திரையுலகம் ஏன் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை?

கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய திரையுலகம் ஏன் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை என ஒரு சிலர் குறைபட்டுகொள்ளுகின்றார்கள்

திரையுலகம் ஒன்றும் தேசபற்று நிரம்பிய இயக்கமோ இல்லை இந்திய அரசுதுறையோ, சேவை துறையோ அல்ல‌

அது ஒரு கலை துறை. அதில் தங்கள் துறையில் இருந்து உச்சம் சென்ற ஒருவருக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள்

அவர்கள் என்ன காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், கலாம் என அகில இந்திய அடையாளங்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்களா?

அவ்வளவு நல்லவர்களா என்றால் சுத்தமாக இல்லை

கலைஞருக்கு அவர்கள் நன்றிகடன் பட்டிருக்கின்றார்கள். கூத்தாடி கூட்டம் என்றிருந்த அந்த கூட்டத்தை கலை உலகம் , கலை குழு என அடையாளம் கொடுத்தது அவர்தான்

கூத்தாடி கூட்டத்திலிருந்தும் நாடாள ஒருவன் வரமுடியும் என காட்டியதும் அவர்தான்

அவர் காட்டிய வழியில்தான் ராமசந்திரன், ஜாணகி, ஜெயா என சகலரும் வந்தார்கள்

சிஸ்டமும் , மையமும், இளைய தலைவலியும் இன்னபிறவும் சில கனவில் மிதப்பது அவர் காட்டிய வழிதான்

சாதாரண கூத்தாடி கூட்டம் அரசை ஆட்டுவிக்கலாம் என செய்து காட்டியது அவர்தான்

இந்தியாவில் வியாபாரியாக வந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடித்தளமிட்ட கிளைவ் போல கலைஞர் கலை உலகம் தமிழகத்தை ஆளமுடியும் என செய்து காட்டினார்

அந்த நன்றிக்கு வணங்குகின்றார்கள்

மற்றபடி வாஜ்பாயினை அவர்கள் ஏன் வணங்க வேண்டும்? அவ்ர்கள் ஒன்றும் நல்லவர்களுமல்ல, தேச பற்றாளர்களுமல்ல‌

வாஜ்பாய் என்ன இவர்களோடு நடித்தாரா? டூயட் பாடினாரா? இல்லை வசனம் எழுதினாரா? ஒன்றுமே இல்லை

அவர்கள் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தாமல் இருந்தால், அதுதான் வாஜ்பாய்க்கான பெரும் மரியாதை