பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

துரியோதனன் வீரசுவர்க்கம் அடைந்ததுபோல் அவன் அடையட்டும்

Image may contain: 1 person, sitting and indoor

பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடும் பூரா பயலும் அவர் இறந்தநாளான இன்று ஒரு அஞ்சலியும் செலுத்தவில்லை

பிரபாகரன் இல்லை என்பதே உண்மை, இலங்கை அரசு கடந்தவருடம் குண்டுதுளைக்கா கார்களை, பாதுகாப்பு வாகனங்களை எல்லாம் கடலில் தள்ளியது

அதற்கு இரு காரணம், பராமரிப்பு செலவு அதிகம் விற்றுவிட்டால் ரவுடிகள் வாங்கி தங்கள் பாதுகாப்பிற்கு வைத்துகொள்வார்கள் என்பதால் அம்முடிவு எடுக்கபட்டது

அதாவது இனி கொழும்பு அரசதந்திரிகளுக்கு ஆபத்து இல்லை என்பதை சொல்லிவிட்டது

இதனால் பிரபாகரன் வைகோவின் கார் டிக்கி, சீமான் வீட்டு சமையலறை, பழ.நெடுமாறன் மருத்துவமனையில் மட்டும் வாழ்ந்துகொண்டே இருக்கட்டும்

முள்ளிவாய்க்காலில் செத்த எல்லோருக்கும் அஞ்சலி செலுத்துகின்றார்கள்

ஆனால் 40 வருடம் போர்களத்திலே கழித்த பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த யாரும் தயாரில்லை

இவ்விஷயத்தில் ஜெயலலிதா, ஹிட்லர், பிரபாகரன் எல்லாம் ஒரே வகையறா

எல்லா சர்வாதிகாரிகளும் இப்படித்தான் மறக்கபடுகின்றார்கள், அவர்களின் உண்மையான அபிமானிகள் என யாருமில்லை

புலிகும்பலில் சிலதுதான் புலிகளின் கோடிகணக்கான சொத்துக்களை பிரபாகரன் வந்தால்தான் தருவோம், அதனால் அவர் உயிரோடு வரவேண்டும் என சொல்லி ஆட்டையினை போட்டுவிட்டு அழிச்சாட்டியம் செய்கின்றன என்றால் ஒரு உண்மையான அனுதாபியுமா இல்லை?

இந்த மக்களுக்குத்தான் அவர் அந்த போராட்டம் போராடினாராம்

எவனாவது ஒருவன் மே 18ல் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவான் என பார்த்தால் ஒருவன் கூட இல்லை

எப்படி உருவானார் பிரபாகரன்?

எனக்கு அரசியல் தெரியாது, மார்க்சிசம் புரியாது, கொல்வதை தவிர எதுவும் தெரியாது என நின்றவனை ஆளாளுக்கு வளைத்தார்கள்

இப்படி நடந்தால் ஈழம் கிடைக்கும் என யார்சொன்னாலும் ஏற்றுகொண்டு கண்மூடிதனமாக பாயும் ஒரு குணம் அவருக்கு இருந்தது

அவரின் பலம் அது, பலவீனமும் அது

இந்தியா, அமெரிக்கா, இலங்கை, திராவிட கட்சிகள் , இலங்கை தமிழ்கட்சிகள் என நாடுகளும், இயக்கங்களும் உளவு நிறுவணங்களும் அவர்கள் விருப்பத்திற்கு வளைக்கபார்த்தன, வளைத்துவிட்டு அவரை முடக்கவும் பார்த்தன‌

யாழ்பாணத்தார், கிறிஸ்தவ மடாதிபதிகள், ராமசந்திரன், கருணாநிதி, வைகோ கும்பல் என ஆளாளுக்கு அவரை பயன்படுத்தினார்கள்

ஈழம் என்ற ஒற்றை அங்குசத்தை காட்டி அந்த யானையினை இஷ்டத்திற்கு வித்தைகாட்ட வைத்தார்கள். அந்த அப்பாவி பிரபாகரனும் நம்பினான்

இக்கொலையினை செய் ஈழம் மலரும் என அவனை தூண்டிவிட்டனர், ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் ஒவ்வொரு கும்பல் பலன் பெற்றது

இதில் எல்லோராலும் ஏமாற்றபட்ட பிரபாகரன் தன்னால் முடிந்தவரை எல்லோரையும் கொன்றுவிட்டு தானும் செத்தார்

