திருப்பதி ஜீயருக்கு சம்பள உயர்வு
திருப்பதி ஜீயருக்கு சம்பள உயர்வு என்றவுடன் ஆளாளுக்கு பொங்குகின்றார்கள்
ஆனால் பால் தினகரன் சொத்து கணக்கோ, இல்லை வேறு சாமியார்களின் சொத்து கணக்கை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள்
வாடிகனின் தங்க குதிரை வண்டியில் தங்க கிரீடத்துடன் பவனி வருவார் போப்பாண்டவர், அது பற்றி எல்லாம் சொல்லமாட்டார்கள்
அரபு நாடுகளில் மத அறிஞர்களுக்கு இருக்கும் செல்வாக்கும் காணிக்கையும் ஏராளம், ஈரானில் கோமேனிகள் வைத்ததே சட்டம்
வேளாங்கண்ணி ஆலயத்தின் காணிக்கை கணக்கு கூட தெரியாத நாட்டில்தான் திருப்பதி ஜீயரின் சம்பள கணக்கு விமர்சிக்கபடுகின்றது
அடேய் ஜீயர் என்பது பிறப்புரிமை அதை எதிர்ப்போம், எல்லோரும் ஜீயர் ஆக முடியுமா? பகுத்தறிவு எங்கே? உழைப்பிற்கு மரியாதை எங்கே? சமத்துவம் எங்கே? என ஏகபட்ட கேள்விகள்
முதலில் கலைஞர் குடும்பம் தவிர யாரும் திமுக தலைவர் ஆக முடியுமா? இல்லை வீரமணி குடும்பம் தவிர யாரும் பெரியார் சொத்துக்கள் பக்கம் போகமுடியுமா? என்ற கேள்விக்கு விடை தேடிவிட்டு வாருங்கள்
அதுதான் பகுத்தறிவு அதுதான் சமதர்மம்
பெரியார் அறகட்டளைக்கு வீரமணி வாரிசும் திமுக சொத்துகளை கண்காணிக்கும் உயர்மட்டத்திற்கு கலைஞர் வாரிசும் வரலாமாம்
ஆனால் ஜீயர் என்பவர் திருப்பதி பக்கம் வர கூடாதாம்
போங்கடா டேய்…