திருப்பூர் காங்கேயம் அருகில் ஒரு மலைகோவில்…

திருப்பூர் காங்கேயம் அருகில் ஒரு மலைகோவில் உள்ளதாம், அந்த சிவன் மிக உக்கிரமானவர் என்கின்றார்கள். யாராவது பக்தரிடம் சிவன் கனவில் வந்து ஒரு பொருளை ஆலயத்தின் பெட்டியில் வைக்க சொல்வாராம், அப்படி வைத்தால் அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்

அதுவும் பூசாரிகள் இன்னொரு முறை வாக்கு கேட்டு உறுதி செய்வார்களாம், பின் மகா எச்சரிக்கை தேவையாம்

இதுவரை அரிசி, நீர் எல்லாம் வைக்க சொன்னாராம், வைத்தார்களாம். அப்பொழுது அரிசி விலை உயர்வு, சுனாமி எல்லாம் வந்ததாம்

இப்போதுள்ள வறட்சிபற்றி சிவன் சொன்னதாக தகவல் இல்லை, ஆனால் இப்பொழுது உலக உருண்டை வைக்க சொல்லிவிட்டாராம்

சும்மாவே டிரம்பும், வடகொரியா ஒரு பக்கமும், ஈரானும் இஸ்ரேலும் இன்னொரு பக்கமும், முறுக்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த சிவனின் பூமி உருண்டை அச்சத்தை ஏற்படுத்துகின்றது என சொல்கின்றார்களாம்

ஆனால் 4 மாதத்திற்கு முன்பு சிவன் சங்கிலி வைக்க சொன்னாராம், அதன்பின்புதான் சசிகலா குடும்பம் சிறைக்கு சென்றதாம்

இரட்டை இலையினை சிவன் வைக்க சொன்னதாக தகவல் இல்லை, ஆனாலும் எவ்வளவு தைரியம் அவருக்கு? சசிகலாவிற்கு சங்கிலி கிடைக்க செய்தாரா?

பன்னீர் இணையட்டும், இரட்டை இலை மீட்கபடட்டும், அதன் பின் சிவனுக்கு இருக்கின்றது

அது இருக்கட்டும், சிவன் ஏன் பூமி உருண்டையினை வைக்க சொன்னார்?

பார்க்கலாம், உலகினை படைத்த கடவுளுக்கே அதனை காக்கவும் பொறுப்பு உண்டு.