திரைச்செய்திகள்

தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சமாம், அதனால் கதை திருட்டு நடக்கின்றதாம்

கதை பஞ்சம் எந்த அளவிற்கு ஆகிவிட்டது என்றால் இந்த ஜெயமோகன் எல்லாம் சினிமா கதை எழுதும் அளவு வந்தாயிற்று

ஆனால் அதே தமிழ்சினிமாவில் வருங்கால முதல்வர்களுக்கு பஞ்சமா என்றால் இல்லை, கேமரா முன் தலை காட்டியவன் எல்லாம் முதல்வர் கனவில் அலையும் ஏரியா அது

கதை திருட்டுக்கு மூலம் என்ன? தவறு எங்கே நடந்தது

இந்த ராமசந்திரன் அழிச்சாட்டியம் கூடவே ரஜினிமாஸ், விஜயகாந்த் அல்ட்ராசிட்டி என தமிழ் சினிமா அரசியலை ஆட்டி படைக்க அனைவரின் கனவும் கதாநாயகன நோக்கியே சென்றது

ஆனால் அதற்கு முந்தைய காலங்கள் அப்படி அல்ல, கதைக்கும் கதாசிரியருக்கும் கொட்டி கொடுக்கபட்ட காலம் அதாவது கதாசிரியருக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்ட காலம்

கலைஞரும் அண்ணாவும் அப்படித்தான் சினிமாவில் நின்றார்கள், பின் கொத்தமங்கலம் சுப்பு திருவாரூர் தங்கராசு என தொடர்ந்தது

பின்னாளில் கூட பலர் வந்தனர், செல்வராஜ் என்பவர் பாரதிராஜாவின் பொற்காலங்களின் அற்புத கதாசிரியர்

சுஜாதா, பாலகுமாரன் காலங்களில் அற்புத படங்கள் வந்தன‌

ஆனால் அதன் பின் அப்படி யாரும் உருவாகவில்லை, வந்தவர்கள் எல்லாம் நேராக முதலமைச்சர் என்ற கனவிற்கு வந்தனர்

இசை அமைப்பாளர்கள் கூட நடிகராகி ஒரே இம்சை..

கதை பஞ்சத்திற்கு ஒரே காரணம் நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கொட்டி கொடுத்த திரையுலகம் கதாசிரியர்களை கண்டு கொள்ளவில்லை என்பதே அன்றி வேறு காரணம் இருக்க முடியாது

கதாநாயகன் இடத்திற்கு இருக்கும் போட்டியும் ஆர்வமும் கதாசிரியர் இடத்திற்கு இல்லை என்பது மாபெரும் சோகம், இவ்வளவிற்கும் படத்தை தாங்குவது கதை

நல்ல கதாசிரியர்களை உருவாக்க தமிழ் திரையுலகம் தவறிவிட்டது, விளைவு ஜெயமோகன் எல்லாம் கதாசிரியர் ஆகிவிட்டார்

நடிகர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்து படத்தின் உண்மையான விஷயமான கதாசிரியர்களை என்று சினிமா கொண்டாடுமோ ? என்று அவர்கள் உரிய அங்கீகாரமும் சன்மானமும் பெறுவார்களோ அன்றுதான் கதை பஞ்சம் ஒழியும்

அதுவரை கதை திருட்டினை தவிர்க்க முடியாது

[ November 3, 2018 ]

============================================================================

பரியேறும் பெருமாள் படம் அப்படி இப்படி என்றார்கள், என்னவெல்லாமோ சொன்னார்கள்

உண்மை யதார்த்தற்கும் படத்திற்கும் வெகுதூரம்

உண்மையில் சாதிபெயரில் தாழ்த்தபட்டவரை ஒரு வார்த்தை சொலிவிட முடியாது, வன்மம் காட்டிவிட முடியாது

சட்டமும் இன்னபிற விஷயங்களும் அவர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பு, நிஜம் என்பது அதுதான்

அதுவும் சட்ட கல்லூரி அதுவும் அம்பேத்கர் சட்ட பல்கலைகழக சட்ட கல்லூரிகளில்
இவ்வாறான விஷயங்களை எல்லாம் நினைத்தே பார்க்கமுடியாது,

படத்தில் காட்டபடுவதை போல் அல்லாமல் தலைகீழாக்த்தான் காட்சிகள் நடக்கும்.

சட்ட பல்கலைகழகமே அம்பேத்கர் பெயரில் இருக்கின்றது, அது போக இட ஒதுக்கீடு முதல் ஏகபட்ட படிகள் இருக்கின்றது

போதாகுறைக்கு சாதிபெயரை சொன்னாலே பிடித்து போட்டு அடிக்க காவல்துறையும் தீர்பளிக்க நீதிமன்றமும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருகின்றது

உண்மை இப்படி இருக்க,அப்படம் என்பது தலித் அனுதாபம் தேட, உண்மையினை வலுகட்டாயமாக புறக்கணித்து சாதியினை சொல்லி வசூலுக்காக எடுக்கபட்ட கற்பனை கதை என்பதை தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை

[ November 3, 2018 ]

============================================================================

சென்னை போலீஸ் ஏன் பல வழக்குகளில் தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது என தெரியவில்லை

மிக சுலபமான வழி இந்த இயக்குநர் வெற்றிமாறனை பிடித்து பெண்டை நிமிர்த்துவது, அப்படி செய்தால் சென்னையின் அனைத்து மர்ம வழக்குகள், கொள்ளைகள், கொலைகள் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிடலாம்

குறிப்பாக வடசென்னை ஏரியா குற்றங்கள்

மனிதர் அந்த அளவு ரவுடிகளோடு பழகாமல் இப்படி படம் எடுக்க முடியாது, ரவுடிகளின் அனைத்து அட்டகாசமும் திட்டமும் கொடூரமும் அவருக்கு தெரிந்திருக்கின்றது

சென்னை பொலீஸ் அவரையும், தென்னக போலீஸ் ஹரி என்பவரையும் போட்டு சாத்தினால் ஏகபட்ட மர்ம முடிச்சுகளை மிக எளிதாக அவிழ்த்துவிடலாம்

[ November 3, 2018 ]

============================================================================

லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும், வந்து சரியா அடிக்கணும் : ரஜினிகாந்த்

என்னது இது?

லேட்டா வருவதே தப்பு இதில் இவர் கரெக்ட் பண்ணிட்டு வேற வருவாராம் , வந்து சரியா வேற‌ அடிப்பாராம்

எதை சரியாக‌ அடிப்பீர் மிஸ்டர் ரஜினிகாந்த்? அதை சத்தமாக சொல்லுங்கள் பார்க்கலாம், குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் காதுக்கு கேட்கும்படி சொல்லுங்கள் [ November 3, 2018 ]

============================================================================

“ஒரு வழியா ரசிகர்கள உசுப்பி விட்டாச்சி, ஆரம்பிச்சிட்டானுக, இனி கொஞ்ச நாளைக்கு அரசியலுக்கு வாங்கன்னு கூப்பிட மாட்டானுக‌

அவனுக போக்கில பேனர் வைப்பானுக, பால் ஊற்றுவானுக, குட்டிகரணம் அடிப்பானுக. எதுவும் செய்யட்டும் நம்மள விட்டா சரி

நாம அப்படியே நைசா கிளம்பி இமயமலைக்கு போக வேண்டியதுதான்”

[ November 3, 2018 ]

============================================================================