திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளில் இடைதேர்தலாம்
இனி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், திருவாரூர் தொகுதியிலும் இடைதேர்தலாம்
இனி அத்தொகுதி மக்கள் காட்டில் அடைமழை, இடைவிடாமல் பெய்யும் என்பது சந்தேகமில்லை
அவர்கள் இனி வேலை வெட்டிக்கே செல்லவேண்டாம் எல்லாம் அலாவுதீன் பூதம் போல சிலர் வீட்டுக்கே வந்து கொடுப்பார்கள், தாலாட்டுவார்கள், கொஞ்சுவார்கள்
அப்படி இனி சிலநாட்கள் உண்மையான ஜனநாயகம் அத்தொகுதிகளில் நடக்கும்
அதிலும் கலைஞர் தொகுதியினை கைபற்ற கடும் முயற்சி நடக்கும், ஆர்.கே நகரை விட பலமடங்கு பிரவாகம் இருக்கும்
எப்படியோ, செத்தும் கொடுத்த சீதக்காதி போல தன் தொகுதி மக்களுக்கு பெரும் பணமழை கொட்ட வழிசெய்துவிட்டே சென்றிருக்கின்றார் கலைஞர்