துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன்

துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன்

மிக சரி, அதுதான் நடந்திருக்கின்றது, துரோகம் வெல்லவில்லை நீதிதான் வென்றிருக்கின்றது என்பது ஆர்.எம் வீரப்பன், பண்ருட்டி ராமசந்திரன், சாத்தூர் ராம்சந்திரன் போன்றோர்களுக்கு தெரியாதா?

அவர்கள் சொல்லவேண்டிய டயலாக்கினை எல்லாம் இவர் சொல்லிகொண்டிருக்கின்றார்

ஆர்.எம் வீரப்பன் இப்பொழுது என்ன சொல்வார் என தெரியாது, ஆனால் கிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை எல்லாம் நினைத்து , தாங்கள் ஓட அடிபட்டத்தை எல்லாம் நினைத்து, இன்று நடப்பதை நினைத்து மனதை ஆறுதல்படுத்திகொண்டிருப்பார் பண்ருட்டி ராமசந்திரன்

அந்த மனிதர் வாய்திறந்தால் டிடிவி தினகரன் , சீமான் உள்பட (ஐ.நாவில் ஈழதமிழர் பிரச்சினையினை இந்திய பிரதிநிதியாய் பேசியவரும் அவர்தான், ராஜிவ் பிரபாகரன் சந்திப்பில் உடன் இருந்தவரும் அவர்தான்) பலர் வாயினை அடைக்க முடியும்

ஆனால் பேசவேமாட்டேன் என்கின்றார், இனியாவது பேசுவாரா பார்க்கலாம்


உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி, எங்கள் ஆட்சியின் சாதனை இது : பன்னீர் செல்வம்

மனிதர் நடராஜனை எப்படி எல்லாம் கலாய்க்கின்றார் பார்த்தீர்களா?

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா? என்பது இதேதான்