துப்பாக்கி முனையில் தூத்துக்குடி

சும்மா விடவே கூடாது, நாம் யார் என துப்பாக்கி முனையில் காட்டிவிட வேண்டும் என வரிந்துகட்டி வருகின்றது பாஜக அரசு.

தமிழக அரசுக்கும் இந்த‌ மக்கள் நம்மை போல் அடிமையாய் இருந்தாலென்ன? இவர்களுக்கு என்ன உரிமை வேண்டி இருக்கின்றது? அடிமையாய் வாழ்ந்து செத்து போவதுதானே பிறவி பலன் என நினைத்துகொண்டிருக்கின்றது

தென் தமிழகத்தை துண்டிக்கும் காரியத்தில் இறங்கிவிட்டார்கள், தூத்துகுடியில் மின்சாரம் இல்லையாம்

தொடர்ந்து தென் மாவட்டங்களில் இணையத்தை நிறுத்திவிட்டார்களாம்

இவர்கள் கொஞ்சமும் முன்யோசனையோ அறிவோ இல்லாதவர்கள் என்பது புரிகின்றது

இணையம் என்பது இன்று மின்சாரம் போலவே தவிர்க்கமுடியாதது. 90% கணக்கு வழக்கு , கல்வி , இன்னறபிற அவசிய தகவல்கள் எல்லாம் அது இன்றி இல்லை

வெளியூர் வெளிநாடுகளில் வசிப்பவர் முதல் வங்கி கணக்குகள் வரை, வரி வசூல், நிலபட்டா வரை இணையத்தை நம்பி இயங்கும் காலமிது

இக்காலத்தில் இணையம் இல்லை என்பதும், மின்சாரம் இல்லை என்பதும் ஒரே வரிசை. மின்சாரத்திற்காவது ஜெனரேட்டரை இயக்கலாம், ஆனால் இணையத்திற்கு?

மொத்தமாக முடக்கினால் அப்பக்கம் இருக்கும் 3 கோடி மக்களின் வாழ்வே முடங்கும், பல்லாயிரம் கோடி வருமானம் இழக்கபடும்

இதை எல்லாம் கொஞ்சமும் யோசியாமல் மத்திய அரசு சொன்னவுடன் ஆகட்டும் சாமி என செய்துவிட்டது மாநில அரசு

இணையமின்றி வங்கி எப்படி பணமாற்றம் செய்யும்? இது கேஷ்லெஸ் இந்தியாவாம் ஆனால் இணையத்தை முடக்குவார்களாம்

மிக சிக்கலான மனநோயாளிகளின் கையில் அரசுகள் சிக்கிவிட்டன‌

தூத்துகுடியில் சுட்டது போதாது இன்னும் பல இடங்களில் சுடவேண்டும், அதற்கு எல்லோரும் சண்டைக்கு வரவேண்டும் என திட்டமிட்டு செய்கின்றது அரசு

ஒன்றை இவர்கள் மறக்கின்றார்கள்

தென்மாவட்ட மக்களை ஒருகாலமும் ஆயுதத்தால் அடக்க முடியாது, முரண்டு பிடித்தால் அவர்களின் கோபமும் போராட்டமும் அதிகரிக்குமே தவிர குறையாது

அதற்கு அக்காலத்தில் பூலித்தேவன் கட்டபொம்மன் என பல வீரவரலாறுகள் இருந்தன‌

அவர்கள் தொடங்கிவைத்த போராட்டமே வெள்ளை சாம்ராஜ்யத்தை ஓடவிரட்டியது

பாரதியும் வஉசியும் உருவான மண் இது, இங்குள்ள உணர்ச்சி அப்படி

கட்டபொம்மன், பூலித்தேவன், மருதநாயகம், பாரதி என பலர் முடக்கபட்டாலும் அவர்கள் ஏற்றிய உணர்ச்சி தீயே பின்னாளில் பற்றி எரிந்தது, எக்காலமும் அவர்கள் வரலாற்றில் நிற்பது இப்படித்தான்

இது மோடி, அமித் கும்பலுக்கு தெரியாது , மிஸ்டர் பழனிச்சாமி உமக்குமா தெரியாது?

