தில்லையாடி வள்ளியம்மை
வெள்ளையன் உலகெல்லாம் ரப்பர் தோட்டம் தேயிலை தோட்டம் சுரங்க வேலை என சகலத்திற்கும் தமிழரையே அழைத்து சென்றான்
தமிழன் அரச விசுவாசம் கொண்டவன், கடும் உழைப்பாளி என்ற அபிமானம் ஆங்கிலேயருக்கு அதிகமாக இருந்தது. கயானா முதல் பிஜி தீவுகள் வரை தமிழர்கள் பரவியது இப்படித்தான்
அப்படி ஏகபட்ட தமிழர்களை தென்னாப்ரிக்காவுக்கும் கொண்டு சென்றான், அதில் மயிலாடுதுறையினை அடுத்த தில்லையாடி கிராமத்தை சேர்ந்த முனுசாமி. அவருக்கு ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர்தான் வள்ளியம்மை
பிறந்தது இதே பிப்ரவரி 22.
அவள் பிறக்கும்பொழுது தென்னாப்ரிகாவில் இனவெறியும் வெள்ளையனின் மதவெறியும் உச்சத்தில் இருந்தது, வெள்ளையரை தவிர யாரையும் மிருகத்தை போல அவர்கல் நடத்திய காலகட்டம் அது
காந்தி அப்பொழுதுதான் போராட்டத்தை தொடங்கியிருந்தார், அப்பொழுது இன்னொரு கட்டுபாட்டையும் வெள்ளை அரசு இட்டது
அதாவது கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கும் திருமணமே செல்லும் என்றும் இந்துக்கள் வீட்டில் நடத்தும் திருமணம் செல்லாது எனவும் அறிவித்தது
கூடவே கொடுமையான வரிவிதிப்புகள், மற்ற இனத்தவர் மேல் கொடூர அடக்குமுறை
இதை எல்லாம் கண்டித்து போராட்டம் வெடித்தது, வள்ளியம்மைக்கு அப்பொழுது 15 வயதுதான் இருக்கும் ஆனால் அச்சூழல் அவளுக்கு மான உணர்ச்சியினையும் இந்தியருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியினையும் ஏற்படுத்தியது
காந்தி போராட்ட குழுவுக்கு தலைவரானார், அவருடன் எங்கு சென்றாலும் துணை சென்றாள் வள்ளியம்மை. ஒரு ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு எதிராக துப்பாக்கி தூக்கினான் ஆங்கிலேய அதிகாரி, குறுக்கே வந்து நின்றாள் “என்னை சுட்டுவிட்டு அவரை சுடு” என அவள் சொன்னபொழுது அவளின் துணிச்சல் பெரும் பெயரை கொடுத்தது
கூட்டம் அவளை கொண்டாடியது, காந்திக்கு அவள் பேரில் தனிபாசமே வந்தது
எங்கு போராட்டம் என்றாலும் செல்வாள் வள்ளியம்மை “ஒரு கொடி கூட இல்லா அடிமை தேசத்து அடிமை நீ, நீ எல்லாம் பேசுகின்றாயா? உனக்கேன் உரிமை” என அந்த அதிகாரி கேட்க , தன் சேலையினை கிழித்து அவன் முகத்தில் எரிந்து இந்த மானமே எம் கொடி என முகத்தில் அறைந்து சொன்னாள்
மிக சிறிய வயதிலே போராட்டத்தில் அவள் பங்கெடுப்பதும், ஓடியாடி வேலை செய்வதும் வெள்ளையருக்கு அச்சத்தை கொடுத்தன
ஒரு போராட்ட நிகழ்வில் அவளை கைது செய்து சிறையில் அடைத்தார்கள், அங்கு கிட்டதட்ட வ.உ.சி பாணியில் அவள் கொடுமைபடுத்தபட்டாள்
20 மணிநேர வேலை, சரியான உணவோ ஓய்வொ இல்லை, சுகாதாரமற்ற சிறை எல்லாம் அவளை நோயாளியாக்கின
பதறிய மக்களும் காந்தியும் அவளை பிணை எடுக்க முயன்றனர், அரசும் அனுமதித்தது
அவளோ கோரிக்கை ஏற்படும் முன் விடுதலை ஆவது இல்லை என உறுதியாக நின்றாள், காந்தியே நேரில் சென்று அவளை விடுதலையாக வற்புறுத்தினார்
அஹிம்சை போதித்த நீங்களே என்னை போராட்டத்தை கைவிட சொல்கின்றீர்களா? நாளை ஒரு போராடத்தில் உங்கள் நிலையும் இப்படி இருந்தால் உயிர்பிழைக்க வேண்டி போராட்டத்தை விட்டுவிடுவீர்களா?
