தீர்ப்புக்கு பிறகு ….
என் மனைவி சசிகலா முதல்வாரகும் நாளில்தான் போயஸ்கார்டனில் கால் வைப்பேன் என சபதமிட்டார் நடராஜன்
இனி போயஸ் கார்டணிலிருந்து மொத்தமும் காலியாக போகின்றது, 10 ஆண்டுகளுக்கு இனி சசிகலா முதல்வர் கனவு காணமுடியாது
10ம் வருடம் முடியும்பொழுது போயஸ் கார்டன் வீடே எப்படி இருக்கும் என சொல்லமுடியாது
எல்லா அட்டகாசங்களுக்கும் ஒரு முடிவு உண்டு, எல்லா அக்கிரமங்களுக்கும் ஓர் எல்லையுண்டு
ஆண்டவன் அப்படித்தான் இந்த உலகை படைத்திருக்கின்றான்.
என்றோ இதே சு.சாமி தொடுத்த வழக்கு மிக சரியாக சசிகலா முதல்வராகும் பொழுது கழுத்தில் பாய்ந்திருக்கின்றது, என்றோ முடிந்திருக்க வேண்டிய வழக்கினை 20 வருடம் இழுத்து சசிகலா தனக்கான குழியினை தானே தோண்டியிருக்கின்றார்.
ஒரு சிறு சம்பவமும் பின்னால் நடக்கபோகும் பெரும் குழப்பத்திற்கு காரணம் எனும் கேயாஸ் தியரி உண்மையாயிற்று
அரசன் அன்று கொல்வான், என்பார்கள். அரசனையே கொன்றுவிட்டால் தெய்வம் என்ன செய்யும்?
இதில் அரசியல் விளையாட்டும் இல்லாமல் இல்லை
இந்த தீர்ப்பினை என்றோ எழுதிவிட்டு , ஜெயாவிடம் ஏதோ பேசியிருக்கலாம்
அவர் இருக்கும் வரை அதனை காட்டி பேசிகொண்டிருந்திருக்கலாம், ஆனால் பன்னீர் முதல்வராக இருக்கும் வரை இதனை பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை
மிக சரியாக சசிகலா முதல்வராகும் நேரத்தில் கத்தியினை இறக்கிவிட்டார்கள்
இனி ரிசார்ட் திறக்கபடும், கைநிறைய பை நிறைய அகப்பட்டதுடன் அக்கும்பல் ஓடிவரும், வந்து பன்னீர் வாழ்க என சொல்லும்
பொதுவாக டெல்லிக்கு தமிழகத்தை பிடிக்காது, கிடைத்த இடங்களில் எல்லாம் விளையாட ஆரம்பிக்கும்
எம்ஜிஆர் டெல்லிக்கு விருது வாங்க சென்றபின் அவருக்கு முதலமைச்சர் ஆசை வந்தது, ஜெயலலிதா எம்பி ஆனபின் அவருக்கும் முதல்வர் ஆசை வந்தது
வைகோ டெல்லியில் பேசிய பேச்சுக்களின் பின்னாலும், அதனை ரசிப்பதாக டெல்லி சொல்லியபின் வைகோவிற்கு முதல்வர் ஆசை வந்தது
தயாநிதி மாறனும் அக்குழப்பத்தில் தப்பவில்ல்லை, ஆனால் சாதுர்யமாக கலைஞர் அடித்த அடியில் அன்னாரை காணவில்லை, மேக்ஸிஸ் வழக்கு தவிர எங்காவது அவரை கண்டீர்களா?
