திரிசங்கு சொர்க்கத்தில் கன்னட தேர்தல் முடிவுகள்
நாம் முன்பே சொன்னது போல திரிசங்கு சொர்க்கத்தில் முடிந்திருக்கின்றது கன்னட தேர்தல், யாருக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை
இந்த இடத்தில் காங்கிரஸ் பெருந்தன்மையான மற்றும் தந்திரமான நகர்வினை மேற்கொண்டது, சட்டென குமாரசாமிக்கு நிபந்தனையற்ற ஆதரவினை கொடுத்துவிட்டது
மதவாதத்தை எதிர்ப்பதே எங்கள் இலக்கு எனும் கொள்கை ரீதியாக விட்டுகொடுத்து தன் பெருந்தன்மையினை நிருபித்திருக்கின்றார் ராகுல்
அதே நேரம் இந்த குமாரசாமி என்பவரும் சொல்லிகொள்ளும் தகுதி கொண்டவர் அல்ல, ஒரு மாதிரி ஆசாமி
தங்களுக்கு முழு மெஜாரிட்டி கொடுக்காத மக்கள் குமாரசாமியின் ஆட்சியில் எக்கேடும் கெட்டு போகட்டும் என்ற குதர்க்கமும் இருக்கலாம்
குமாரசாமி ஆட்சி எப்படி இருக்கும் என்றால் தமிழகத்தை நினைத்து கொள்ளுங்கள் போதும்
இந்நிலையில் பாஜகவும் விடுவதாக இல்லை, ஆளுநர் என்பவர் அவர்கள் கைப்பாவை. இங்கு என்று அல்ல வடக்க முழுக்க பல இடங்களில் இதே அட்டகாசம்தான்
கூட்டணிகளை விட பாஜக முக்கால் பங்கு இடம்தான் வென்றிருக்கும் ஆனால் பாஜக ஆளுநர் பாஜகவினைத்தான் அழைப்பார்
இந்த இடைவெளியில் அடுத்த ஆட்சி நாங்கள்தான் என சொல்லி உருட்டி மிரட்டி
எப்படியாவது எதிர்கட்சியிலிருந்து சிலரை உருட்டி வந்து விடும் பாஜக
இதுதான் அவர்கள் 21 மாநிலங்களில் ஆளும் தந்திரம், சில இடங்கள் மட்டும் விதிவிலக்கு
இதே தந்திரத்தை கன்னடத்திலும் அரங்கேற்றுகின்றார்கள், எடியூரப்பா முட்டிகொண்டு நிற்பது இதனால்தான், இந்நேரம் சிலருக்கு விலை முடிந்திருக்கலாம்
இப்படியாக ஆளாளுக்கு திட்டங்கள் வியூகங்களோடு இருக்கின்றார்கள்
இந்த தேர்தலில் விசித்திரம் என்னவென்றால் கன்னட வெறியனான வாட்டாள் நாகராஜ், காவேரி என்றாலே வாள் வாள் எனகத்தும் நாகராஜ் டெப்பாசிட் இழந்திருக்கின்றார்
ஆக கன்னடத்திலும் வாய்பேசும் சைமன்களை மக்கள் மதிப்பதில்லை என்பது புரிகின்றது, இதெல்லாம் தும்பிகள் சோகம்
இப்போதைக்க்கு பாஜக மெஜாரிட்டி காட்டுவது எளிதானது அல்ல, குமாரசாமிக்கே வாய்ப்பு
தமிழகத்திற்கு தண்ணீர்விடாத கன்னடத்தை குமாரசாமி வடிவில் ஆண்டவன் பழிவாங்குகின்றான், நன்றாய் படட்டும்
தமிழகம் எப்படி எல்லாம் வழிகாட்டி இருக்கின்றது?,
இந்தியாவிற்கே முதலில் மாநில சுயாட்சி புரட்சி காட்டிய தமிழகம் இப்பொழுது எம்.எல்.ஏக்களை எப்படி பாதுகாப்பது என்ற அளவிலும் கூவத்தூர் ஸ்டைலில் வழிகாட்டியிருகின்றது
தமிழண்டோவ்…….