அவள் கேட்ட கேள்வியில் வாய்மூடினார் காந்தி, தான் அவள் மனதில் எந்த அளவு பதிந்திருக்கின்றோம் என்பது அவரை கண்ணீர் விட செய்தது
ஆம், அவளே காந்திக்கு சத்தியாகிரகத்தின் வலிமையினை முதலில் சொன்னவள்
அவள் சிறையில் சத்தியாகிரகம் இருக்க, தென்னாப்ரிக்க இந்தியரிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டது, காந்தி தலமையேற்றார்
அதன்பின் அந்த வரி நீக்கபட்டது, மகிழ்வுடன் வெளிவந்தாள் வள்ளியம்மை
அஹிம்சையின் வெற்றியினை எனக்கு உணர்த்திய தெய்வம்மா நீ என அணைத்துகொண்டார் காந்தி
அஹிம்சை எவ்வளவு பெரும் ஆயுதம் என அவர் அனுபவ பூர்வமாக கண்டுகொண்டது அங்குதான்
சிறைவாசமும் அஹிம்சை போராட்டமும் வள்ளியம்மைக்கு பெரும் நோயினை கொடுத்தது, அதிலிருந்து அவள் மீள முடியவில்லை
இதே பிப்ரவரி 22ம் நாள் மரித்தும் போனாள், ஆனால் அவள் ஏற்றிவைத்த எழுச்சி முதலில் காந்திக்கு வெற்றியாகவும் பின்னாளில் மண்டேலாவுக்கு வெற்றியாகவும் முடிந்தது
இருவருமே தயக்கமின்றி வள்ளியம்மையின் தியாக வாழ்வினை முன்மாதிரியாக கொண்டவர்கள்
தென்னாப்ரிக்காவில் வென்ற காந்தி அந்த உத்வேகத்துடன் இந்தியா வந்தார், 1915ல் இந்தியா வந்த காந்தி தன் மனைவியுடன் நேரே மயிலாடுதுறை வந்து தில்லையாடிக்கு சென்றார்
அந்த மண்ணை குனிந்து முத்தமிட்டார் , கண்ணீர் சிந்தினார். “தமிழகத்து வள்ளியம்மையே பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்
அப்படி ஒரு மனஉறுதியினை நான் யாரிடமும் கண்டதில்லை, அவரே நான் கொண்ட மனவுறுதிக்கும் பெற்ற வெற்றிகளுக்கும் காரணம்” என மனம் திறந்து சொன்னார்
அந்த மண்ணை வள்ளியம்மை நினைவாக வணங்கிவிட்டே மாபெரும் போராட்டத்தை எடுத்தார் காந்தி, அதில் வெற்றியும் பெற்றார்
மகாத்மா காந்தி எனும் மாமனிதனின் வாழ்க்கையில் பெரும் நெருப்பை ஏற்றிவைத்த தீக்குச்சி வள்ளியம்மை, அதில் மாற்றுகருத்து இருக்கவே முடியாது
நிச்சயம் வள்ளியம்மை பெரும் தியாகி, மானமும் வீரமும் கொண்ட தமிழச்சி
ஆனால் தமிழர் என அழிச்சாட்டியம் செய்யும் கும்பல் யாராவது அவரை நினைவு கூர்வார்களா? அவளின் தியாகத்தை எடுத்து சொல்வார்களா? என்றால் இல்லை
காரணம் அவள் காந்தியவாதி வெற்றிபெற்ற காந்தியவாதி, அவளை விட தோற்றுபொன பயங்கரவாதிகளே இவர்கள் கண்ணுக்கு தெரியும்
அடக்குமுறைக்கு எதிரான அஹிம்சை போராட்டத்திலும், உலகிற்கே அப்போராட்டத்திற்கு முன்மாதிரியான பெண் ஒரு தமிழச்சி என்பதில் நிச்சயம் நமக்கெல்லாம் பெருமையே
அவள் காட்டிய வழியே தென்னாப்ரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் விடிவினை கொடுத்தது
வெறும் 16 ஆண்டுகளே வாழ்ந்தாலும் வரலாற்றில் தீரா இடம் பிடித்த அந்த சத்யாகிரக தமிழச்சிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
காந்தி பெயர் உள்ளளவும் அவள் தியாகமும் நிலைத்திருக்கும்.
