திருப்பதி வந்து வணங்கிணார் ராஜபக்சே

Image may contain: 1 person, smiling, standing

வேட்டி சட்டை சகிதம் திருப்பதி வந்து வணங்கிவிட்டு சென்றிருக்கின்றார் ராஜபக்சே

திருப்பதி வந்து அவர் கோவிந்தா என்று சொல்லியிருந்தால் சிக்கல் இல்லை, ஆனால் அவர் ஒருமாதிரி அரசியல் பேசிவிட்டு சென்றிருக்கின்றார்

இலங்கையில் சீன ஆதிக்கம் ஒன்றும் ரகசியமல்ல, அதனை தன் பேட்டியில் பகிரங்கமாகவே இந்தியாவினை சீண்டுகின்றார் ராஜபக்சே

ஆம், ஹம்பாந்தோட்டை மேம்பாடு, சாலை மேம்பாடு என எல்லாவற்றிற்கும் இந்திய உதவியினை நாடினோம் , அவர்கள் கண்டுகொள்ளவில்லை, ஆர்வமில்லை

வேறுவழியின்றி சீனாவிடம் சென்றோம் அவர்கள் வந்தார்கள், ஹம்பாந்தோட்டாவினை 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு கொடுத்துவிட்டோம்

நாங்கள் எப்போதும் இந்திய நண்பர்கள், ஆனால் இந்தியா எங்களை சந்தேகமாக பார்க்கின்றது. இன்னும் நிறைய விஷயங்கள் பேசவேண்டும் இருநாடுகளும்” என திருப்பதி வாசலில் உலக அரசியல் பேசிவிட்டார்

அவரின் பேட்டி சாதாரணம் அல்ல, அவர் இருந்த காலகட்டத்தில் இங்கு காங்கிரஸ் அரசு இருந்தது. போரினால் அழிந்த இலங்கையினை சீர்படுத்த முயன்றார் ராஜபக்சே

இந்தியா வடக்கு பகுதி மேம்பாட்டில் கவனம் செலுத்தியது, தென் இலங்கையில் போர் இல்லாததால் அழிவில்லை. ஆனால் ராஜபக்சே சாதுர்யமாக தென்னிலங்கையில் சீனாவினை நிறுத்தினார்

பின் வந்த மோடி அரசும் அதனை விரட்டமுடியாமல் திணறிற்று.

அவருக்கென்ன சொல்லிவிட்டு சென்றாயிற்று, இனி இலங்கையில் சீனாவினை நுழையவிட்டது காங்கிரசா? பாஜகவா? என்ற அடுத்த அரசியல் ஆட்டம் இங்கு ஆரம்பிக்கலாம்.

சீனாவிற்கு இடம் கொடுத்தோம் ஆமாம், எங்களை யார் என்ன செய்யமுடியும் என பகிரங்கமாக சொல்லிவிட்டு சென்றிருகின்றார் ராஜபக்சே

இதற்கு இந்திபதிலடி எப்படி இருக்குமோ தெரியாது

புலிகளை இந்தியா முழுக்க அழிக்க ஒருகாலமும் விரும்பவில்லை, காரணம் அப்படி ஒரு சக்தி இருந்தால்தான் இலங்கையினை கட்டுக்குள் வைக்க முடியும்.

இது இந்தியா, இலங்கை, பிரபாகரன் என எல்லோருக்கும் தெரியும். புலிகள் ராஜிவினை கொல்லும் அளவு சென்றது இதனால்தான். ராஜிவினை கொன்றபின்பும் இந்தியா அமைதி காத்தது இதனால்தான்

இந்த ஆட்டம் நெடுங்காலம் நடந்தது, இந்தியாவின் இந்த பலகீனத்தை பயன்படுத்தி அதனை தன் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர் புலிகள்

நிலமையினை கவனித்த அமெரிக்காவும் சீனாவும் புலிகளை மொத்தமாய் அழிக்க உதவின‌

புலிகள் அழிந்த நிலையில் இந்தியபிடி அற்றுபோய் சீனாவினை கொண்டு நிறுத்தி இந்தியாவினை மிரட்டுகின்றது இலங்கை

ஒரு காலத்தில் போராளிகளை வளர்த்து எங்களை எப்படி எல்லாம் ஆட்டினீர்கள்? இனி சீனாவினை வைத்து நாங்கள் ஆடுவோம் என சொல்லாமல் சொல்லி செல்கின்றார் ராஜபக்சே

இனி இந்தியாவின் அடுத்த ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை காலமே சொல்லும்.