திராவிட இயக்கத்தின் மாபெரும் சாதனை

நாமும் கம்பனையும் அவனின் சுந்தர காண்டத்தையும் படித்திருக்கின்றோம்

வால்மீகியினையும் புரட்டியிருக்கின்றோம்

இப்படி ஒரு காட்சி எங்குமே இல்லை, இருந்திருந்தால் அன்றே அண்ணாவும் அவரை விட கலைஞரும் அக்காட்சியினை கிழித்தெறிந்திருப்பார்கள்

அன்று நெருப்பாய் இருந்த திராவிட கொழுந்துகளுக்கு இது பெட்ரோலாய் கிடைத்திருக்கும்

அண்ணா தன் புகழ்பெற்ற “கம்ப ரசம்” பகுதியில் கூட இப்படி எழுதவில்லை என்பது குறிப்பிடதக்கது

அப்படி ஒரு வரி ராமாயணத்தில் இல்லை மாறாக கம்ப ராமாயணம் அந்த சுந்தர காண்ட காட்சியினை சொல்கின்றது இப்படி

அசோகவனத்தில் சீதை தற்கொலை செய்ய செல்கின்றாள், சரியான நேரத்தில் வந்த அனுமன் அவளை தடுக்கின்றான், அவன் ராவணின் ஆள் என அஞ்சும் சீதை அவனிடம் பல கேள்விகளை கேட்டு இறுதியில் நம்புகின்றாள்

அந்த பல பக்கம் வரும் பாடல்களில் எங்குமே இப்படி வரிகள் இல்லை, இல்லவே இல்லை

தான் நலமாக இருப்பதை ராமனிடம் தெரிவிக்க சொல்லி தன் சூடாமணி ஒன்றை கொடுக்கின்றாள், அது இப்பாடலில் வரும்

‘சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள்
ஆடையின்கண் இருந்தது பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை! நல்லோய்! கோடி! ‘என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள். “

“சிறந்தவனே! கடல் தாண்டி நாடி வந்து, (போவதற்கிருந்த) என் இன்னுயிரை வழங்கினாய். என் கண்மணி போன்ற இந்தச் சூடாமணி, நீண்ட நாட்களாக என்னுடைய ஆடையில் பொதிந்து வைக்கப் பெற்றது.

எனது அன்பின் பேரடையாளமாக இதை இராமனுக்கு எடுத்துச் செல்வாய்” என்று கூறி உண்மையான புகழைக் கொண்ட சீதை சூடாமணியை அனுமனிடம் வழங்கினாள்.

சூடாமணியினை கண்ட ராமன் கண்ணீர் விட்டு அழுது, தன் மோதிரத்தை அனுமனிடம் கொடுத்துவிடுகின்றான், அதை இப்பாடல் சொல்லும்

“அறிவுறத் தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும்,
செறிவுற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்;
இறுதியின் உயிர்தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது – எந்தாய் ..”

“எம் தலைவனே! பிராட்டி அறியும்படி அடியேன் தெளிவாகச் சொன்ன அடையாளங்களை எல்லாம் பொருத்தமாகப் பார்த்து, அடியேன் மனத்தில் குழப்பம் ஏதும் இல்லை என்பதை நன்றாக யோசித்து, அழகிய (உனது)
மோதிரத்தை நான் காட்ட, பார்த்தாள்.

அந்த மோதிரம், முடிவுக் காலத்திலும் உயிர் போகாதபடி நிலை நிறுத்திக் காக்கின்ற சஞ்சீவினி என்ற மருந்தைப் போன்று அவளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தது”

இதுதான் ராமாயணம் சொல்லும் காட்சி, சீதையும் அனுமனும் சந்திக்கும் காட்சி

இதில் எங்கிருந்து இவர்கள் சொல்லும் வரி வந்ததென தெரியவில்லை

உண்மை இப்படி இருக்கலாம், இவர்கள் புத்தி அப்படித்தான் போகும், அதனால் சொல்லலாம்

சுந்தர “காண்டம்” என்றவுடன் , அந்த “காண்டம்” என்பதை அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் அந்த காண்டமாக நினைத்திருக்கலாம்

உடனே ஆண்குறி அது இது என நினைவுக்கு வந்து இவர்களாக ஒரு “கம்பு” ராமாயணம் எழுதியிருக்கலாம்

அதில் இப்படி பட்ட விளக்கத்தை, திராவிட கம்பு கோஷ்டிகள் எழுதியிருக்கலாம்

பாவம் அவர்கள்

சிவலிங்கத்தை பார்த்தால் அது ஆண்குறி என அலறுகின்றார்கள்

ராமாயணத்தை படித்துவிட்டு அய்யய்யோ ராமனின் ஆண்குறி என அலறுகின்றார்கள்

இன்னும் யார் யாரின் ஆய்வில் இறங்கி அடுத்த கம்பு ராமாயணம் எழுத‌ போகின்றார்களோ இந்த கம்பு கோஷ்டிகள் தெரியவில்லை

ஆனால் இந்த பெரியாரின் கம்பு பற்றி ஏன் ஒரு பயலும் ஆய்வு நடத்தவில்லை என்பதுதான் தெரியவில்லை..

இவனுகளும் இவனுக ஆராய்ச்சீசீ யும்..

திராவிட நாடு அடைந்து தமிழரை வாழ்வாங்கு வாழவைக்க எண்ணிய கூட்டம், அதுவும் நடக்காத பட்சத்தில் மாநில சுயாட்சி வாங்கி தமிழனை வாழவைக்க கிளம்பிய தன்மான கூட்டம் ராமனின் ஆண்குறியினை அளக்க சென்றிருப்பது காலத்தின் கோலம்

திராவிட இயக்கத்தின் மாபெரும் சாதனை ராமனின் ஆண்குறியினை அளந்தது…