February 22, 2024
18ம் நூற்றாண்டில் பல நாடுகளை பிடித்த பிரிட்டிசார்.
அங்கெல்லாம் ரப்பர் தோட்டம் தேயிலை தோட்டம் சுரங்க வேலை என பல வேலைகளை தொடங்கினார்கள்.
அப்படி தொடங்கினாகளே தவிர வேலைக்கு ஆட்கள் என் அவர்களிடம் யாருமில்லை, சம்பந்தபட்ட இடத்திலும் யாருமில்லை
அப்படியான காலகட்டத்தில்தான் பரதேசி படத்தில் வருவது போல இந்தியாவில் இருந்து மக்களை உலகெல்லாம் அழைத்து சென்றான்.
அவன் வரும் காலம் வரை இந்தியமக்கள் இடம்பெயர அவசியமில்லை, அது வளமான இந்தியாவாக இருந்தது, அவன் அந்து உறிஞ்சியபின்பே இந்தியா வறட்சியானது
மொகலாயர் இந்துக்கள் மோதலின் போர், பிரிட்டிடிசார் போர் என போர்கள் மிகுந்த காலத்தில் அவன் கடும் வரிகளை வசூலித்தான்
அந்த வரிதான் இந்தியாவினை வறுமையில் தள்ளிற்று
அந்த வறுமைக்கு காரணம் சாதி, இந்துமதம் பார்ப்பான் என என சகலத்திற்கும் தமிழரையே அழைத்து சென்றான்
அப்படி சென்றோரில் தமிழர்கள் அதிகம்
தமிழன் அரச விசுவாசம் கொண்டவன், கடும் உழைப்பாளி என்ற அபிமானம் பிரிட்டிசாருக்கு அதிகமாக இருந்தது. கயானா முதல் பிஜி தீவுகள் வரை தமிழர்கள் பரவியது இப்படித்தான்
அப்படி ஏகபட்ட தமிழர்களை தென்னாப்ரிக்காவுக்கும் கொண்டு சென்றான், அதில் மயிலாடுதுறையினை அடுத்த தில்லையாடி கிராமத்தை சேர்ந்த முனுசாமி. அவருக்கு ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர்தான் வள்ளியம்மை
பிறந்தது இதே பிப்ரவரி 22, 1898
அவள் பிறக்கும்பொழுது அங்கு இன ஆடிப்படையில் பாகுபாடும்,பிரிட்டிசாரின் ஏகாதிபத்திய ஆட்சி வெறி,மதவெறியும் உச்சத்தில் இருந்தது, பிரிட்டிசாரைதவிர தவிர யாரையும் மிருகத்தை போல அவர்கள் நடத்திய காலகட்டம் அது
ஆம், இங்கே பிரிட்டிசார் வரவில்லை என்றால்.. என ஓலமிடும் கும்பல் அதே பிரிட்டிஷ்காரன் தென்னாப்ரிக்காவில் என்ன செய்தான் எனப்தை சொல்லமாட்டார்கள்
அங்கே வழக்கறிஞர் தொழில் செய்து பிழைக்க சென்ற காந்தி அப்பொழுதுதான் போராட்டத்தை தொடங்கியிருந்தார், அப்பொழுது இன்னொரு கட்டுபாட்டையும் பிரிட்டிசார் அரசு இட்டது
