திருமா மலையக தமிழருக்குத்தான் போராட வேண்டும்

தமிழர்களுக்காக காவேரி முதல் ஈழம் வரை போராடும் உணார்வாளர்கள் ஏராளம் உண்டு, இப்பொழுதெல்லாம் ஏகபட்ட போராளிகள்

தமிழன் இலங்கையில் அடிபட்டான் , ஒடுக்கபட்டான் வாழவிடாமல் அடிக்கபட்டான் என்றெல்லாம் ஒப்பாரிவைப்பார்கள்

இதில் பணம் , வோட்டு அரசியல். குறைந்த பட்சம் எதிர்கட்சியினை திட்டுவது என பல வாய்ப்ப்யி இருப்பதால் ஈழ தமிழர்கள் என்றுமே இவர்கள் கவனத்திற்குரியவர்கள்

அதனால் இலங்கை மலையக மக்களையோ, இன்னும் அங்கிருக்கும் இதர தமிழர்களையோ இவர்கள் நினைக்கமாட்டார்காள்

நேரு காலத்தில் 5 லட்சம் மலையக தமிழர்கள், சாதியால் யாழ்பாணத்தாரால் ஒதுக்கபட்ட வந்தெரி தமிழர்கள் இந்தியா திரும்பினர்

தமிழர் வாக்கு அதிகரிப்பது தனக்கு நல்லதல்ல என சிங்களமும், எஸ்டேட் ஓடுக்கபட்ட தமிழர் , சாதியால் குறைந்த தமிழர் பெருகுவது தனக்கு நல்லதல்ல என யாழ்பாணத்தாரும் செய்த சதி அது

அங்கே வெள்ளையன் காலத்தில் சென்று தங்கி பெருகிய மக்களை , தமிழர்களை நாடற்றவராக்கி இங்கே சிங்களன் அனுப்பும்பொழுது ஒரு யாழ்பாணத்தானும் தொப்புள் கொடி என கதறவில்லை

சாதிவெறியும்,யாழ் மேலாண்மை புத்தியும் அப்படி இருந்தது

திருமா போன்றவர்கள் யாழ்பாணத்தார் பற்றி பேசும்பொழுது நமக்கு கோபம் வருவது இதனால்தான், திருமா உண்மையான சாதி போராளி என்றால் அவர் மலையக தமிழருக்குத்தான் போராட வேண்டும்

ஆனால் செய்யமாட்டார், காரணம் அவர்கள் ஏழைகள்

அப்படி அன்றே அனுப்பட்ட அந்த தமிழர்கள் ஊட்டி பக்கம், கன்னட பக்கம் குடியிருக்க வைக்கபட்டனர்,

மங்களூரை அடுத்த பகுதியில் ஏராளமான மலையக தமிழர் உண்டு, ஆனால் பரிதாபமான வாழ்க்கை

ஊட்டி பக்கத்தில் இருப்பவர் நிலையும் மகா மோசம்

அதே நேரத்தில் திபெத்தில் இருந்து வந்த அகதிகளும் அதே பக்கம் இருந்தனர்

இதில் திபெத் அகதிகளுக்கு உதவிய அளவு தாயகம் திரும்பிய மலையக மக்களுக்கு இந்திய அரசும் உதவவில்லை, தமிழக அரசும் உதவவில்லை

இன்று அவர்கள் வீடு கூட இல்லாமல், தங்கும் இடத்திற்கு பட்டா இல்லாமல் மிக ஏழ்மையாக கன்னடத்தில் இருக்கின்றனர் ,

வாழவே போராட்டம் , அவர்கள் எழும்பி வர ஒரு வாய்ப்பும் இங்கு இல்லை

அவர்களை கண்டுகொண்டு அரவணைக்கவோ, அவர்களுக்கு உதவவோ இங்கு ஒரு தமிழ் உணர்வாளனும் இல்லை, போராளியுமில்லை, கட்சியும் இல்லை

கடல் கடந்து ஈழத்திற்கு கத்தும் ஒருவனும் காலடியில் அனாதைகளாய் அபலைகளாய் நிற்கும் இந்த தமிழரை கண்டு கொள்ளவில்லை

ஏதேனும் செய்வதாக இருந்தால் இந்த தமிழருக்கல்லவா செய்ய வேண்டும்

இதை சொன்னால் நாம் தமிழின துரோகி, ஆரிய சிங்கள அடிவருடி

மலையகம் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி, ஏன் மாவீரன் சே குவாரேவுக்கு பின் மலையகம் சென்ற சர்வதேச தலைவர் மோடிதான்

அவராவது இங்கே தவிக்கும் தாயகம் திரும்பிய மலையக மக்களுக்கு ஏதும் செய்யட்டும்

சத்தியமாக தமிழக அரசாலோ, குபீர் திடீர் போராளிகளாலோ, தமிழன் என ஊளையிடும் நரிகளாலோ அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது, இந்த திருடர்கள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்

மத்திய அரசு ஏதும் செய்தால் உண்டு, அப்படி அவர் உதவி செய்தால் வாழ்த்தலாம்