திராவிட எழுச்சி குரலால் காமராஜ் முதல்வரானார்…
திராவிடம் 50 என பேசகிளம்புவனெல்லாம் உருப்படியாக பேசவேண்டிய விஷயங்களை பேசுவதே இல்லை
அதாகபட்டது காங்கிரசின் உட்கட்சி பூசல் அக்காலமே இருந்தது, ராஜாஜி ஒரு கோஷ்டி, சத்தியமூர்த்தி ஒரு கோஷ்டி, சத்தியமூர்த்தியின் சீடர்தான் காமராஜர்.
இது சுதந்திரம் பெற்றபின்னரும் தொடர்ந்தது..
இதில் ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்துவிட்டு, பிரிக்கபடாத சென்னை மாகாண முதல்வராக அமர்ந்ததில் பலருக்கு விருப்பமில்லை
இந்நேரம்தான் எதனை பிடித்து அரசியல் செய்யலாம் என திணவெடுத்திருந்த , வாத திறன் மிக்க திமுகவிற்கு ராஜாஜியின் கல்வி திட்டம், லட்டு போல கிடைத்தது,
பெரியாருக்கு துரோகம் செய்தவர்கள் என்ற இமெஜ் எல்லாம் உடைக்க அவர்களுக்கான வாய்ப்பு ராஜாஜி வடிவில் வந்தது, விடுவார்களா?
“குலகல்வி திட்டம்..” என இவர்களே பெயர் சூட்டி ஆட ஆரம்பித்தார்கள், அவர்கள் ஆடிய ஆட்டத்தினை ்ராஜாஜியின் கட்சி எதிரிகளும் ரசித்தனர்,, விளைவு ராஜாஜி விலக, காமராஜர் முதல்வரானார்
அதாவது ராஜாஜியும், இன்னும் பலரும் பெரிய சாதி என்பதால், திமுகவின் வாயினை அடைக்க ஒரு சூத்திர முகம் தேவைபட்டது, அந்த காமராஜரை மிக சரியாக நிறுத்தினார்கள்
அதாவது பிராமண தலைவர்களை பின்னுக்கு தள்ளி மோடி என்பவரை முன்னிறுத்தி, இது பிராமண கட்சி அல்ல என பாஜக வேடம் போடுவது போல, அன்றே காங்கிரசால் போடபட்ட முகமூடிதான் காமராஜர்
பார்ப்பண ஆதிக்கத்தில் இன்றும் காங்கிரஸ், பாஜக என இரண்டும் ஒரே கட்சிதானே தவிர, முகமூடிகள் மட்டும்தான் வேறானவை, மற்றபடி சாதிய கொள்கைகளில் இரண்டும் சளைத்தவை அல்ல.
காங்கிரஸ் சாதியற்ற கட்சி என்பது போல காட்டிகொள்ள முன்னிறுத்தபட்டவரே காமராஜர், மற்றபடி சண்டை என்பது ராஜாஜிக்கும் சத்தியமூர்த்திக்குமே
ராஜாஜி, ஆச்சாரியர் எனும் பெரும் அடையாளத்துடன் இன்றைய ப.சிதம்பரம் அளவில் பெருமதிப்பு பெற்றிருந்தவர். காந்தியின் சம்பந்தி என்றொரு பெரும் அடையாளமும் அவருக்கு இருந்தது
அவரை வீழ்த்துவது சாதரணமன்று, ஆனால் திமுக விரட்டி காட்டியது.
ராஜாஜிக்கு எதிராக அன்று திமுக பெரும் போராட்டம் நடத்தபடவில்லையெனில் ராஜாஜி நெடுங்காலம் முதல்வாரக இருந்திருப்பார்
காமராஜர் என்றொரு அரசியல்வாதி உருவாகியிருக்கவே மாட்டார்.
ராஜாஜி பெரும் படிப்பு படித்தவர், அவர் இடத்தில் நானா என தயங்கி நின்ற காமராஜருக்கு பெரும் தைரியமும், ஆதரவும் அளித்தவர்கள் பெரியாரும், அண்ணாவும் என்பது வரலாற்று உண்மை.
ஒரு சூத்திரன் முதல்வராவதில் அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம், காமராஜரும் கக்கன் முதலானோருக்கு அமைச்சர்பதவி கொடுத்து உயர்த்தினார்.
இவை எல்லாம் திராவிட குரலால் எழுந்த நன்மைகள்..
ஆக திராவிட பெருமை பேசுவோர், ஒரே அடியில் அடிக்கலாம்
நாங்கள் அன்றே ராஜாஜியினை எதிர்க்கவில்லையென்றால், காமராஜர் முதல்வராகியிருக்க முடியுமா?
எங்கள் ஆரிய எதிர்ப்பினாலேயே ஒரு சூத்திர தமிழன் முதல்வராக முடிந்தது, காங்கிரசிலே ஒரு தாழ்த்தபட்ட காமராஜரை முதல்வராக்கியது திமுகவின் உழைப்பு என்றால், ஒரு பயலும் பேசமுடியாது
இது உண்மையும் கூட, வரலாறு இதனைத்தான் சொல்கின்றது
அப்படி எங்களால் முதல்வரான காமராஜரைத்தான், அதே ராஜாஜியின் உதவியோடு 1967ல் வீழ்த்தினோம், அதுவும் அவர் இனி முதல்வராக மாட்டேன் என சொன்ன பின்புதான் தோற்றார் என சொன்னால், எதிர்வாதம் புரிய ஒருவனும் இருக்கமாட்டான்
நிச்சயமாக காமராஜர் முதல்வராக, திமுகவின் போராட்டமும் முக்கிய காரணம். அந்த குலகல்வி முறையினை எதிர்த்து நடந்த போராட்டம் மூலமாக ஆட்சிக்கு வந்த காமராஜர், ராஜாஜி முடியாது என சொன்ன விஷயங்களை மாற்றி ஏராள கல்விசாலைகளை திறந்தார்
ஆக காமராஜர் கல்விபுரட்சி செய்யவும் திமுகவே வழி வகுத்தது, அவர் கல்விசாலை கட்டி கல்வி கொடுக்கு மட்டும் திமுக அமைதிகாத்தது.
அவர் பதவிவேண்டாம் என்ற பின்புதான் திமுக ஆட்சிக்கே வந்தது
இப்படி எல்லாம் போட்டு தாக்கினால் எப்படி இருக்கும், ஆனால் இப்படி ஒரு திமுக காரனும் எழுத காணோம், எழுதவில்லை
இப்படியும் ஒரு கோணம் வரலாற்றில் உண்டு,
திராவிட குரல் எழும்பாவிட்டால் காமராஜர் என்ற சூத்திரன் தமிழக முதல்வராக வந்திருப்பது சாத்தியமில்லாத ஒன்று