தும்பிகள் சிலருக்கு ஏன் கனடா மீது பாசம் பொங்குகின்றது
இந்த தும்பிகள் இன்னும் சிலருக்கு ஏன் கனடா மீது பாசம் பொங்குகின்றது என்றால் விஷயம் ஒன்றுமல்ல
வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகும் அளவு இவர்களுக்கு கல்வி கிடையாது, பெரும் படிப்பு படிக்கும் அளவிற்கு அறிவும் கிடையாது. ஆனால் ஆசை மிக அதிகம்
மிஞ்சி போனால் வளைகுடா நாடுகளுக்கு இவர்கள் செல்லலாமே அன்றி கனடா போன்ற நாடுகள் சாத்தியமில்லை
மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி என படித்து பலர் அமைதியான நாடுகளில் இருப்பது இவர்கள் கண்களை உறுத்திற்று, தாங்களும் எப்படி செல்லலாம் என யோசித்தனர்
கனடா எங்கெல்லாம் பெயர் அடிபடுகின்றது? என தூக்கினார்கள்.
சீக்கியர்களுக்கு, ஈழ தமிழருக்கு, இப்பொழுது சிரியர்களுக்கு என அடைக்கலம் கொடுப்பதில் கனடா பெயர் வரும்
இது போதாதா தும்பிகள் பிடித்துகொண்டன
இனி நாமும் இந்தியாவில் ரத்த களறி ஆக்கினால் அல்லது அப்படி ரத்தகளறி நடப்பது போல காட்டிகொண்டால் கப்பலில் வந்து, விமானத்தில் வந்து கனடா அள்ளிகொண்டு சென்று வாழ்வாங்கு வாழவைக்கும் என விபரீத திட்டம் ஓடுகின்றது.
இங்கு தமிழனை கொல்கின்றார்கள், தமிழனுக்கு பெரும் ஆபத்து , அவனை அணுவுலையால் கொல்கின்றார்கள், அவனுக்கு நீர் கொடுக்காமல் தாகத்தால் கொல்கின்றார்கள்,தமிழை படிக்காதே என மொழி தெரியாமல் ஆக்கி கொல்கின்றார்கள் என பெரும் கோஷம் எல்லாம் எழும்
படிப்பு இல்லை, நேர்முக தேர்வு இல்லை, விசா இம்சை இல்லை, செலவே இல்லை
ஆனால் கனடா விமானம் வந்து அள்ளி செல்லும், எவ்வளவு அழகான வாய்ப்பு விடுவார்களா?
ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா என உலகமெங்கும் ஈழதமிழர் குடியேறியது அந்த ஈழப்போரை காட்டித்தான். அங்கு அமைதி இருந்திருந்தால் இத்தனை ஈழதமிழர்கள் மேல்நாடு சென்றிருக்க முடியாது
சிரியர்கள் ஒரு செலவின்றி, படிப்புமின்றி ஜெர்மன், பிரான்ஸ், கனடா என செட்டில் கொண்டிருக்கின்றார்கள்.
இது இவர்களின் கண்களை உறுத்துகின்றதே அன்றி வேறல்ல விஷயம்
விரைவில் ஆடு அல்லது கோழி ரத்தத்தை பூசிகொண்டு, புகை வரும் அடுப்பு முன்னால் நின்று கொண்டு “#சேவ் டமில்நாட் டமில்ஸ்..ஸ்டாப் இந்தியா” என போஸ் கொடுப்பார்கள் பாருங்கள்.
நிச்சயம் செய்வார்கள்.