இந்த மக்களை அடக்கிபார்க்க நினைக்காதீர்கள், அப்படிநினைத்தால் விளைவுகள் மிக பயங்கராமாய் இருக்கும் என்பது மட்டும் உறுதி

இவர்கள் சுத்த மடையர்கள் என்பது தான் விஷயம், தூத்துகுடியில் நடந்த போராட்டத்தை இணைய முடக்கம் அது இது என இப்பொழுது 3 மாவட்டத்திற்கு பரப்புகின்றார்கள்

இன்னும் என்னென்ன செய்வார்களோ?

பழனிச்சாமி எனும் முதலமைச்சரையும் அவரின் சீட கோடிகளையும் தூத்துகுடி பக்கம் காணவில்லையே தவிர மற்ற எதிர்கட்சி எல்லாம் சென்றாயிற்று

முக ஸ்டாலின் அங்கே முகாமிட்டுவிட்டார், ஆலையினை இழுத்து மூடுவதே தீர்வு எனும் அவரின் கோரிக்கை வரவேற்கதக்கது

இது போக பலகட்சி தலைவர்கள் அங்கு குவிந்திருக்கின்றனர்

இப்பொழுது துணை ராணுவோம் அனுப்புவோம் என்பதும், தகவல் தொடர்பை துண்டிப்போம் என்பதும் தமிழகம் முழுக்க கலவர சூழலை ஏற்படுத்துமே அன்றி வேறு விளைவுகளை கொடுக்காது

ஆட்சி என்பது நுட்பமானது, அது வராவிட்டால் பழனிச்சாமி நடையினை கட்டலாம். இப்படி சுட்டு கொன்று ஆட்சியினை காப்பாற்றுவோம் என்பதெல்லாம் கண்டிக்கதக்கது

நடந்த விஷயங்களை நோக்கினால் நடக்க போகும் விஷயங்களை கவனிக்கமுடிகின்றது

ஒரு பெரும் சிக்கலை நோக்கி செல்கின்றது நிலமை. மொத்த தமிழகத்தையும் ராணுவமயபடுத்தி இங்கு இப்படித்தான் நடக்கும், என்ன செய்வீர்கள்? என கேட்கும் நிலமைக்கு மத்திய அரசு தயாராவது தெரிகின்றது

ஆனால் அவர்கள் கணிக்கதவறுவது எது என்றால் முன் சொன்னதுதான்

வைகை ஆற்றுக்கு தெற்கு பக்கம் இருப்பவர்களை ஆயுதத்தாலும் மிரட்டலாலும் ஒரு காலமும் வெல்லமுடியாது

அது எத்தனை வருடமானாலும் பெரும் தோல்வியிலேதான் முடியும்

இதனால் பேச்சுவார்த்தைக்கு அரசு வந்து ஆலையினை மூடுவதுதான் மிக சிறந்த வழி. இருக்கும் தீர்வு அதுவே

அணுவுலை விவகாரம் அரசு பணம், இன்னும் பல சிக்கல்களின் தன்மை வேறு

ஆனால் தனியார் ஒருவன் சம்பாதிக்க நகரத்தையே அழிக்க துடிப்பது என்பது எங்கும் எக்காலத்திலும் ஏற்றுகொள்ளமுடியாதது

அதனால் சொல்லலாம் ஆலையினை மூடாமல் அமைதி தீர்வு இல்லை. தென் தமிழ்நாடு என்பது தொட்டால் பற்றும் நெருப்பு. அதனை தொட்டவன் எல்லாம் ஒருகட்டத்தில் ஆட்சி இழந்து ஓடியிருக்கின்றான் என்பதே வரலாறு

பழனிச்சாமி அரசும் மோடி அரசும் அதற்குத்தான் தயாராகின்றது.