திருப்பதி உண்டியல் பணத்திற்கு காவலர் எதற்கு? பகவானுக்கு சக்தி இல்லையா? : கனிமொழி

Image may contain: 2 people

திருச்சியில் கனிமொழி சர்ச்சை பேச்சு பேசியிருக்கின்றார், “திருப்பதி உண்டியல் பணத்திற்கு காவலர் எதற்கு? பகவானுக்கு சக்தி இல்லையா?” என்று பேசியிருக்கின்றார்

இதெல்லாம் நிச்சயம் நல்ல பலனை கொண்டுவராது, வெறும் கடவுள் மறுப்பு ஒருவோட்டு கொண்டுவராது என்றுதான் அண்ணாவே ஒன்றே குலம், ஒருவனே தேவன் என ராகத்தை மாற்றினார்

கலைஞர் பிராமணர்களை சாடுவாரே அன்றி, இம்மாதிரி விஷயங்களை எல்லாம் கவனமாக கையாள்வார்.

என்னதான் பகுத்தறிவு பேசினாலும் திருவாரூர் தேரை எல்லாம் பழுதுபார்த்து கொடுத்து சில காரியங்களில் கவனமாக இருப்பார்.

ஏன் இப்படி பேசிவிட்டார் கனிமொழி?

காணிக்கைக்கு காவல் என்பது அவர் கண்ணில் படுகின்றதோ தவிர, பெரும் காவல் செய்யும் அளவிற்கு பக்தர்கள் பணம் கொட்டினால், அந்த பக்தி எப்படி? அவர்கள் பெற்றிருக்கும் பலன் எப்படி என ஏன் எண்ணிபார்க்கவில்லை

சும்மா கொட்டுவானா மனிதன்? நிச்சயம் அந்த தெய்வம் அவனுக்கு உதவியிருக்கும், அவன் அந்த பக்தியிலும், நன்றியிலும் அள்ளிகொடுக்கின்றான்

இவ்வளவிற்கும் அது ஆந்திராவில் இருக்கும் கோவில், அதனை பற்றி கனிமொழிக்கு என்ன வந்தது?

ஏம்மா கனிமொழி, இந்த வேளாங்கண்ணி ஆலயத்திலும் அதே காவல்தான், அதனை பற்றி சொல்ல முடியுமா?

புட்டபர்த்தி சாய்பாபாவிடம் உங்கள் பெரியம்மா தயாளு ஆசிவாங்கினாரே, அங்கும் பணபெட்டிக்கு இதே காவல்தான்

ஆக இந்தமாதிரி திருப்பதி கேள்விகள் எல்லாம் இனி திமுகவிற்கு சிக்கலை கொண்டுவருமே தவிர திருப்பத்தை தராது அம்மணி

அந்த வீரமணி சொற்படி கேட்டு நாசமாய் போய்விடாதீர்கள், அவ்வளவுதான் சொல்ல முடியும்.