துணை ஜனாதிபதியாகிறார் வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதியாகிறார் வெங்கையா நாயுடு
இப்போது மனம் வெறுத்து திரியும் ஒரு நபர் யாரென்றால் தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுதான்
அந்த பாஜகவிலே இருந்திருந்தால் நிச்சயம் நல்லவாய்ப்பினை பெற்றிருக்கலாம் , இப்பொழுது காங்கிரசில் வந்து சிக்கிகொண்டார், விதி வலியது என்பது இதுதான்
துணை ஜனாதிபதியான பின்பாவது “அதிமுக அரசினை கலைக்கமாட்டோம்” போன்ற கருத்துக்களை அவர் பழக்க தோஷத்தில் பேசாமல் வெங்கய்யா நாயுடு
நிறுத்தட்டும்.
பதவிக்கு ஒரு பொறுப்பு உண்டல்லவா?
தமிழகத்துக்கு தண்ணீர் தர மழை பெய்விக்க முடியாது: கர்நாடக மந்திரி
மழை பெய்விக்க முடியாதுதான், ஆனால் அணையினை திறக்க முடியும் அல்லவா?
வேட்டி கட்டிய ஒரு தலைவர் துணை குடியரசுத் தலைவராக ஆகப்போகிறார் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி: தமிழிசை
பொன் ராதாகிருஷ்ணன் என்ன சுடிதாரா அணிந்திருக்கின்றார்? அவரை பிரதமராக்கி மகிழ்ச்சியினை மும்மடங்காக்கினால் என்ன?
பெங்களூர் சிறையில் சசிகலாவிற்காக சிசிடிவி நீக்கமா? பரபரப்பான செய்திகள்
இந்த கும்பலுக்கு சிசிடிவி மேல் அப்படி என்ன கோபம்?, அது அப்பல்லோவில் இருந்தாலும் பிடிக்கவில்லை, சிறையில் இருந்தாலும் பிடிக்கவில்லை உடனே எடுத்துவிடுகின்றார்கள்.
அப்படி அந்த கேமராவினை கண்டு என்னதான் பயம்?
அப்துல் கலாமை குடியரசு தலைவராக்க வலியுறுத்தியவன் நான் : வைகோ
பிரபாகரனிடமிருந்து ராக்கெட் நுட்பத்தினை வாங்கி, அப்துல் கலாமிற்கு கற்று கொடுத்தவன் நான் என எப்போது சொல்வீர்கள்?
அய்யா, அப்துல்கலாமினை ஜனாதிபதியாக்கிய உங்களுக்கு, இந்த தமிழிசையினை ஜனாதிபதியாக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? ஏன் செய்யவில்லை?
நடிகர் கமல் குறித்து அமைச்சர்கள் பேசுவது தேவையற்ற ஒன்று: பொன்.ராதாகிருஷ்ணன்
அவர்கள் என்றுதான் தேவையுள்ள விஷயங்களை பேசியிருக்கின்றார்கள்? வழக்கம் போல பேசிவிட்டார்கள் அய்யா..