தீபா மாதவன் காமெடிகள் …..

Image may contain: 5 people, people sitting

நாட்டில் மகா சீரியசான விஷயங்கள் நடந்தாலும் காமெடி விஷயங்களுக்கும் பஞ்சமில்லை

இந்த தீபா என்பவர் காமெடி ரகம் என்றால் அவரை சுற்றி நடப்பவைகளும் அதே ரகம். ஜெயலலிதா சாகும்வரை தீபா தெரியாது, மாதவனும் தெரியாது

அதுவரை தமிழகம் அறிந்ததெல்லாம் “ஜாணி” தீபா அலைபாயுதே “மாதவன்”, தமிழகம் அதுவரை அறிந்திருந்த தீபாவும் மாதவனும் அவர்கள்தான்

ஜெயா செத்தபின் தீபா வந்தார், அத்தையின் கட்சியும் நாற்காலியும் எனக்கு என்றார், பலவிதமான காமெடிகள் நடந்தன‌

இதில் உச்ச காமெடியாக தீபாவின் கணவரும் தனிகட்சி தொடங்கினார். தீபாவிற்கு கிடைப்பதே 1 வோட்டு அதில் பாதியினை பிரிப்பேன் என மன்றம் தொடங்கிய மாதவனின் காமெடி கொஞ்சமல்ல‌

இடையில் தீபாவின் கார் டிரைவர் ராஜா மீது சர்ச்சை வந்தது, என்னவெல்லாமோ செய்திகள் வந்தன‌

இந்நிலையில் தீபா வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது, இறுதியில் அவர் போலி ஆபிசர் என கண்டுபிடிக்கபட்டது

என்னது அதுவும் போலியா? நானே ஜெயாவிற்கு போலி எனக்கு வாய்த்த கணவனும் போலி, டிரைவரும் போலி என அழுத தீபாவிற்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது

அந்த போலி ஆபிசருக்கு முதுகில் விழுந்த அடியில் என்னை அனுப்பியது தீபாவின் கணவனே என கைகாட்டிவிட்டான்

அடுத்து உரிந்து தொங்கபோவது மாதவனின் முதுகு

இதெல்லாம் ம.நடராஜனின் பாணி, மாதவன் என்பவருக்கு இதெல்லாம் சுத்தமாக வராது

ஆக தீபா ஜெயா இடத்தையும், மாதவன் நடராசன் இடத்தையும் பிடிக்க முயல்கின்றார்கள்

மாதவன் ஏன் இப்படி செய்தார்? ஆக பொண்டாட்டியின் சொத்து கணக்கு முதல் கைபையில் இருக்கும் சில்லறை வரை தெரிந்துகொள்ள ஆசைபட்டு சிக்கிவிட்டார்

அத்தை தமிழ்நாட்டிற்கு செய்த சேவைக்காகவும், தன்னலமற்ற வாழ்விற்காகவும், ஒரு பைசா ஊழல் செய்யாத தியாக வாழ்வு வாழ்ந்ததற்காகவும் அவருக்கு சட்டசபையில் படம் திறந்த நாளில் தீபா இப்படி அழுது கொண்டிருகின்றார் அய்யோ பாவம்

மாதவனுக்கு தினப்படி ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தால் இப்படி ஒரு சிக்கல் வந்திருக்குமா?

மாதவனை விட பரிதாபத்திற்குரியவன் வருமானவரி துறை அதிகாரி வேடத்தில் நடித்தவன், இப்பொழுது என்ன பாடு பட்டுகொண்டிருகின்றானோ?

இவர்கள் இப்படி எல்லாம் விளையாடினால் எப்படி ஜெயா ஆட்சி அமைப்பார்கள்? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா?