தீபிகா படுகோன் நடித்த பத்மாவதி திரைப்படம்
இந்த வட இந்தியர்கள் மகா வித்தியாசமான ரசனை கொண்டவர்கள் , மகா மட்டமான படங்களை எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்கள், கைதட்டி கொள்வார்கள்
ஆனால் பழம் வரலாற்று படங்களில் எங்காவது இந்து முஸ்லீம் உறவுகள், சண்டைகள் என வந்தால் போதும் கொதித்துவிடுவார்கள்
கதை, நடிப்பு, இயக்கம் ,பிரமாண்டம் என எதுவும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது, இந்துக்களை சீண்டுகின்றார்கள் என்ற ஒற்றை சிந்தனை கண்ணை மறைக்க கிளம்புவார்கள்
ஏற்கனவே ஹிருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் நடித்த ஜோத்பாய் எனும் படம் அந்த சர்ச்சையில் சிக்கியது, நாமும் கண்டோம் மகா அற்புதமான படம் அது
கோட்டை, அரசன் உடை, ராணி சமையல் கூடம், யானை பழக்கும் விதம், அரச வஞ்சகம் என எல்லாம் அற்புதமாக காட்டபட்ட படம் அது
ஆனால் அவர்கள் விடவில்லை பெரும் களபேரம் எல்லாம் செய்து முடக்கினார்கள், தெற்கே அப்படம் கொண்டாடபட்டது
இப்பொழுது பத்மாவதி கதைக்காக மறுபடியும் கொந்தளிக்கின்றனர் வட இந்தியர்கள்
ராணி பத்மினி என்பது யார்?
1300களில் ராஜஸ்தான் சித்தூரில் வாழ்ந்த அரசி, அன்று ஆசியாவின் மிக பெரும் அழகியாக இருந்திருக்கின்றார். பெரும் அழகும், அறிவும் கொண்டு மின்னியிருக்கின்றார்
அதாவது குஷ்பூ போல இருந்தார் என சொல்வது மிக சரியாக பொருந்தும்.
அக்காலத்தில்தான் அலாவுதின் கில்ஜி இந்தியா முழுக்க கொள்ளையிட உத்தரவிட்டான். அவனின் திருநங்கை தளபதியான மாலிக்காபூர் மதுரை வந்து மீனாட்சியம்மன் கோவிலை கொள்ளையிட்டதெல்லாம் அக்காலத்தில்தான்
அவன் கிட்டதட்ட 100 யானைகளில் செல்வம் ஏற்றி சென்றான் என்கின்றது வரலாறு
நாயக்கர்கள் வந்து அவன் மறுபடி மதுரைக்கு வராமல் காத்தது எல்லாம் அப்பொழுதுதான் அந்த காலகட்டம்
அந்த அலாவுதின் கில்ஜிக்கு அவ்வளவு நல்ல பெயர் இல்லை, மிகபெரும் அந்தபுரம் இருந்திருக்கின்றது. அதற்கு காவலாய் கொண்டுவரபட்டவன் அந்த மாலிக்காபூர், அவன் எப்படியோ கொடூர தளபதியாகிவிட்டான்
அந்த விசுவாசத்தில் அழகு பெண்களை மன்னருக்கு கொண்டு சேர்ப்பது அவன் பணி.
சித்தூர் ராணியினை பற்றி கேள்விபட்ட அந்த கில்ஜி அவளை மணமுடிக்க கோரினான், பத்மினி சம்பதிக்கவில்ல்லை
பின் என்ன செய்வான் கில்ஜி? சினம் கொண்ட சிங்கமாக சீறினான், அவன் படை பாவையரை பந்தாட கிளம்பியது
வீரத்தில் மட்டுமல்ல, மானத்திலும் மகா உயர்ந்தவர்கள் ராஜ்புத் பெண்கள். போராடினர் முடியா நிலையில் தங்களை தாங்களே மாய்த்தனர்
சில பெண்கள் நெருப்பு மூட்டி கூட்டமாக கொளுத்தி செத்தனர்
இந்தியா கண்ட மாபெரும் கொடுமை அது, அப்பகுதியே எரிந்துகொண்டிருந்தது. கில்ஜியின் படைகளில் சிக்குவதை விட சாவது அப்பெண்களுக்கு தயக்கமில்லை
விஷயம் விபரீதமாவதை 80 ஆயிரம் பெண்கள் செத்தபின் உணர்ந்தான் கில்ஜி. பத்மாவதியின் சாவை தடுக்க விரைந்தான் , அது ஒன்றும் கருணையால் அல்ல என்பதை உணர்ந்த பத்மாவதி தற்கொலை செய்தாள்
இன்றளவும் இச்சம்பவம் வட இந்தியாவின் பெரும் வரலாறு
இதனைத்தான் இப்பொழுது பத்மாவதி என தீபிகா படுகோனேயினை வைத்து பிரமாண்ட சினிமாவாக தயாரிக்கின்றார்கள்
தமிழகம் ஏற்கனவே இதே கதையினை சித்தூர் ராணி பத்மினி என வைஜெயந்திமாலாவினை வைத்து எடுத்துவிட்டது
இவர்கள் இப்பொழுது பாகுபலிக்கு போட்டியாக எடுக்கின்றார்களாம்
அறிவிப்பு வந்து சில காட்சிகள் வரையபட்ட பொழுது எவனோ கலாச்சார கும்பலிடம், இதன் கிளைமேக்ஸ் என்ன தெரியுமா? பத்மாவதிக்கும் கில்ஜிக்கும் காதல் வருவது போலவாம் என கொளுத்திபோட்டுவிட்டான்
அவ்வளவுதான் அந்த வரைபடங்கள் இருந்த நிலையத்தில் புகுந்து ஜெய் ராம் எனும் கோஷத்துடன் கும்பல் எல்லாவற்றையும் கிழித்தெறிந்துவிட்டது
தீபிகா படுகோனே டிவிட்டரில் கொதித்துகொண்டிருக்கின்றார், கண்டனங்கள் வலுக்கின்றன
நான் 100 மணிநேரம் வரைந்ததை 1 மணி நேரத்தில் நாசமாக்கிவிட்டார்கள் என கதறுகின்றான் ஓவியன்
“அட போடா 10 வருடமாக பாபர் கட்டிய மசூதியினையே வெறும் 2 மணிநேரத்தில் இடித்தவர்கள் நாங்கள்” என சொல்லிவிட்டு பல்குத்திகொண்டிருக்கின்றது அக்கும்பல்
விஷயம் சீரியசாகின்றது, பத்மாவதி படம் என்ன ஆக போகின்றது என தெரியவில்லை
அவர்கள் எடுத்தால் எடுக்கட்டும், இல்லாவிட்டால் அந்த சித்தூர் ராணியின் சாயலில் பேரழகாய் ஜொலிக்கும் குஷ்பூவினை வைத்து சங்கம் அப்படத்தை வெற்றிகரமாய் எடுத்துவிடும்