவை ஏற்கனவே தெலுங்கு மன்னர்களின் அதிகாரத்தாலும் தெலுங்கு மக்கள் மேலான வாழ்வாலும் பாதிக்கபட்டையாக இருந்தன‌

அவைகளை எளிதாக பிராமணருக்கு எதிராக திருப்பிவிட்டார்கள், அரசு பிரிட்டிஷ் அரசு ஊடகம் பிரிட்டிஷ் ஊடகம் எனும் நிலையில் , உளவுதுறை அதிகாரிகள் காவலர்கள் ஆட்சி மேலிடம் என எங்கும் கிறிஸ்தவம் பரவியிருந்த நிலையில் அது எளிதாயிற்று

அதிகாரம் அவர்களிடம் இருந்த நிலையில் கல்வி, வேலை என கிறிஸ்தவர்களுக்கு சலுகை காட்ட வரலாற்றின் எல்லா துயரங்களுக்கும் பிராமணன் காரணம் என கட்டுகதை வலுத்தது

சில வருட வேலை கல்விக்காக பல்லாண்டு கால பாரம்பரியம் ஆப்கன் படையெடுப்பு போர்களையும் தாண்டி பேசபட்டது

இப்படி தமிழகத்தில் பிராமண வெறுப்பு பலமாக விதைக்கபட்டது, அப்பொழுதுதான் தமிழர் இந்து வேறு, பிராமண இந்துவேறு என்ற பொய்களெல்லாம் பரப்பட்டன‌

அக்கால் ஓலைசுவடியில் பிராமணன் ஒரு வரி எழுதிவிடமுடியாது, கல்வெட்டில் இடையே பிராமணன் ஒரு வரி செதுக்கமுடியாது எனும் நிலையிலும் எல்லாம் அவனாலே மாறிற்று என திசைதிருப்பபட்டது

பல லட்சம் ஆண்டு தொன்மையானதும் தனக்கு தலைவனோ அரசனோ இல்லா இந்துமதம் பொய்கள் முன் தடுமாறியது

தாய்க்கும் தந்தைக்கும் பிறந்த மகனை நோக்கி ஆதாரம் எங்கே என கேட்டால் அவன் எப்படி விழ்ப்பானோ அப்படி இந்து விழித்தான், ஆதாரம் இல்லை அல்லவா அதனால் இவன் தந்தை இல்லை என சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது இந்து நிலை

தமிழக இந்துக்களின் நிலை இப்படியானது, பிராமணரே எல்லாவற்றுக்கும் காரணம் தமிழர் மெய்யியல் வழிபாடு வேறு ஆரிய திரிபு வேறு என்ற கதை வந்தது இப்படித்தான்

அதே நேரம் அரசனை அண்டி வாழ்ந்த பிராமண இனம், புதிய அரசனாக வந்த பிரிட்டிசார் மொழியினை படித்து அரசில் பதவி பெற்றதும் நிஜம், அந்த பதவி சும்மா வரவில்லை அவர்கள் கடினபட்டு கற்ற கல்வியில் வந்தது

அந்த கல்வி எல்லோருக்கும் பொதுவாக இருந்தும் காமாராஜர் காலத்திலே சோறுபோட்டால்தான் படிப்பேன் என தமிழன் இருந்த நிலையில் அதற்கு முன் கற்க ஆளில்லாமல் இருந்தது, பிராமண இனம் சொத்து இல்லாதது சொந்த தொழிலோ நிறுவணமோ இல்லாதது, அதனால் கல்வி ஒன்றே வழி என படித்தது

(எந்த பெரும் பணக்கார மடமும் பிராமணனிடம் இல்லை, எந்த கோவில் சொத்தையும் பிராமணன் ஆளவில்லை, சிலைகளை கடத்தவுமில்லை

அறநிலையதுறை என்றும் மடாதிபதிகள் என்றும் உருவாக்கபட்ட காலத்தில் பிராமணர்கள் இல்லை, மடங்கள் ஆதீனங்களெல்லாம் பிராமணர்கள் இல்லை