இப்பொழுது பன்னீர் அவர்களுக்கு கிடைத்துவிட்டார்
எம்ஜிஆர், ஜெயா வரிசையில் இனி பன்னீர் சிக்கிவிட்டவர், அக்கட்சியே அப்படித்தான்
கலைஞரிடம் அவர்கள் பருப்பு வேகாது, இவர் அவர்களை குழப்பிவிட்டு ஒரு மாதிரி ஆக்கிவிடுவார், தமிழக காங்கிரசே அதற்கு சாட்சி
எப்படியோ தமிழகம் கத்தியின்றி, ரத்தமின்றி மீட்கபட்டுவிட்டது
ஒரே ஒரு எச்சரிக்கை மட்டும் அதிமுகவினர் மனதில் ஓடுகின்றது, அதாவது பன்னீரின் முதல்வர் பதவியில் யாரெல்லாம் குறுக்கே வருகின்றார்களோ? அவர்களுக்கெல்லாம் ஆபத்து
ஜெயா இனி இல்லை, சசிகலா இனி சென்னையிலே இல்லை
அப்படி பன்னீர் சக்தி பயங்கராமக பயங்காட்டுகின்றது.
இந்த தீர்ப்பில் எமக்கு வரும் சந்தேகம் ஒன்றே ஒன்றுதான்
குன்ஹாவின் தீர்ப்பினை ரத்துசெய்த குமாரசாமிக்கு கண்டனமோ, தண்டனையோ இல்லையா?
அவர் கணக்கு பிழை செய்திருக்கின்றார் அல்லவா, மறுபடி 1ம் வகுப்பினை 5 வருடம் படிக்குமாறு ஒரு தண்டனை கொடுத்தால்தான் என்ன?
இருக்கட்டும்
நமக்கெல்லாம் ஒரே ஒரு வருத்தம்தான், கொஞ்ச காலமாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி தன் சுயஉருவத்தை காட்டிகொண்டிருந்தார் சசிகலா
கொஞ்சநாள் விட்டிருந்தால் அப்பல்லோ மர்மத்தையே தன் வாயால் சொல்லியிருப்பார், அதற்குள் சிங்கத்தை கூட்டில் அடைத்துவிட்டார்கள்
இந்த வழக்கினை விட ஆபத்தானது ஒன்று சசிகலாவிற்கு உண்டு
அது மத்திய எய்ம்ஸ் டாக்டர்கள் அரசிற்கு கொடுத்த ஜெயா உடல்நலம் சம்பந்தபட்ட அறிக்கை
நிச்சயம் இந்த வழக்கு தோற்றிருக்குமானால் அதனைத்தான் வீசியிருப்பார்கள்.
அந்த மிரட்டல் சசிகலாவிற்கு இப்போதைக்கு தீராது
இந்த நொடியில் நினைவுக்கு வருபவர் நீதிபதி குன்ஹா, இந்த நாட்டில் இன்னும் நீதி செத்துவிடவில்லை, நல்ல நீதிபதிகள் உண்டு என்பதற்கு நம்பிக்கையாய் இருப்பவர்
அவர் அன்று அப்படி தீர்ப்பெழுதாவிட்டால் இன்று தமிழ்நாட்டை யார் காப்பாற்றமுடியும்?
அந்த நீதிபதி குன்ஹாவினை கையெடுத்து வனங்கலாம், தமிழநாட்டை காத்த சாமி அவர்தான், இன்னொரு மறக்கமுடியாதவர் ஆச்சார்யா..
தமிழ்நாட்டை காக்க அடியெடுத்து கொடுத்தது யார்?
ஆச்சரியமாக அதே சுப்பிரமணியன் சுவாமி.
தீர்ப்பு எப்படி வரும் தெரிந்தும் கடைசியில் சசிகலாவினை தன் காலடியில் விழவைத்திருக்கின்றார் பார்த்தீர்களா? அதுதான் ராஜ தந்திரமான பழிவாங்கல்
மன்னார்குடி அத்தியாயம் இந்த சாமிகளால் முடித்து வைக்கபட்டிருக்கின்றது
ஆக இந்திய நீதிதுறையும் “ஓரளவு பொறுமை காத்து” அதன் பின் “செய்ய வேண்டியதை செய்திருக்கின்றது”