திருட்டு அரசியல் தமிழகம்

துணை முதலமைச்சரே சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய பின்னும் இந்த ஊழல் ஆட்சியினை கலைக்க வேண்டும் என யாரும் குரல் எழுப்பவில்லை

ஏன் என்றால் இதுதான் திருட்டு அரசியல் தமிழகம்.

அப்படி செய்யும் பட்சத்தில் திமுக வளர்ந்துவிடும் என்பது பாஜக கணக்கு, அதனால் அது கள்ள அமைதி. தமிழிசை தாண்டவமாடாமல் இருப்பதற்கும், எச்.ராசா மவுன விரதம் இருக்கவும் இதுதான் காரணம்

சரி திமுக சொன்னால் என்ன?

அதற்கும் வேறு கணக்கு இருக்கின்றது, இந்த ஆட்சி சரியும் பட்சத்தில் பாஜகவினை அது நேருக்கு நேராக எதிர்க்க வேண்டும் என்பதால் அதுவும் அமைதி

சில்லறை கட்சிகளுக்கும் பாமாகவிற்கும் பாராளுமன்ற தேர்தலில் யாரோடு சேரபோகின்றோம் எனும் குழப்பம் இருப்பதால் அவர்களும் அமைதி

நிச்சயம் துணை முதலமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யபட்டிருப்பதால் அந்த அட்சி நீக்கபட்டே ஆக வேண்டும்

ஆனால் அப்படி நீக்கபட்டுவிடுமோ , அய்யகோ என மொத்த கட்சிகளும் அஞ்சி நிற்கும் தருணம் இது

சுருக்கமாக சொன்னால் அயோக்கியர்களின் கள்ளத்தனம் அப்பட்டமாக தெரியும் நேரமிது

ஒருபயலும் உருப்படி இல்லை…


இந்த ரபேல் விமான ஊழல் பற்றி கலைஞரிடம் கேட்டால் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா?

பன்னீர் சகோதரரை காப்பாற்ற மத்திய அரசாங்கத்தார் ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பினார்களாம், ஒருவேளை பழனிச்சாமி குடும்பத்தாரை காப்பாற்ற ரபேல் விமானத்தை மகா அவசரமாக இந்த அரசு வாங்கியிருக்கலாம்