திருவள்ளுவர் பிராமணரா இல்லையா?

No automatic alt text available.வள்ளுவர் பிராமணரா இல்லையா என்ற சர்ச்சை இந்த கட்ஜூ என்பவரால் கிளறபட்டு அவர்மீது பல சர்ச்சை வந்து மனிதர் இனி தமிழர் கதையினை எடுக்கவே மாட்டேன் என ஓடிவிட்டார்

குறள் என்பது தமிழ் இலக்கிய வகை, குறள் வடிவில் ஏகபட்ட இலக்கியம் இருந்தாலும் வள்ளுவனின் குறள் தனி இடம் பிடித்து திருகுறள் என்றானது

வள்ளுவர் பிராமணர் என்பது அவர் மயிலாப்பூரில் பிறந்தார் எனும் கதையிலிருந்து வந்ததே தவிர வேறு ஒன்றுமில்லை

உண்மையில் வள்ளுவனின் வரலாறு முழுதாக கிடைக்கவே இல்லை, அவனுக்கு வாசுகி என்றொரு மனைவி இருந்தாள் அவள் கீழே விழுந்த‌ சோற்றுபருக்கையினை ஊசியால் குத்தி கழுவினாள் என்பதெல்லாம் கட்டுகதை ஆதாரமில்லை

முழுவரலாறும் கிடைக்கவில்லை என்பததால்தான் வள்ளுவனின் புனிதபிம்பம் அப்படியே இருக்கின்றது, இல்லாவிட்டால் எல்லா கவிஞனுக்கும் உள்ள பலவீனம் போலவே வள்ளுவனின் இன்னொரு பக்கமும் வந்திருக்கும்

வள்ளுவனை ஆய்வு செய்தவர்கள் பல்வாறு கருத்து கூறினார்கள்

ள்ளுவநாட்டை சேர்ந்தவர் என்றும் சிலர் சொன்னார்கள், வள்ளுவ நாடு என்பது நாஞ்சில் நாட்டிற்கு அடுத்து இருந்ததாக சில செய்திகள் உண்டு.

குறளின் பல சொற்கள் அப்பகுதியில் இன்றும் பயன்படுத்தபடும் சொற்கள்

Image may contain: 1 person, close-upஅவ்வகையில் வள்ளுவன் தென்னகத்தை சார்ந்தவன் என்பார்கள், கலைஞர் கன்னியாகுமரியில் சிலை வைத்ததிலும் அந்த அர்த்தம் இருந்தது

வள்ளுவன் பிராமணனா இல்லையா என்பதல்ல விஷயம். அவரின் குறள் உலக பொதுமறை, ஒரு இடத்தில் கூட தமிழன் என்றோ, தமிழினம் என்றோ சொல்லவே இல்லை

அந்த அளவு தமிழன் எனும் எல்லையினை தாண்டி மானிட தர்மம் பேசி நின்ற உயர்ந்த இலக்கியம் அது.

அவனின் வரலாறு முழுக்க தெரியாவிட்டாலும், ஒப்புகொள்ள கூடிய விஷயம் வள்ளுவன் பூரண இந்து, அதற்கான சான்றுகளும் சொற்களும் குறள் முழுக்க நிரம்பி கிடக்கின்றது

வள்ளுவனை முதலில் அடையாளபடுத்தியது வெள்ளையன் எல்லீஸ்.

அவன் மகா வித்தியாசமான கலெக்டர் , தமிழ்படித்தான் குறளை மிக விரும்பினான், தன்னை தமிழனாக எல்லீசன் என்றே அழைத்துகொண்டான்

திருகுறள் அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது, தமிழனாக வாழ்ந்த அவன் பெயரில் சென்னையில் சாலை ஒன்றும் உண்டு

வள்ளுவன் எப்படி இருப்பான் என்ற ஆவலை முதலில் கொண்டது திமுக அல்ல,திகவும் அல்ல‌

அவர்கள் மற்ற இலக்கியங்களில் மதமும், ராமனும் கண்ணனும் வந்ததால் கடவுள் இல்லா குறளை பிடித்து தொங்கினார்கள், காரியவாதிகள்

முதலில் வள்ளுவனை தேடியது எல்லீஸ் , 1700களிலே வள்ளுவன் உருவத்தை தேடி அலைந்தான்

அவர்தான் தமிழ்கற்று, அச்சகம் நிறுவி திருகுறளை எல்லாம் அச்சில் கொண்டுவந்தவர், அதுவும் சீசன் பால்கு காலத்திற்கு முன்பே

வள்ளுவன் உருவத்தில் தங்க காசு வெளியிட்டவரும் அவரே, அவர் வெளியிட்ட உருவத்தைத்தான் பின்னாளில் திமுக பிடித்து கொண்டு சிலை எல்லாம் வைத்தது

ஆனால் எல்லீஸ் தேடிபிடித்த வள்ளுவனுக்கு பூனூல் இருந்தது, வள்ளுவன் பிராமணன் என்பது அன்றிலிருந்து வந்த சர்ச்சை

அவன் என்ன செய்வான் பாவம்? அவனுக்கு தெரிந்து வாசிக்க தெரிந்தவர்கள் அவனருகே பூனூல் போட்டு அலைந்தார்கள்

இது இங்கு கல்லூரி சான்றிதழ் போல என அவனாக நினைத்துகொண்டிருக்கலாம்

அந்த பூனூல் சான்றோருக்கும் கற்றோருக்கும் அடையாளமாக அணியபட்டது

பிராமணர் மட்டுமல்ல, சிவகாசி நாடார் கூட பூனூல் அணிவார்கள்

பூனூல் என்பது சான்றோரை பிரித்துகாட்ட அன்று பயன்பட்டது, அந்த கலாச்சாரம் அப்படித்தான் இருந்தது

அந்த வெள்ளையன் எல்லீசனுக்கு வள்ளுவன் உருவம் வேண்டி இருந்ததே தவிர, பூனூல் எல்லாம் சிக்கலே இல்லை

பின்னாளில் தமிழன் இப்படி அடித்துகொண்டு சாவான் என தெரிந்திருந்தால் அந்த வெள்ளை தமிழன் எல்லீஸ் அந்த உருவம் தாங்கிய தங்க‌ நாணயத்தை வெளியிட்டிருக்கமாட்டான்

ஒரு வெள்ளையனுக்கு இருந்த பெருந்தன்மையான மனப்பான்மை தமிழருக்கு இல்லை என்பதுதான் சோகம்