அதாவது கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கும் திருமணமே செல்லும் என்றும் இந்துக்கள் வீட்டில் நடத்தும் திருமணம் செல்லாது எனவும் அறிவித்தது
இந்துமதத்தை அழிக்க இந்திய அடையாளத்தை அழிக்க அந்த அறிவிப்பினை பிரிட்டிசார் வெளியிட்டனர்
கூடவே கொடுமையான வரிவிதிப்புகள், மற்ற இனத்தவர் மேல் கொடூர அடக்குமுறை
இதை எல்லாம் கண்டித்து போராட்டம் வெடித்தது, வள்ளியம்மைக்கு அப்பொழுது 15 வயதுதான் இருக்கும் ஆனால் அச்சூழல் அவளுக்கு மான உணர்ச்சியினையும் இந்தியருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியினையும் ஏற்படுத்தியது
காந்தி போராட்ட குழுவுக்கு தலைவரானார், அவருடன் எங்கு சென்றாலும் துணை சென்றாள் வள்ளியம்மை. ஒரு ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு எதிராக துப்பாக்கி தூக்கினான் ஆங்கிலேய அதிகாரி, குறுக்கே வந்து நின்றாள் “என்னை சுட்டுவிட்டு அவரை சுடு” என அவள் சொன்னபொழுது அவளின் துணிச்சல் பெரும் பெயரை கொடுத்தது
கூட்டம் அவளை கொண்டாடியது, காந்திக்கு அவள் பேரில் தனிபாசமே வந்தது
எங்கு போராட்டம் என்றாலும் செல்வாள் வள்ளியம்மை “ஒரு கொடி கூட இல்லா அடிமை தேசத்து அடிமை நீ, நீ எல்லாம் பேசுகின்றாயா? உனக்கேன் உரிமை” என அந்த அதிகாரி கேட்க , தன் சேலையினை கிழித்து அவன் முகத்தில் எரிந்து இந்த மானமே எம் கொடி என முகத்தில் அறைந்து சொன்னாள்
மிக சிறிய வயதிலே போராட்டத்தில் அவள் பங்கெடுப்பதும், ஓடியாடி வேலை செய்வதும் பிரிட்டிசாருக்கு அச்சத்தை கொடுத்தன
ஒரு போராட்ட நிகழ்வில் அவளை கைது செய்து சிறையில் அடைத்தார்கள், அங்கு கிட்டதட்ட வ.உ.சி பாணியில் அவள் கொடுமைபடுத்தபட்டாள்
20 மணிநேர வேலை, சரியான உணவோ ஓய்வொ இல்லை, சுகாதாரமற்ற சிறை எல்லாம் அவளை நோயாளியாக்கின
பதறிய மக்களும் காந்தியும் அவளை பிணை எடுக்க முயன்றனர், அரசும் அனுமதித்தது
அவளோ கோரிக்கை ஏற்படும் முன் விடுதலை ஆவது இல்லை என உறுதியாக நின்றாள், காந்தியே நேரில் சென்று அவளை விடுதலையாக வற்புறுத்தினார்
நீங்களே என்னை போராட்டத்தை கைவிட சொல்கின்றீர்களா? நாளை ஒரு போராடத்தில் உங்கள் நிலையும் இப்படி இருந்தால் உயிர்பிழைக்க வேண்டி போராட்டத்தை விட்டுவிடுவீர்களா?