அதற்காக பிராமணர் சொல்லும் சிவனும் காசியில் இருக்கும் சிவனும் மடாதிபதிகள் வணங்கும் சிவனும் வேறு என்பது முட்டாள்தனம் )

நேர்மையும், ஊழலற்ற நிர்வாகமும் கடமையில் தீவிரமும் பேராசை இல்லா அந்த மக்களை வெள்ளையன் தன் நிர்வாகியாக கொண்டான் அப்படியே கீழே இருப்பவர்களிடம் அவர்களை காட்டி அரசியல் குழப்பமும் செய்து தான் இல்லாவிட்டால் எதுவுமில்லை என காட்டியும் கொண்டான்

இங்கே பிராமண நிலை இப்படி இருக்க இலங்கை நிலை எப்படி இருந்தது? அதுதான் இப்பொழுது விஷயம்

அங்கே பிராமணர் அதிகம் இல்லா நிலையிலும் அவர்கள் இந்துக்களாக இருந்தார்கள், வேதமும் ஆகமும் அவர்களுக்கு வாழ்வாக இருந்தது, காசியும் காஞ்சியும் கயிலாயமும் அவர்கள் கனவாக இருந்தது, திருப்பதியும் திருசெந்தூரும் பிடித்தமான தலமாக இருந்தது

ஆச்சரியமாக சிங்கள இந்துக்களும் இப்படித்தான் இருந்தார்கள்

அங்கெல்லாம் பிராமணர் இல்லை, தமிழர் வாழ்வில் புகுந்து ஆரியத்தை புகுத்தினார்கள் என்ற சர்ச்சை இல்லை, அங்கும் விநாயகரும் முருகனும் சிவனும் அம்மனும் பெரும் தெய்வமாக இருந்தார்கள், கண்ணகியே பார்வதியின் அம்சமாக கொண்டாடபட்டாள்

காசி போல இலங்கையும் சிவ பூமியாய் இருந்தது, அது இயல்பாக இருந்தது பிராமணர் மட்டும் இந்துமதம் அல்ல அது வாழ்வியல் முறை என அது சைவம் எனும் பெயரில் கம்பீரமாக இருந்தது

அங்கும் கால்பதித்த வெள்ளையனுக்கு எஸ்டேட் கம்பெனிகளிலும் நிர்வாகத்திலும் பணிசெய்ய படித்தவர்கள் தேவைபட்டனர், அதை யாழ்பாணத்து உயர்சாதி கொண்டு நிரப்பினான்

தமிழகத்தில் பிராமணர் இருந்த இடத்தில் அங்கு யாழ்பாண உயர்சாதி தமிழர்கள் இருந்தார்கள்

இங்கு பிராமணனுக்கும் மற்ற சாதிகளுக்கும் இடையே உருவாக்கிய பிளவினை அங்கும் செய்தான் வெள்ளையன்

அது யாழ்பாண தமிழருக்கும் மற்ற தமிழருக்குமான இடைவெளியாக மாறி ஒரு கட்டத்தில் தமிழக தமிழர்களுக்கும் யாழ்பாண தமிழருக்குமான சர்ச்சையாக வெடித்தது

இலங்கையின் அதிகாரவர்க்கமாக ஈழதமிழினம் இருந்தது, வெள்ளையன் ஆட்சியில் இருந்தது ஆனால் சுத்த சைவமதமாக பெரும்பான்மையில் இருந்தது

அந்த சிக்கல்தான் பின் பலவாறு வெடித்து 1980களில் ஆயுதபோராக மாறி எப்படியெல்லாமோ முடிந்தது

சரி விஷயத்துக்கு வரலாம்

இங்கே தமிழன் வாழ்வியலை பிராமணன் குழப்பினான் என சுகிசிவம் போன்றோர் சொன்னால் இலங்கையில் தமிழன் இன்னும் வட இந்திய வழிபாடு ஒரே இந்து வழிபாட்டை கொண்டிருக்கின்றானே அவனை குழப்பியது யார்ர்?

