திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழருக்கு பதவி இல்லை
திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழருக்கு எப்பொழுதும் பிரதான இடம் உண்டு, திருப்பதி எனும் பெயரே தமிழ்பெயர். அது தமிழருக்கான ஆலயம்
பின்னாளில் மொழிவாரி பிரியும்பொழுது அது ஆந்திராவுக்கு சென்றாலும், அதன் நிர்வாக குழுவில் தமிழர் இருந்து கொண்டே இருந்தனர்
50% திருப்பதி பக்தர்களில் தமிழர்கள் என்பதால் அக்குழுவில் தமிழர் இருக்க வேண்டிய அவசியம் இருந்தது
இம்முறை தமிழருக்கு பதவி இல்லை என சொல்லியாயிற்று, பழனிச்சாமி அரசும் அப்படியா? என சொல்லிவிட்டு அது போக்கில் இருக்கின்றது
இதற்கு மேல் கேட்டால் திருப்பதிசாமி எதற்கு? இங்கிருக்கும் ஸிரிமன் எடப்பாடி சாமிகள் போதாதா என்பார்கள்
திருப்பதியில் தன் பிடியினை விட்டிருக்கின்றது தமிழகம், இந்நேரம் சேகர் ரெட்டி பன்னீர் செல்வம் உறவுகள் எல்லாம் உங்கள் நினைவுக்கு வந்து தொலைக்க கூடாது
சேகர் ரெட்டி போன்ற சர்ச்சை நபர்களோடு தொடர்பு வைக்கும் அமைச்சர்களுக்கு , திருப்பதியில் தன் பிடியினை தக்க வைக்க முடியவில்லை
அதுவும் சரிதான் சேகர் ரெட்டி பினாமி ஆகலாம், திருப்பதி பெருமாள் பினாமி ஆக முடியுமா?