அவள் கேட்ட கேள்வியில் வாய்மூடினார் காந்தி, தான் அவள் மனதில் எந்த அளவு பதிந்திருக்கின்றோம் என்பது அவரை கண்ணீர் விட செய்தது
ஆம், அவளே காந்திக்கு மக்கள் போராட்டத்தின் வலிமையினை முதலில் சொன்னவள்
அவள் சிறையில் வாடி இருக்க, தென்னாப்ரிக்க இந்தியரிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டது, காந்தி தலமையேற்றார்
அதன்பின் அந்த வரி நீக்கபட்டது, மகிழ்வுடன் வெளிவந்தாள் வள்ளியம்மை
மக்கள் போராட்டத்தின் வெற்றியினை எனக்கு உணர்த்திய தெய்வம்மா நீ என அணைத்துகொண்டார் காந்தி
மக்கள் சக்தி எவ்வளவு பெரும் ஆயுதம் என அவர் அனுபவ பூர்வமாக கண்டுகொண்டது அங்குதான்
சிறைவாசமும் அஹிம்சை போராட்டமும் வள்ளியம்மைக்கு பெரும் நோயினை கொடுத்தது, அதிலிருந்து அவள் மீள முடியவில்லை
இதே பிப்ரவரி 22ம் நாள் மரித்தும் போனாள், ஆனால் அவள் ஏற்றிவைத்த எழுச்சி முதலில் காந்திக்கு வெற்றியாகவும் பின்னாளில் மண்டேலாவுக்கு வெற்றியாகவும் முடிந்தது
இருவருமே தயக்கமின்றி வள்ளியம்மையின் தியாக வாழ்வினை முன்மாதிரியாக கொண்டவர்கள்
தென்னாப்ரிக்காவில் வென்ற காந்தி அந்த உத்வேகத்துடன் இந்தியா வந்தார், 1915ல் இந்தியா வந்த காந்தி தன் மனைவியுடன் நேரே மயிலாடுதுறை வந்து தில்லையாடிக்கு சென்றார்
அந்த மண்ணை குனிந்து முத்தமிட்டார் , கண்ணீர் சிந்தினார். “தமிழகத்து வள்ளியம்மையே பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்
அப்படி ஒரு மனஉறுதியினை நான் யாரிடமும் கண்டதில்லை, அவரே நான் கொண்ட மனவுறுதிக்கும் பெற்ற வெற்றிகளுக்கும் காரணம்” என மனம் திறந்து சொன்னார்
அந்த மண்ணை வள்ளியம்மை நினைவாக வணங்கிவிட்டே மாபெரும் போராட்டத்தை எடுத்தார் காந்தி
ஆனால் கவனியுங்கள், ஆழ கவனியுங்கள்
வள்ளியம்மை போராட முதல் காரணம் அந்த திருமண சட்டம், அதாவது கிறிஸ்துவ முறை திருமணம் செல்லும் இந்து திருமணம் செல்லாது என அறிவிக்கபட்ட சட்டம்
அது இந்துமதத்தை அழிக்கும் சட்டம், அச்சட்டபடி இந்து திருமணம் செல்லாது இந்து குழந்தைகள் வராது அம்மதமே அழியும்
அதைத்தான் எதிர்த்து போராடி செத்தாள் வள்ளியம்மை, அவள் சாவும் தியாகமும் இந்துமதத்துக்கானது
ஆனால் அதை வரலாறும் பேசவில்லை, காந்தியாரும் பேசவில்லை
அகிம்சா மூர்த்தி, உண்மை விளம்பி, தியாக சீலர், மகாத்மா என்றெல்லாம் போற்றபட்ட காந்தி இந்த சட்டம் பற்றி, வள்ளியம்மை ஏன் செத்தாள் என்பது பற்றி ஒருவார்த்தை பேசவே இல்லை
அது ஏன் என்பதுதான் மாபெரும் மர்மம்
இன்று தென்னாப்ரிக்காவில் இந்துக்கள் உண்டு, இந்து கோவில்களும் இந்து வம்சாவழிகளும் உண்டு, தென்னாப்ரிக்காவில் இந்துமதம் வாழ்கின்றது
