துர்கா ஸ்டாலினின் ‘அவரும் நானும்’ நூல்

Image may contain: 2 people, people smiling, people standing

முன்பெல்லாம் திமுகவில் அண்ணா, பெரியார், திராவிடம் என நூல் வெளியிடுவார்கள்

கலைஞர் தானே எழுதிய இலக்கிய‌ நூலை வெளியிடுவார், நெஞ்சுக்கு நீதி போன்றவை எழுதினாலும் அதிலும் கட்சியும் தானும் கடந்துவந்த பாதையினை ஆவணம் போல் சொல்லியிருப்பாரே தவிர சுயபுகழ்ச்சி இருக்காது

அனுதினமும் முரசொலியில் எழுதிகொண்டே இருந்ததால் தனிபட்ட முறையில் அவரை பற்றி எழுத அவசியமும் இல்லை

முரசொலி மாறன் போன்றவர்கள் கூட திராவிட கொள்கை புத்தகம்தான் எழுதினார்கள்

இப்பொழுது திமுக மாறிவிட்டது, உதயநிதி ஸ்டாலின் கோஷ்டிகளின் அழிச்சாட்டியம் கூடுகின்றது. அவர்தான் இம்சை என்றால் ஸ்டாலினின் மனைவி “அவரும் நானும்” என்றொரு புத்தகம் எழுதியிருக்கின்றாராம்.

அப்படி ஸ்டாலின் என்ன சாதித்துவிட்டார் என்பதுதான் தெரியவில்லை. இப்பொழுது அதனை வெளியிட அவசியமுமில்லை. கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் ஒரு இடைதேர்தலில் கூட வெற்றிபெற முடியவில்லை என்பதும், ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க கூட தெரியவில்லை என்பதும் ஒன்றும் ரகசியமல்ல‌

ஏதோ துர்கா ஸ்டாலின் பெரியார் காலத்தில் அரசியலுக்கு வந்தது போலவும் கொள்கை பிடித்து இருவரும் மணம் செய்து , இந்தி எதிர்ப்பு, மிசாவில் ஒன்றாய் சிறையில் இருந்தது போலவும் , துர்கா ஸ்டாலின் கட்சிக்காய் கடுமையாய் உழைத்தவர் போலவும் சொல்ல வருகின்றார்கள்.

பொதுவாக இதெல்லாம் “நான் ஏன் பிறந்தேன்?” என தனக்குத்தானே 4 பேரை வைத்து புத்தகம் எழுதிய ராமசந்திரன் ஸ்டைல்

முக ஸ்டாலினும் இப்பொழுது அதிமுக தலமை போல மாறி வருகின்றார், இது சரியான கோணம் அல்ல‌

அதிமுக அழிந்துகொண்டிருக்கின்றது, திமுக அதிமுக போல மாறிகொண்டிருக்கின்றது அதாவது அதிமுக உடனே சிதறினால் திமுக கொஞ்சநாளில் சிதறலாம்

அதற்கான காட்சிகள் இப்பொழுதே தெரிய தொடங்கியாயிற்று

புத்தகம் எழுத சொல்லியிருப்பவர், யாரென்றால் மனுஷ்ய புத்திரர்

அவர்தான் பதித்திருக்கின்றார், எல்லா சிக்கல்களுக்கும் இவர்தான் காரணம். அவரின் புகழ்ச்சியில் மயங்கி பெரும் பள்ளத்தில் சரிகின்றார் ஸ்டாலின்

தன் பதிப்பக லாபத்திற்காக ஸ்டாலினை பலிகொடுக்கின்றார் மனுஷ்யர், இது தெரியாமல் வசமாக சிக்குகின்றார் ஸ்டாலின்

விரைவில் முரசொலி பதிப்பகம் மூடபடலாம் அல்லது மனுஷ்யபுத்திரனிடம் சல்லிவிலையில் விற்கபடலாம்

ஏன் முரசொலி கூட இனி மனுஷ்யபுத்திரனால் நடந்த்தபட்டு “சொறிஒலி” ஆகி நாசமாய் போகலாம்