துரோகிகளால் கட்டப்பட்டதா தாஜ்மகால்?
துரோகிகளால் கட்டப்பட்டதா தாஜ்மகால், பாஜக எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை
இந்த ஈழபுலிகள் தொடங்கி வைத்த துரோகி எனும் வார்த்தை, சீமானிடம் வந்து இப்பொழுது வட இந்தியாவிற்கும் சென்றுவிட்டது
யாருக்கு யார் துரோகம் செய்தார் என பாஜக எம்.எல்.ஏ சொல்லவில்லை
ஒருவேளை இவரின் முப்பாட்டி யாரையேனும் ஷாஜகான் தாஜ்மகால் ஆசைகாட்டி மோசம் செய்திருப்பாரோ..
சே சே இந்த தமிழ் பத்திரிகைகளை படித்து புத்தி அப்படியே சிந்திக்கின்றது. அப்படி எல்லாம் இருக்க முடியாது.
எனினும் தாஜ்மஹாலுக்கு உரிய காவலை பலபடுத்துவது நல்லது
முன்பு இப்படித்தான் ஆளுக்கொரு முக்கில் முணகிகொண்டிருந்தவர்கள் திடீரென பாபர் மசூதியினை இடித்து தள்ளினார்கள்
அதனால் பழனிச்சாமிக்கு பதிலாக, தாஜ்மகாலை சுற்றி கமாண்டோக்களை நிறுத்துவது நல்லது.