அது வாழ உயிர்கொடுத்தவள் அந்த வள்ளியம்மை
இந்து திருமணம் செல்லாது, இந்துக்களுக்கு வரி அதிகம் என இந்து அடையாளத்தை ஒழிக்க இடபட்ட சட்டத்தை எதிர்த்தே அவள் உயிர்விட்டாள்
ஆம், அவள் இந்துக்களை காக்கத்தான் தன் 16 வயதிலே போராடி செத்தாள்
சோழநாட்டின் சைவ அடியார்களின் ஒருத்தியாக அந்த பரம்பரையில் வந்தவள் தன் மதமும் அடையாளமும் காக்கத்தான் செத்தாள்
காந்தி கடைசிவரை அதை ஏன் சொல்லவில்லை என்பதில்தான் தெரிகின்றது, அவர் இந்திய இந்துக்களுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை என்பது
இந்துக்களாய் வாழ்கின்றோம் என்றுதான் தென்னாப்ரிக்கா தமிழர்கள் போராடினார்கள், அந்த போராட்டத்தில் உள்ளே புகுந்தவர் காந்தி
வள்ளியம்மை சத்தியாகிரகம் செய்தாள்,அதாவது தான் சாககிடந்து இந்துக்களிடையே எழுச்சி கொடுத்தாள்
அந்த எழுச்சியில்தான் இந்துக்கள் தங்கள் உரிமையினை மீட்டனர் ஆனால் அவள் 16 வயதிலே செத்துவிட்டாள்
ஆக அந்த எழுச்சி இந்து எழுச்சி அதை கொடுத்தவள் இந்து தமிழச்சி
நம்புகின்றிர்களோ இல்லையோ காந்தி இல்லாவிட்டாலும் அது வெற்றிபெற்றிருக்கும், காரணம் பிரிட்டிசாருக்கு சுரங்க வேலை உள்பட எல்லா வேலையும் நடக்க வேன்டும் அதற்கு ஆட்கள் வேண்டும்
இந்துக்களாக இருந்தாலும் சரி வேலை நடக்கட்டும் என அவன் இறங்கிவந்தான், அந்த அளவு எழுச்சியினை அவள் கொடுத்திருந்தாள்
அவர்கள் தனிநாடு கேட்கவில்லை, விடுதலை கேட்கவில்லை,தங்க வைர சுரங்கம் கேட்கவில்லை
கேட்டதெல்லாம் எங்களை இந்துக்களாய் வாழவிடுங்கள் உங்களுக்கு மாடாய் உழைகின்றோம் என்பதை மட்டுமே
வியாபார கணக்கில் பிரிட்டிசார் அதை அனுமதித்தனர், இது காந்தி இல்லாவிட்டாலும் நடந்திருக்கும்
ஆக இந்து எழுச்சி ஒன்றில் உட்புகுந்து இந்து எழுச்சியினை எப்படி அடக்கவேண்டும் என அங்கே பரிசீலித்து பார்த்து அதை இந்தியாவில் செய்துவிட்டார் காந்தி எனப்தை தவிர சொல்ல ஒன்றுமில்லை
அந்த இந்து எழுச்சியினை இங்கு எழாதவாறு பார்த்துகொண்டார், ஆனால் இஸ்லாம் எழுச்சியினை அவரால் தடுக்கமுடியவில்லை பாகிஸ்தானை அனுமதித்துவிட்டு செத்துபோனார்
அவர் கடைசி நொடியில் என்ன நினைத்தாரோ தெரியாது, ஆனால் இந்துக்களுக்காக உயிர்விட்டு தனக்கொரு அடையாளம் தந்த அந்த வள்ளியம்மை முகம் வந்திருக்கும்
அப்படியானவள் கொடுத்த அடையாளத்தில் இந்து குடியரசு என இந்துக்களுக்கு ஒன்று தராமல் போகின்றோமே எனும் வலி வந்திருக்கும்
