திரைப்பட இயக்குனர்களில் மகா முக்கியமானவர் பாசில் ….
தென்னகத்து இயக்குனர்களில் மகா முக்கியமானவர் பாசில்
பூவே பூச்சுடவா, பொம்மு குட்டி அம்மாவுக்கு , காதலுக்கு மரியாதை என மிக நுண்ணிய உணர்வுகளை வெளிபடுத்திய பிரமாதமான இயக்குநர் அவர்
அழகான கதையினை அவர் தெர்ந்தெடுப்பதை விட அதற்கு பொருத்தமான நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுப்பதுதான் அவரின் திறமை.
பூவே பூச்சூடவா பத்மினியும், பொம்முகுட்டி அம்மாவுக்கு சுஹாசினியும் என்றும் நிலைத்த பாத்திரங்கள்….
மானிட வாழ்வின் பாச உணர்வுகளை அப்படி அழகாக படமாக்கியவர்,அற்புதமான படங்களை கொடுத்த அவரை மறக்கவே முடியாது
அதுவும் “வருஷம் 16” எனும் படத்தில் குஷ்பூவினை கொண்டுவந்த அவரை, நமக்கெல்லாம் குஷ்பூவினை மிக அழகாக மனதில் பதியவைத்த அவரை ஒரு குஷ்பூவின் தீவிர ரசிகனால் மறக்க முடியுமா?
அவர் என்றுமே குஷ்பூ ரசிகர்களின் பெரும் நன்றிக்குரியவர் என்பது மறுக்கமுடியாதது..
மனிதர் எவ்வளவு பெரும் ரசிகனாக இருந்திருந்தால் அந்த படத்தில் குஷ்பூவினை மிக சரியாக கொண்டுவந்திருப்பார்?
இன்றும் அவர் குஷ்பூவினை வைத்து “வருஷம் 46” என அடுத்த படம் எடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்..
குஷ்பூ ரசிகர்களின் சார்பாக அப்படி ஒரு கோரிக்கை வைக்கலாம் என தீவிரமாக சிந்திக்கின்றோம்
விரைவில் சங்கம் கூடி முடிவெடுக்கும்…