துர்கா ஸ்டாலின் எல்லாம் திமுக மாநாட்டை நடத்தும் அளவு வந்தாயிற்று

இந்த திமுகவின் ஈரோடு மாநாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, நேற்று செய்தி பார்க்கும்பொழுது கலைஞர் டிவியில் அந்த காட்சி தெரிந்தது

மாநாட்டு பந்தலை பார்த்து ஆலோசனைகளை கொடுத்துகொண்டிருந்தது துர்கா ஸ்டாலினும், உதயநிதியும்

இதன்பின் யாருக்காவது அம்மாநாடு நடக்கும் திசைபக்கம் தலைவைத்து படுக்க விருப்பம் வருமா?

என்றாவது தயாளு அல்லது ராசாத்தி அம்மாளை கட்சி மேடைகளில் யாராவது பார்த்ததுண்டா?

அம்மனிதனுக்கு கட்சியினை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற எல்லா கோணமும் பிசறின்றி தெரிந்திருக்கின்றது

துர்கா ஸ்டாலின் எல்லாம் திமுக மாநாட்டை நடத்தும் அளவு வந்தாயிற்று, ஆக இன்னொரு சசிகலா உருவாகிகொண்டிருக்கின்றார்.

உதயநிதி என்பவர் நிச்சயம் ரஜினி கமலுக்கு போட்டி அல்ல, ஆனால் அதிமுக ஜெயாடிவி நிர்வாகி விவேக் என்பவரை போல இங்கு உருவாகிகொண்டிருக்கின்றார்


மொகலாயர்களும், மவுரியர்களும் ஆளாத மாநிலம் தமிழகம்தான் : திருச்சி சிவா ஈரோடு மாநாட்டில் பேச்சு

கேரளாவினை எந்த மவுரியனும், மொகலாயனும் ஆண்டான் என யாரும் நல்ல வேளையாக கேட்கவில்லை

ஏன்? சிவாஜியின் சிவசேனை கூடத்தான் அவுரங்கசீப்பை விரட்டியது

இங்கே விஜயநகர மன்னர்கள் கூடத்தான் கன்னடாவிலும், தெலுங்கு தேசத்தில் இருந்தும் விரட்டினார்கள்

ஏதோ மவுரியர்களையும், முகலாயர்களையும் திமுக தான் விரட்டி அடித்தது போல திருச்சி சிவா பேசிகொண்டிருக்கின்றார்

ஒருவேளை மதவாத‌ சிவசேனையோடு திமுகவிற்கு ஏதும் ஒப்பந்தம் இருக்குமோ?

எப்படி இருந்தவர் திருச்சி சிவா? இந்த சசிகலா புஷ்பாவிடம் அடி வாங்கியபின் சித்தம் கலங்கிவிட்டார்