திருக்குறுங்குடி புது பாலம் வெள்ளத்தில் உடைந்தது

Image may contain: 5 people, people standing

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே கட்டபட்ட புது பாலம் வெள்ளத்தில் உடைந்தது

அதே திருக்குறுங்குடி மலைமேல் கட்டபட்டுள்ள மன்னர்காலத்து கோவிலான நம்பியாண்டவர் கோவிலும் அதன் சுவர்களும் எத்தனையோ வெள்ளத்தை தாக்கு பிடித்து நிற்கின்றது

ஏன் என்றால் அக்காலத்தில் தொழில் சுத்தம் அப்படி இருந்திருக்கின்றது, பொது காரியங்களை அவ்வளவு சிரத்தையோடு கவனமாக செய்திருக்கின்றார்கள்.

இதோ இந்த பாலம் கூட பொது சொத்துதான், ஆனால் சொத்தையாக கட்டியிருக்கின்றார்கள்

இதற்கு ஆயிரம் காரணங்கள்

எத்தனையோ செய்திகள் வருகின்றன, பொதுபணிதுறை கட்டிய எத்தனையோ பாலங்கள், கட்டங்கள் எல்லாம் இடிந்து விழுவதாக, ஏன் விமான நிலையமே இடிந்து விழுவதாக செய்திகள் வருகின்றன‌

ஆனால் ஒரு ஒப்பந்ததாரர் மீது கைது நடவடிக்கையோ அல்லது விசாரணையோ நடந்ததுண்டா?

இந்த ஒப்பந்தக்காரரை எல்லாம் விட்டுவிடுவார்கள், இத்துறை அமைச்சர்களை எல்லாம் விட்டுவிடுவார்கள்

ஆனால் சென்னை மேம்பாலம் கட்டுவதில் ஊழல் என முன்பொருமுறை கலைஞரை ஒரு ஆதாரமுமின்றி நள்ளிரவில் கைதெல்லாம் செய்தார்கள், அந்த களபேரத்தில் பாதிக்கபட்ட முரசொலிமாறன் இறந்தே போனார்

அந்த பாலம் இன்றும் உறுதியிடன் இருக்கின்றது, இன்னும் 70 ஆண்டுக்கு அசையாது என்கின்றார்கள்

ஆனால் அவர்களை கைது செய்த அரசுதான் , இந்த பாலங்கள் இடியும்பொழுது கண்களை மூடிகொண்டிருக்கின்றது

இதனை எல்லாம் எடுத்து சொல்ல வேண்டியது திமுகவினர் பணி, அவர்களோ தமிழிசையினை கலாய்த்து கொண்டிருக்கின்றார்களாம்