திருநாவுக்கரசை எதற்காக ராகுல் தமிழக காங்கிரஸ் தலைவராக ஆக்கினார்?
காங்கிரஸ் இப்போது 3 மாநிலத்தில்தான் ஆளுகின்றதாம், இது இன்னும் குறைந்து காங்கிரசை செவ்வாய் கிரகத்தில் தேடும் காலம் வரலாம்
ஏன் என்றால் இதுதான் காரணம்
இந்த தெருநாவுக்கரசை எதற்காக ராகுல் தமிழக காங்கிரஸ் தலைவராக்கினாராம் என்றால் அக்காரணம் படு பயங்கரமானது
“தெருநாவுக்கரசர் அதிமுகவில் எம்ஜிஆர் பக்கத்திலே இருந்தவர் இதனால் எம்ஜிஆர் வோட்டு எல்லாம் வரும், பாஜகவில் இருந்திருக்கின்றார் இதனால் பாஜகவோட்டு வரும்
சினிமாவில் நடித்திருப்பதால் பெரும் மக்கள் அபிமானம் உண்டு
பலகாலம் அரசியலில் இருப்பதால் பழுத்த அனுபவம்
அதிமுகவிலும் பாஜகவிலும் அவருக்கு ஸ்லீப்பர் நண்பர் இருப்பதால் நினைத்ததை சாதிக்கலாம், அவரை மட்டும் தலைவராக்கி தேர்தலை சந்தித்தால் எல்லா கட்சி வோட்டையும் வாங்கி , மறவர் சாதி வோட்டையும் வாங்கி காங்கிரஸ் ஆட்சி அமைக்கும், தெருநாவு முதல்வராவார்”
இப்படி ராகுலிடம் அள்ளி விட்டிருகின்றார்கள், அவரும் நீர் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என அணைத்து ஆதரித்தாராம்
அந்த ராகுலை பப்பு என சொல்வதில் என்ன மிகை? இன்னும் அதிகமாக சொல்ல வேண்டும்
இப்படிபட்ட மனிதர்களை காங்கிரஸில் அதுவும் தலைவராக வைத்துகொண்டிருக்கும் மனோநிலையில்தான் ராகுல் இருக்கின்றார்
பின் எப்படி காங்கிரஸ் உருப்படும், சுத்தமாக உருப்படாது
ராகுல் திறமையானவர் என்றால் இந்நேரம் தெருநாவு விரட்டபட்டிருக்க வேண்டும், அவரோ தெருநாவு முதல்வராவர் எனும் கனவில் இருப்பது போல் தெரிகின்றது
இந்த ராகுல் இனி காங்கிரசை காப்பாற்றுவார்? அது நேரு வந்தாலும் முடியாது
“நான் ஜெயலலிதாவினையே பார்த்தவன் குஷ்பு எனக்கு எம்மாத்திரம்?” : தெருநாவுக்கரசர்
ஜெயலலலிதா இவரை உதிர்ந்த முடி என சொன்னது குறிப்பிடதக்கது,
நல்ல வேளையாக தலையில் இருந்து விழுந்த ரோமம் என அழுத்தி சொன்னார், இல்லாவிட்டால் தெருநாவு அன்றே தூக்குபோட்டு செத்திருக்க வேண்டும்
அது ஜெயலலிதாவின் பெருந்தன்மை
காங்கிரஸ் கணவான்களே, இந்த தெருநாவினை வாயினை அடக்கி வையுங்கள்.
இல்லை என்றால் நாளை ” நான் சோனியாவினையே பார்த்தவன்” என்பார், கேட்க சகிக்காது