திருமாவளவனுக்கு திருமணம் செய்துவிக்க முயற்சி

Image may contain: 1 person, text and close-up

திருமாவளவனுக்கு திருமணம் செய்துவிக்க அவரது பெரியம்மா கடும் முயற்சி, கண்ணீர் பேட்டி : செய்தி

ஆனானபட்ட பெரும் போராளிகளான நெல்சன் மண்டேலா, யாசர் அராபத் போன்றோர் எல்லாம் முதிர்ந்தவயதிலும் திருமணம் செய்துகொண்டார்கள்

ஒரு போராளிக்கு திருமணம் என்பதும் அவசியம், அவனை புரிந்துகொண்ட பெண் அவனுக்கு துணையானால் அவனின் போராட்ட வாழ்வு இன்னும் தீவிரமாகும் என்பது உலகறிந்தது

மார்க்ஸ் முதல் மாவோ வரை, அராபத் முதல் பிரபாகரன் வரை அதனைத்தான் உலகம் சொல்கின்றது

நிச்சயமாக திருமாவின் வாழ்வு போராட்டமிக்கது, ஒடுக்கபட்ட இனத்தில் பிறந்து , அரசியலில் இறங்கி ஒரு தலைவராக அவர் உருவெடுத்திருப்பது வாழ்த்துகுரியது

சில இடங்களில் ராமதாஸோடான மோதலில், பெரும் கலவரங்கள் ஏற்படாமல் சமாளித்து சென்றதில் நமக்கு மட்டுமல்ல‌,
எல்லோருக்குமே அவர் மீது மரியாதை உண்டு. எந்த இடத்திலும் அவர் தன் கட்சியினருக்கு வன்முறை போதிக்கவில்லை

மிக மெச்சதக்க பண்பு அது, அவர் இடத்தில் இன்னொருவர் இருந்திருந்தால் பல இடங்களில் ரத்த ஆறு ஓடியிருக்கும்,

பெரும் போராளிகளே திருமணம் செய்திருக்கும் உலகில் திருமாவும் திருமணம் செய்யலாம், அவரது அரசியல் வாழ்வு ஏற்றம் பெறத்தான் செய்யும்

கலைஞருக்கு என்றுமே திருமா மீது ஒரு அனுதாபம் உண்டு, திருமாவினை அவர் அடிக்கடி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திகொண்டிருந்த காலம் எல்லாம் உண்டு

ஒரு அரசியல் போராளிக்கு திருமணம் நிச்சயம் அவசியம். அவனை கவனித்துகொள்ள ஒரு பெண் அவசியம், இது ஆனானபட்ட பெரியாருக்கே முதிர்ந்தவயதில் தேவைபட்டது, பெரியார் நீண்டநாள் வாழ்ந்ததில் மணியம்மையின் பங்கும் மகத்தானது

இந்த ஆண்டிற்குள் திருமா திருமண வாழ்வில் நுழையட்டும், அந்த தாயோடு நாமும் வற்புறுத்தலாம்

அவரின் தொண்டர்களுக்கும், கட்சியினருக்கும் அவர் மீது அக்கறையும், உண்மை பாசமும் இருந்தால் அவர்களும் வலியுறுத்தட்டும்..


கொசுறு

லோக் ஆயுக்தா கொண்டு வந்தால் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள் : விஜயகாந்த்

அப்படியே அதிமுகவினர் எல்லாம் தூக்குமேடைக்கே செல்வார்கள் என்பதை சொல்ல மறந்துவிட்டார் அல்லது சொல்ல விருப்பமில்லை.

கலைஞர் சொன்னதை கேட்காமல்தான் அன்னாரின் நிலமை இப்படி இருக்கின்றது, இன்னும் திருந்தமாட்டேன் என அடம்பிடித்தால் யார் என்ன செய்யமுடியும்?