என் மக்கள் இந்துக்களாக வாழ நான் சாகின்றேன் என் அவள் செத்தாளே, ஆனால் இந்தியா இந்துநாடு என அறிவிக்கபடாமல் அப்படி ஒரு எழுச்சியினை கொடுக்காமல் சாகின்றோமே எனும் குற்ற உணர்ச்சி வந்திருக்கும்
கோட்சே அவரை சுட்டிருக்க கூடாது, இந்த கேள்விகளை கேட்டிருந்தால் காந்தியே அந்த துப்பாக்கியினை வாங்கி தன்னை சுட்டு செத்திருப்பார் , அவன் வாழ்ந்திருப்பான்
வரலாற்றில் எத்தனையோ விஷயங்கள் மறைக்கபட்டன, அதில் முக்கியமானது வள்ளியம்மை இந்துமதம் வாழ போராடி செத்தாள் என்பது
இன்று அவள் பிறந்த நாள், 16 வயதிலே அவள் இறந்த நாளும் கூட
தென்னாப்ரிக்காவில் இந்தியருக்கு உரிமைபெற போராடினாள் வள்ளியம்மை ஆனால் எந்த உரிமை பெற போராடினாள் என்றால் இந்துவாக வாழ்ந்து இந்துவாக சாகும் உரிமைக்காக போராடினாள்
அப்படி வாழ்ந்து 16 வயதிலே செத்துவிட்ட அந்த் மங்கையர்கரசிக்கூ ஆழ்ந்த அஞ்சலிகள், அந்த காசிநாதன் அவளை மீண்டும் இந்து இந்தியாவில் பிறக்கவைக்கட்டும்
வாழாத வாழ்வெல்லாம் வாழ்ந்து இந்துவாக பெருவாழ்வு வாழ்ந்து அந்த ஆத்மா மகிழ்ந்து செல்லட்டும்
வெளிநாட்டு இந்தியர்கள் பலரை பல நாடுகளில் பார்க்கலாம், அவர்கள் 18ம் நூற்றாண்டில் அப்படி தொழிலாளிகளாக வரும்போது அவர்களிடம் பணம் இல்லை, நகை இல்லை, படிப்பு இல்லை
பிரிட்டிசாரால் சுரண்ட்பட்ட இந்தியா ஏழை தேசமாகி கிடந்தபோது இவர்களிடம் ஏதுமில்லை
உடல் உயிர் என இரண்டை மட்டும் கொண்டு கிளம்பியவர்கள் இன்னொன்றை மட்டும் தங்களோடு எடுத்து வந்தார்கள் அது இந்துமதம்
அதுதான் இந்துக்கள், அதுதான் இந்துஸ்தான ரத்தத்தில் வந்த உணர்வு
எல்லாம் இழந்தாலும் அவர்கள் இந்து உணர்வை இழக்கவில்லை. அதுதான் இன்று உலகெங்கும் அவர்கள் சென்ர இடமெல்லாம் இந்து ஆலயங்களாக எழுந்து நிற்கின்றது
அது மலேயா, சிங்கப்பூர், பிஜி, ரியூனியன் ஐலன்ட், ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவு என எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் இந்த்மதமாக நிற்கின்றது
பார்ப்பனர்கள் தங்கள் சுயநலனுக்காக இந்துமதத்தை இவர்கள்மேல் திணித்தார்கள் என்பது உண்மையாக இருந்தால் , பார்ப்பண ஆதிக்கமே இல்லாத ஏன் பார்ப்பணனே இல்லாத அந்நிய நாட்டில் எப்படி இவர்கள் இந்துக்களாக நீடித்திருப்பார்கள்?
அதுவும் இப்படி உணர்வுள்ள இந்துக்களாக இன்றுவரை நிற்பார்கள்?
இந்துக்கள் எல்லாவற்றையும் இந்துமதத்துக்காக இழபபர்கள், அவர்கள் ஆட்சி, படிப்பு, பொருள், உரிமை, செல்வம் , வாழ்வு என எல்லாமும் இழப்பார்கள்
ஆனால் இந்துமதத்தை ஒருகாலமும் இழக்கமாட்டார்கள் அது அவர்கள் உயிரில் கலந்த விஷயம் என்பதை தென்னாபிரிக்காவில் முதன் முதலில் காட்டியவள் வள்ளியம்மை.