இங்கே பிராமணன் தமிழனை ஏமாற்றி எல்லா பதவியும் பெற்றான் என்றால் இலங்கையில் ஈழதமிழன் பெரும் பதவியில் அமர்ந்தது எப்படி?

இங்கே முருகன், விநாயகன், சிவன், நாயனார் என பிராமணன் நிறுத்தினான் என்றால் இலங்கையில் இவர்களையெல்லாம் வணங்க சொல்லி செய்தவன் எந்த பிராமணன்? அதனால் அவன் அடைந்த நன்மை என்ன?

இப்படி எல்லாம் சிந்தித்தால் உண்மை விளங்கும்

ஆம், கடல் கடந்த அந்த இனம் தமிழன் இயல்பால் இந்து அவன் யாரும் இடையில் வந்து குழப்பாமல் ஆதியில் இருந்து அப்படியே தொடரும் இந்து என்பதை அழுத்தமாக சொல்கின்றது

மிஷனரி கும்பல் தமிழகத்தில் பிராமணன் மேல் சாத்திய பழி எல்லாம் இலங்கை இந்துக்களிடையே சொல்லமுடியாமல் தலைகுனிந்து நிற்பதை காட்டமுடிகின்றது

தமிழனை பிராமணன் ஏமாற்றினான் என்பதை சொன்னால் இலங்கை தமிழ் இந்துக்களை எந்த பாப்பான் ஏமாற்றினான்? தமிழனே தமிழனை ஏமாற்றினானா என குழம்பி நிற்கின்றது அந்த பொய்

தமிழக திராவிடமும், இலங்கை தமிழீழமும் மிஷனரிகளாலும் ஆங்கிலேய எச்சங்களாலும் உருவாக்கபட்ட பிம்பம் என்பதை எளிதாக புரிந்து கொள்ளமுடிகின்றது

திராவிடம் இங்கு இந்துக்களை பிராமணை காட்டி குழப்பியது போல அங்கு தமிழ் உணர்வு சிங்களனை காட்டி ரத்தபூமியாக்கியது

தாங்கள் ஒரு இந்து என தமிழக தமிழனும் ஈழதமிழனும் நினைத்திருந்தால் வரலாறு மாறியிருக்கும்

இன்று தமீழீழம் எனும் மிஷனரி சதி முறிந்துவிட்டது, அவர்கள் தாங்கள் சைவர்கள் என்பதில் சரியாக இருக்கின்றார்கள், உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்

இலங்கை ஜெயராஜ் உள்ளிட்ட எத்தனையோ சிவனடியார்களும் ஆன்றோர்களும், 18ம் நூற்றாண்டுக்கு முன் இருந்த உண்மை நிலையினை காட்டி மிஷனரி கால குழப்பங்களை காட்டி கொண்டிருக்கின்றார்கள்

சுகி சிவம் போன்றோர் மேல் எமக்கு வருத்தமில்லை, உண்மையில் அவர்களும் அவர்களை அறியாமலே ஏமாற்றபட்டார்கள், அந்த சதியினை உணர மறுத்து காசுக்காக திராவிட கும்பலில் கும்மியடிக்கின்றார்கள் எனும் பரிதாபமே மிஞ்சும்

திராவிடம் தமிழ் என தென்னிந்தியா முழுக்க கைகாட்டிய மாய கூட்டம், வெறும் 35கிமி தொலைவில் இருந்த யாழ்பாணத்தை திராவிடத்தோடு சேர்க்காதது ஏன்?

இவ்வளவுக்கும் சுத்த தமிழ் பேசிய பூமி

இலங்கையிலும் சாதி இருந்தது, ஆனால் இங்கே உருவாக்கபட்ட ராம்சாமி பிம்பம், அங்கே உருவாகாமல் எடுபடாமல் போனது எப்படி?

