துபாய் இளவரசி தப்பி திரிந்தது உண்மை

துபாய் அரசர் என்னதான் தன்னை முற்போக்களாராக காட்டி கொண்டாலும் இன்னும் கட்டுபெட்டிதனத்திலே இருக்கின்றார் என சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தாயிற்று

ஆம் அந்நாட்டு இளவரசிக்கு பல கட்டுபாடுகளை விதித்திருகின்றார், இளவரசியோ சிட்டுகுருவி மனநிலையில் உள்ளவர்

இது ஒரு கட்டத்தில் வீட்டு காவலாகியிருக்கின்றது

அதாவது சின்ன தம்பி குஷ்பு போல இளவரசி சிறைபட்டிருக்கின்றார், அதிலிருந்து தப்பி இளவரசி செய்ததுதான் அதிரடி

படகில் தன் நண்பர்களோடு தப்பி இந்தியா வந்திருக்கின்றார், கோவா அருகே அது பாகிஸ்தான் தீவிரவாத படகு என பிடித்த இந்தியபடை அப்பெண் சொன்னதை கேட்டு முதலில் நம்பவில்லை

சில அடையாளங்களை கண்டபின் ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு கொண்டு சென்றபின் உண்மை விளங்கியிருக்கின்றது

சத்தமில்லாமல் பிடிபட்ட கிளி கூண்டில் அடைபட்டாயிற்று

இது நண்பர்கள் கடத்தல், மிரட்டல் இல்லை தப்பி செல்லுதல் என பல வகைகளில் செய்தியாகின்றது

அதாவது துபாய் இளவரசி தப்பி திரிந்தது உண்மை, ஆனால் சிலர் கடத்தி சென்றனர் என்ற செய்திகளும் வருகின்றது

துபாய் அரசு மிக சிரமபட்டு செய்தியினை அடக்க மல்லுகட்டிகொண்டிருக்கின்றது