ராஜிவ் அவரை ஏமாற்றவில்லை எனினும் துர்போதனையால் அப்படுகொலை நடந்தது

எத்தனையோ பேர் ஈழம் பெயரை சொல்லி பிரபாகரனை ஏமாற்றி காரியம் சாதித்தனர், இது இலங்கை தமிழ்கட்சியிலிருந்து தொடங்கி அமெரிக்கா வரை நீண்டது

அவர் போராட்டத்தை கூர்ந்து பார்த்தால் தெரியும், இதனால்தான் படுகொலையாளியாக மாறினார், யாரையும் அவர் நம்பவில்லை

தங்களை வெறும் கூலிபடையாக பாவித்த ஒவ்வொருவரையும் குறிவைத்து தூக்கினார்

இதில் அவர் செய்ய தவறியது தனக்கு தவறான வழிகாட்டிய திராவிட தலைவர்களை

காலம் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருந்தால் அவர்களையும் உண்மையில் சாத்தியிருப்பார் அதற்குள் காலம் முந்திகொண்டது தமிழக துரதிருஷ்டம் நீடிக்கின்றது

ஆயுதம் எவ்வளவு பெரும் அழிவில் முடிக்கும் என அவருக்கு தெரியவில்லை , எப்போது ஆயுதம் தூக்கவேண்டும் எனதெரிந்த அவருக்கு எப்போது கீழே வைக்க வேண்டும் என தெரியவில்லை

ஆனால் இலங்கை இஸ்லாமியர் இதில் கவனமாக இருந்தார்கள், அவர்கள் ஆயுதமேந்தினால் அள்ளிகொடுக்க எத்தனையோ நாடுகள் தயார் எனும்பொழுது அமைதிகாத்தார்கள், அழிவினை தடுத்தார்கள்

ஆனால் பிரபாகரன் இந்த விஷயத்தில் சிக்கினார், பெரும் அழிவினை கொடுத்தார்

1986க்கு முற்பட்ட பிரபாகரனை எல்லோருக்கும் பிடித்திருந்தது, வெறும் 28 வயது இளைஞனாக அவர் தலைவனாக நின்றது அந்நாளில் பெரும் ஆச்சரியம்

அந்த பிரபாகரன் மேல் எதிரியும் குற்றம் சொல்லமுடியாது

பெரும் எதிர்காலமும் வாய்ப்பும் அவருக்கு அன்று இருந்தது. ஆனால் எடுப்பார் கைபிள்ளையாக மாறி எல்லாம் நாசமாயிற்று

என்ன இருந்தாலும் பாரதத்து துரியோதனன் வீரசுவர்க்கம் அடைந்தது போல பிரபாகரனும் அடைந்தான் என்பதுதான் வரலாறு

பாரதபோரின் அழிவுக்கு துரியோதனன் முழு காரணம் எனினும் கடைசிவரை அவன் துணிவாக தனியாக போராடியதால் அவனும் வீரன் என பெயர்பெற்று நிற்கின்றான்

பிரபாகரனும் அப்படியே, சந்தேகமே இல்லை

துரியனை கெடுத்தது சகுனி என்றால் பிரபாகரனை கெடுத்த சகுனிகள் தமிழகம் முதல் அமெரிக்கா வரை உண்டு

ஒருவகையில் அவன் கொடூர கொலையாளி, படுபயங்கர இயக்கத்தை நடத்தியவன். ஆனால் மறுபக்கம் அவன் பெரும் அப்பாவி, ஏமாளி

ஒரு பயலும் அந்த பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தமாட்டான், நாம் செலுத்துவோம்

துரியோதனன் வீரசுவர்க்கம் அடைந்ததுபோல் அவன் அடையட்டும்


தைரியமாக பிரபாகரனுக்கு ஒரு அஞ்சலி செலுத்த முடியவில்லை , அவ்வளவு பயம் , யார்மீதோ அவ்வளவு அச்சம்

பிரபாகரனை தவிர நரகாசுரன் முதல் லீகுவான்யூ வரை வீர வணக்கம் வைப்பார்கள் தும்பிகள்..

ஏதும் கேட்டால் வீழ்ந்துவிடாத வீரம், மண்டியிடாத மானம்….

இனி என்றைக்காவது அவனுக்கு வீரவணக்கம், இவனுக்கு வீரவணக்கம் என வரட்டும், காதை திருகி இதனை கேட்க வேண்டும்


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications