துணுக்கோ துணுக்கு….

இன்னொவா காரின் புதிய மாடல் இன்று வெளியீடு

ஓஹோ.., நாஞ்சில் சம்பத் அய்யாகண்ணு அளவிற்கு கத்துவதிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது, விவஸ்தையே இல்லாமல் பேசுவதிலும் விஷயம் இருக்கின்றது, நாஞ்சில் நாக்கு சும்மா அசையாது

புதிய இன்னொவா மாடல் கார் வருவது அவருக்கு முன்பே தெரிந்திருக்கின்றது


விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றி 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

வைகை நீர் விவகாரத்திலே தெர்மாக்கோல் அளவிற்கு யோசித்தவர்கள், விவசாயிகளை எப்படி சாகாமல் காப்பாற்ற போகின்றீர்கள்? சுப்ரீம் கோர்ட் கேட்டால், எல்லா விவசாயிகளையும் சிறையில் அடைத்து தற்கொலை செய்ய விடாமல் கண்காணிக்கும் திட்டம் உள்ளது என அசால்டாக அறிக்கை சமர்பிக்க்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

அட அதனையும் மீறி கேட்டால் தமிழகத்தில் விவசாயியே இல்லை என ஒரே போடாக போட்டால் முடிந்தது விஷயம் என்பது தமிழக அரசுக்கு தெரியாதா?


பாகிஸ்தானை துண்டு துண்டாக்குங்கள் : சிவசேனா தலைவர் பாய்ச்சல்

அதுவும் சரிதான், ஆனால் இவர்களா செய்வார்கள்?

பாகிஸ்தானை உடைக்க சொன்னால், தமிழகத்து அதிமுகவினை பல துண்டுகளாக உடைத்து கொண்டிருக்கின்றார்கள்,

இப்போதைக்கு அவர்களின் பெரும் எதிரி பாகிஸ்தானை விட அதிமுக போல..