திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பைபில் போதிப்பு?
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சில கிறிஸ்தவ போதகர்கள் பைபிள் போதித்ததாக சர்ச்சைகள் வருகின்றன
அங்கே சென்றுதான் பைபிள் படிக்க வேண்டுமா? இவர்கள் கட்டி வைத்திருக்கும் சர்ச் எல்லாம் எதற்கு?
இவை வன்மையாக கண்டிக்கதக்கது. கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் செயல்பட்டிருக்கின்றார்கள்
மத சுதந்திரம் என்பது அடுத்த மதத்தவர் ஆலயத்தில் சென்று இப்படி வம்பு இழுப்பது அல்ல
ஏன் இவர்களுக்குத்தான் செய்ய தெரியுமா? அவர்கள் இவர்கள் சர்ச் முன்னால் வந்து நின்று பஜனை நடத்தினால் விடுவார்களா?
இவர்களுக்கு மட்டும்தான் மதம் பரப்பும் கடமையும் ஆசையும் உண்டா?
இப்படி தேடி சென்று வம்பு இழுக்க வேண்டியது, அதன் பின் ஐயகோ கிறிஸ்தவர்களை ஆர்.எஸ்.எஸ் கும்பல் கொல்கின்றது என ஒப்பாரி வைக்க வேண்டியது
இந்த பகுத்தறிவுவாதிகளுக்கும் இன்னும் சில நாத்திகர்களுக்கும் இது எல்லாம் கண்ணுக்கு தெரியாது, இதுவே இந்துக்கள் சப்பரம் கிறிஸ்தவ ஆலய பக்கம் போனால் நடந்திருப்பதே வேறு
இந்த விஷயம் கண்டிக்கதக்கது, பொது அமைதிக்கு ஊறு விளைவித்தல், மத சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளில் இவர்களை உள்ளே பிடித்து போட வேண்டும்
நிச்சயம் செய்ய வேண்டும், பொது அமைதியினை காக்கும் கடப்பாடு எல்லா தரப்பினருக்கும் உண்டு , அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் உண்டு