அவர்கள் சுத்தமான இந்துக்களாக இருந்தார்கள், அதனால் திராவிட கூட்டம் அவர்களை கண்டு அஞ்சியது தமிழ் பேசினாலும் ஒதுக்கி வைத்தது

இப்பொழுது தமிழகத்தில் நிலவும் பலத்த பொய்யான சுமார் 500 வருட கால பொய்யான பிராமணன் தமிழரை ஏமாற்றி வட இந்திய கடவுளை நிறுவினான், பிராமணன் தமிழக ஆன்மீகத்தை குழப்பினான் என்பதற்கெல்லாம் கடல் கடந்த தீவில் இருந்து அப்படியானால் எங்களை எந்த பிராமணன் இந்துவாக்கினான்? பிராமண சூது ஏன் இங்கு இல்லை என அவர்கள் கேட்க தொடங்கியிருப்பது நல்ல விஷயம்

கடல் கடந்த அந்த தீவு ஆப்கானிய அழிவுகளில் சிக்காததும், ஈழ மன்னர்களும் சிங்கள மன்னர்களும் ஓரளவு தாக்குபிடித்ததும், வெள்ளையன் பிராமணர் அல்லா இந்துக்களை தமிழர்களை கொண்டே குழப்பியதும் அங்கு இந்துமதத்தை அதன் பாரம்பரியத்தை தாங்கி நிற்கின்றன‌

தமிழக இந்துக்களுக்கான விடிவு இலங்கை இந்துக்களிடமே இருக்கின்றது

ஏன் தமிழக இந்துக்களும் இலங்கை இந்துக்களும் மத அடிப்படையில் ஒன்றுபடாமல் , மொழி வெறி அடிப்படையிலே இருக்க வேண்டும் என திராவிடமும் இலங்கை அடாவாடி கோஷ்டிகளும் விரும்பின என்றால் அது நடந்தால் இங்கு திராவிட பொய்கள் வீழும் என்பதுதான் விஷயம்

இப்பொழுது புலி எனும் மிஷனரி முகம் சிதைந்த நிலையில், இந்திய பாஜக சில இந்து ஆதரவு விஷயங்களை ஈழத்தில் செய்யும் நிலையில் இலங்கை இந்துக்களின் மிக சுத்தமான சைவ பற்றில் இருந்து தமிழகத்திற்கு வெளிச்சம் வீசுகின்றது

அந்த வெளிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழக திராவிட பிம்பமும், அவர்களை அண்டிவாழும் இந்து எனும் பெயரில் மோசடிகளை இந்து துவேஷங்களை செய்யும் கும்பலும் காணாமல் போகும்

தமிழக இந்துக்கள் விழித்துகொள்ள ஒரே வழி ஈழ இந்துக்களை பின்பற்றுவது

தமிழகத்தில் கோவில் விழாக்களில் உபதேசங்களில் தமிழக டிவிக்களில் இலங்கை ஜெயராஜ் போன்ற உபன்யாசகர்களையே வரவழைத்து பேசவைக்க வேண்டும்

தமிழகம் முழுக்க ஈழத்து சிறந்த சைவ சான்றோர்களை அழைத்து பேசவைக்க, எழுதவைக்க வேண்டும்

தமிழக இந்து அமைப்புக்கள் அதை செய்யும் என எதிபார்ப்போம்

அவர்கள் மூலமே இங்கு திராவிட பொய்களை பிம்பங்களை உடைக்கமுடியும், காலம் திட்டமிட்டுத்தான் அந்த சைவர்களை கடல் கடந்து காத்திருக்கின்றது

நல்லூர் முருகனும் திர்கோணமலை சிவனுமே இனி தமிழகத்துக்கு வழிகாட்டுவார்கள்

இலங்கை தமிழர் அரசியலில் இந்திய தமிழக திராவிடவாதிகள் தலையிட உரிமை உண்டென்றால், இந்திய தமிழக இந்துக்களுக்கு போதிக்கும் எல்லா உரிமையும் இலங்கைவாழ் சைவ தமிழர்களுக்கும் உண்டு