தீன் மூர்த்தி பவன் பிரச்சினை

Image may contain: one or more people, people standing, tree and outdoor

தீன் மூர்த்தி பவன் பிரச்சினையினை மன்மோகன் சிங் கிளப்பியதிலிருந்து டெல்லி அரசியல் சூடுபிடிகின்றது

அதாவது நேரு வசித்த அந்த வீட்டினை மத்திய அரசு செப்பனிட போகின்றது, அதில் நேருவின் அடையாளங்கள் காக்கபட வேண்டும் என காங்கிரஸ் போர்கொடி தூக்குகின்றது

ஒரு சிலர் ஒருபடி மேலேபோய் அது நேருவின் குடும்ப சொத்து என்றே சொல்ல தொடங்கியாயிற்று

முதலில் இந்த தீன் மூர்த்தி என்றால் என்ன? தீன் மூர்த்தி பவன் என்றால் என்ன என பார்க்கலாம்

அப்பொழுது முதல் உலகப்போர் நடந்தது, அதற்கு முன் 1906ல் வங்கம் பிரிக்கபட்டது, அதுவரை கல்கத்தாவே வெள்ளையர்களின் குளிர்கால தலைநகரம், கோடை கால தலைநகரம் சிம்லா

Image may contain: sky, cloud and outdoorமுன்பு ஜெயலலிதா வெயில்காலம் என்றால் சட்டசபையினை கொடநாட்டுக்கும், மழைகாலம் என்றால் சென்னைக்கும் மாற்றுவார் அல்லவா? அப்படி

வங்கம் பிரிந்த சிக்கல், ஆங்காங்கே நடந்த கலவரம் இது போக பெரிய இந்தியாவினை நிர்வகிக்கும் சிக்கல் என 1911ல் இந்திய தலைநகரை டெல்லிக்கு மாற்றினர் பிரிட்டிசார்

அவர்கள் மாற்றிய நேரம் முதல் உலகப்போர் வெடித்தது, அப்பொழுது ஆட்டோமான் சாம்ராஜ்யத்தை எதிர்த்து பிரிட்டன் புரிந்த போரில் இந்தியாவின் மூன்று சமஸ்தானம் தன் வீரர்களை வெள்ளையருக்கு அனுப்பியது

மைசூர், ஹைதரபாத், ஜோத்பூர் சமஸ்தானம் அவை

எந்த இடத்திற்கு அனுப்பியது என்றால் இன்றைய இஸ்ரேலும் அன்றைய பாலஸ்தீனுமான ஹைபா துறைமுகத்தை ஆட்டோமன் மற்றும் ஜெர்மன் ஆஸ்திரியா ஹங்கேரியிடம் இருந்து பிரிட்டன் மீட்ட இடமான களத்திற்கு அனுப்பியது

போரில் வென்றது பிரிட்டன்,இதில் இந்திய சமஸ்தான வீரர்களின் பங்கு அதிகம்

Image may contain: sky and outdoorஇதனால் டெல்லியில் அந்த மூன்று மாநில வீரர்கள் நினைவாக மூன்று அடையாளம் என மூன்று சிலைகள் அமைக்கபட்டு தீன் மூர்த்தி நினைவுதூண் அமைக்கபட்டது

பின் 1930ல் அரசாங்க காரியங்களுக்காக ஒரு அலுவலகம் அந்த சாலையில் கட்டபட்டு அது தீன் மூர்த்தி இல்லமும் ஆனது

இந்த தீன்மூர்த்தி இல்லம் பின்னாளில் கட்டுபாட்டு மையம் ஆனது, சுதந்திரத்திற்கு பின் பிரதமராக நேரு அதில் வசித்தார், அவர் மறைவுக்கு பின் காங்கிரசார் ஏதோ நேருதான் அதை கட்டியது போல அது அவர் நினைவாலையம் என்றனர்

சென்னை மவுண்ட் ரோட்டை ஏதோ அண்ணா நிர்மானித்தது போல அண்ணா சாலை ஆக்கினார்கள் அல்லவா? அப்படி

இப்பொழுது இதை சீரமைக்க போகின்றது மத்திய அரசு

இந்த தீன் மூர்த்தி இல்லத்தை இப்பொழுது சீரமைக்கும்பொழுது நேருஅடையாளம் அழிந்துவிடும் அல்லது பாஜக அரசு அழித்துவிடும் என பொங்கி கொண்டிருக்கின்றது காங்கிரஸ்

ஆக நேருவின் புகழ் நாட்டு மக்களிடம் இல்லை, ராகுலிடம் இல்லை மாறாக அந்த வெள்ளையன் மாளிகையில் இருப்பதாக அது நம்புகின்றது

எப்படி ஆயினும் நேருவின் அடையாளம் அழிக்கபடாமல் அது புதுப்பிக்கபடட்டும்

பாஜகவினையும் நம்ப முடியாது, காரணம் கொஞ்ச நாளைக்கு முன்பு அந்த இஸ்ரேலிய பிரதமர் நேத்தன்யாகு இந்தியா வந்திருந்தபொழுது ஹைபா போரில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அந்த தீன் மூர்த்தி ஸ்தம்பம் வந்திருந்தார்

காரணம் யூதர்களுக்கு அப்போர் முக்கியமானது ஹைபாவில் பெற்ற வெற்றியே பாலஸ்தீன் ஆட்டோமன் துருக்கியரிடம் இருந்து பாலஸ்தீன் பிரிட்டன் வசமாக உதவியது, அதன் பின் இஸ்ரேல் ஆனது

அவ்வகையில் இஸ்ரேல் விடுதலைக்கு முக்கியமானது அந்த வெற்றி, இதனால் நேதன்யாகு நன்றியோடு அங்கு சென்றார்

அப்பொழுது மோடி தீன் மூர்த்தி பகுதியினை தீன் மூர்த்தி ஹைபா பகுதி என சொல்லி நேதன்யாகுவினை மகிழ்ச்சிபடுத்தினார்

அப்படிபட்ட மோடி அரசு ஏதும் செய்துவிடுமோ என காங்கிரஸ் அஞ்சுகின்றது

நாம் காங்கிரசாரிடம் கேட்பது எல்லாம் ஒரே கேள்விதான்

வெள்ளையன் கட்டி நேரு வசித்த மாளிகையினை தொட கூடாது ஆனால் மதுரையில் மங்கம்மாள் கட்டி ஆண்ட அவள் மாளிகையினை எளிதாக காந்தி மியூசியம் என மாற்றியது சரி அப்படித்தானே?

மங்கம்மாளின் அடையாளம் துடைக்கபடுத்தான் காந்தி மியூசியமாக அது மாறிற்று,

காந்திக்கும் அந்த மாளிகைக்கும் என்ன தொடர்பு?

காந்திக்கு மதுரையில் ஒரு மாளிகை கட்டினால்தான் என்ன? மங்கம்மா அரண்மனையினைத்தான் பிடுங்க வேண்டுமா?

காங்கிரஸ் அரசு செய்தால் சரி, ஆனால் பாஜக அரசு செய்தால் தவறா?

என்ன நியாயமோ இதெல்லாம்….