தும்பிகள் புலியினை விட்டுவிட்டு யானை பக்கம் வந்துவிட்டன

தும்பிகள் இப்பொழுது புலியினை விட்டுவிட்டு யானை பக்கம் வந்துவிட்டன, யானை தமிழர் சொத்து, தமிழர் அடையாளம், தமிழர் யானை, தமிழர் சங்கிலி, தமிழர் யானை சாணம் என ஏக அலப்பறைகள்

யானைகள் என்பது இந்திய அடையாளம், அக்காலத்தில் இருந்தே யானை எனும் பிரமாண்ட மிருகத்தை பழக்கும் வழக்கம் இந்தியாவில் இருந்திருக்கின்றது

அது தமிழகத்தில் மட்டுமல்ல, வட இந்தியா பர்மா தாய்லாந்து என பல ஆசிய நாடுகளில் இருந்திருக்கின்றது

அலெக்ஸாண்டருக்கு முந்தைய காலத்திலிருந்தே இந்திய யானைபடை வெளிநாட்டு அரசர்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது, அவர்கள் கூடிய அவையில் எல்லாம் இந்திய யானைபடையினை பற்றி பெருமையாய் பேசுவார்கள்

ஒவ்வொரு அரசனின் அரண்மனையிலும் யானைகளுக்கும் அதை பராமரிக்கவும் தனி இடமே இருந்தது, சமஸ்தானங்களின் பெரும் பட்ஜெட்டை யானை விழுங்கியது

ஆலய நிர்மானம், கட்டுமானம், காடுகள் திருத்துதல் என பல வேலைகளுக்கு யானைகளே பயன்படுத்தபட்டன‌

அரசர்கள் மட்டுமல்ல, பெரும் நிலச்சுவாநதார்களும் யானைகளை வேலை செய்ய வைத்திருந்தனர், யானை கட்டி போரடித்த நெற்களங்களே சாட்சி

இந்திய யானைபடை 2000 ஆண்டுகளுக்கு முன்பே அலெக்ஸாண்டரை மிரட்டியது, அதுவரை இந்திய யானைபடைகளை கண்டு பயந்த வெளிநாட்டவர் மத்தியில் அவன் வைக்கோல் பந்துகளை நெருப்பாக்கி வீசி யானைபடைகளை முறியடிக்க பார்த்தான்

ஆயினும் மழைக்காலம் என்பதால் அவனின் தோல்வியினை இந்திய யானைபடை கொடுத்தது என்பது வரலாறு, போரஸின் யானைபடையே அலெக்ஸாண்டரை விரட்டிற்று

யானைபடை பிரிட்டானியார் வரவுவரை பெரும் அடையாளமாய் இருந்தது, ஆனால் கிளைவ் என்பவனின் வித்தியாசமான தாக்குதலில் யானைபடைகள் பலனளிக்கவிலை, அப்படியே அவைகள் வழக்கொழிந்தன‌

ஆயினும் இந்த நாட்டில் இன்றும் ஆலயங்கள் முதல் பல இடங்களில் தொடர்ந்துவரும் யானைகளுக்கான அங்கீகாரம் அப்படியே இருக்கின்றது

இருக்கட்டும்

யானை என்பது ஆசிய அடையாளம், அதை தமிழர் மிருகம் என்றோ, தமிழன் அடையாளம் என்றோ சொல்லிகொண்டிருப்பது ஒருவகை வியாதி

யானையில் ஆசிய யானை, ஆப்ரிக்க யானை என சில வகைகள் உண்டு, புதிதாக தமிழன் யானை என ஒன்றை தும்பிகள் சொல்கின்றன‌

ஆசியா முழுக்க பயன்பட்ட மிருகம் அது

அதைவிட்டு ஏதோ தமிழன் தான் முதலில் யானையினை கண்டான், அதொடு பேசினான், பழகினான் அதற்கு கரும்பு பிடிக்கும் வெல்லம் பிடிக்கும் என கண்டுபிடித்தான் என சொல்லும் தும்பிகளை கண்டால் பரிதாபமே மிஞ்சுகின்றது

60 ஆயிரம் யானை காமெடி ஒரு பக்கம் என்றால், தமிழன் முதன் முதலில் கப்பல்படை அமைத்தவன் என அடுத்த காமெடி

கேட்டால் ராஜேந்திர சோழன் தெரியுமா என சீறுவார்கள்

ராஜேந்திரனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல்படை வைத்திருந்தனர் ரோமையர்

ஜூலியஸ் சீசரும், மார்க் ஆண்டனியும், ஆக்டேவியனும் அதில் கரைகண்டு இருந்தார்கள்

அவர்களுக்கு ஆயிரம் ஆண்டு கழித்தே சோழரிடம் கப்பல் படை வந்தது

வட இந்திய மன்னன் போரஸ் அலெக்சாண்டரை யானை படைய்யோடு எதிர்த்த ஆயிரம் ஆண்டு கழித்துத்தான் சோழன் யானைமேலே சென்றான்

இதுபற்றி ஒரு தும்பியிடம் சொன்னால் அது நெஞ்சே வெடிக்கும்படி பதில் சொன்னது

“அண்ணே அந்த போரஸ் தமிழண்ணே, அவன் வச்சிருந்தது தமிழ்யானை படைண்ணே அவன் பெயர் புருஷோத்தமன் தமிழண்ணே, அலெக்ஸாண்டரையே விரட்டிய பரம்பரைண்ணே

சரி இந்த ஜூலியஸ் சீசர் யார்?

அண்ணே சூலியஸ்ன்னா சூரியன்னு அர்த்தம்ணே, சூரியன்கிற தமிழ் வார்த்தை ரோமருக்கு சூலியஸ்னு ஆயிட்டுண்ணே அவனும் தமிழன் தான்

சரி இந்த ஆண்டனி

அண்ணே அது ஆருடா நீ, அவனா நீ என சொன்ன தமிழ்வார்த்தைன்னே, எதிராளியினை ஆருடா நீ என மானத்தோடு கேட்டவன்னு பேருன்ணே அவனும் தமிழன்னே

இந்த ஆக்டேவியன்

அது தெரியாதா? ஆட்டுவித்தவன்னு அர்த்தம்னே, உலகத்தையே ஆட்டுவித்த தமிழன்னே அது ஆக்டேவியஸ் ஆயிட்டு, உலகத்தில் எல்லொரும் தமிழண்ணே”

இதற்கு மேல் கிளிய்பாட்ரா பற்றி கேட்டால் தும்பி என்ன சொல்லும் என உணரமுடிந்ததால் அவள் பற்றி கேட்கவில்லை, சும்மாவே ..”த்தா” எனும் கட்சி அது அதனால் அத்தொடு நிறுத்தியாயிற்று.