திருமுருகன் காந்தி, சுப. உதயகுமார் ஸ்டெர்லைட் களத்தில் காணவில்லை

திருமுருகன் காந்தி, சுப. உதயகுமார் போன்றவர்களை ஸ்டெர்லைட் களத்தில் காணவில்லை

தூத்துகுடி தமிழ்நாட்டில் இல்லை என முடிவு செய்துவிட்டார்கள் போல‌

இவர்களின் எஜமான உத்தரவு இன்னும் வரவில்லை என்பது தெரிகின்றது

அடுத்த நாட்டு தமிழருக்காக குதிப்பார்களாம், கொடி பிடிப்பார்களாம் தமிழக கலைஞரையும், சோனியா காந்தியினை எல்லாம் வாரி தூற்றுவார்களாம்

ஆனால் சொந்த தமிழன் தூத்துகுடியில் தவிக்க இவர்கள் எல்லாம் சத்தமே இல்லை

இந்த கும்பலில் எவனாவது ஒருவன் பழனிச்சாமி ஒழிக என்றோ மோடி ஒழிக என்றோ கத்துவானா என்றால் இல்லை

ஆக என்ன தெரிகின்றது?

இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரானவர்களால் இயக்கபடுகின்றார்கள் என்றும் அவர்கள் சொற்படி ஆடும் பொம்மைகள் என்பதும் தெரிகின்றது

அங்கிள் சைமன் வந்துவிட்டு ஓடிவிட்டாராம், பழைய குதிப்பு குட்டிகரணம் எல்லாம் இல்லை

அங்கு சில அண்ணாச்சிகளுக்கு பிடிக்காத விஷயங்களை எல்லாம் அங்கிள் சைமன் செய்யவே மாட்டார்.


ஸ்டெர்லைட் போராட்டம் பற்றிய சரியான தகவல் அரசுக்கு போய்ச் சேரவில்லை – எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

எம்.எல்.ஏ என்ன கட்சி தெரியுமா? அதிமுக‌

மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உண்மை நிலையினை அரசுக்கு சொல்லவில்லையாம்

சரி அவர்கள் சொல்லவில்லை, பழனிச்சாமிக்கு அருகில் இருக்கும் இவர் ஏன் எடுத்து சொல்லவில்லை? என்பது பற்றி எல்லாம் நாம் கேட்க கூடாது.

ஆக பழனிச்சாமி பாவம், அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை அல்லவா?

எங்கே? பழனிச்சாமி உங்கள் மாபெரும் சாதனையினை பாராட்டி தூத்துகுடியில் விழா நடக்கின்றது, வந்து கலந்துகொள்ளுங்கள் என சொல்லி அழைத்து வந்தால் என்ன?

ஒன்றுமறியா பழனிச்சாமி தூத்துகுடிக்கு ஓடிவந்து விடமாட்டாரா?