பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தூத்துகுடியில் போராடியது சமூக விரோதிகளாம் ரஜினி சொல்கின்றார்

Image may contain: 1 person

தூத்துகுடியில் போராடியது சமூக விரோதிகளாம் ரஜினி சொல்கின்றார்.

எந்த ரஜினி தளபதி, பாஷா, கபாலி, காலா என திரையில் அடித்து நொறுக்கிய ரஜினி

காலா டிரெய்லரை கண்டால் “உடம்புதான் நமக்கு பலம்..மக்களை திரட்டுங்கலே, நாம யாருண்ணு காட்டுவோம்லே” என முழங்குகின்றது

“அடங்க மறுப்பவன் … புடுங்குபவன் யாருன்னு காட்டு” என பாடல் வேறு

“நிலம் உங்களுக்கு அதிகாரம் எங்களுக்கு வாழ்க்கை” இதைத்தானே தூத்துகுடிகாரனும் ஸ்டெர்லைட்டிடம், அரசிடமும் சொல்லிகொண்டே இருந்தான்

இவர் சொன்னால் பஞ்ச் டயலாக், மக்கள் சொன்னால் அது சமூக விரோதமாம்

டிரைய்லர் முழுக்க அடி , உதை , போராட்டம், புரட்சி, பேதி வருமளவு புரட்சி மருந்து.

பாடல் முழுக்க காது கிழியும் அளவு ஒரே புரட்சி போராளி இம்சைகள்

கபாலியில் இவர் அடித்து உடைப்பாராம், சகலத்தையும் நொறுக்குவாராம் அது போராட்டமாம் புரட்சியாம் மலேசிய தமிழரை காப்பாராம்

காலாவில் எல்லோரையும் அடித்து விரட்டி மும்பை தமிழரை சேவ் பண்ணுவாராம்

ஆனால் தூத்துகுடி மக்கள் நிஜத்தில் போராடினால் அது சமூக விரோதமாம், என்னய்யா நியாயம் இது?

ஆனால் தூத்துகுடி மக்கள் என்ன செய்தார்கள், உடலோடு வந்து உயிர்கொடுத்தார்கள், அது தவறாம்

திரையில் அது புரட்சியாம், நிஜத்தில் நடந்தால் சமூக விரோதமாம்

“காலா உன்னை துரும்பென நினைக்கின்றேன், காலடியில் வாடா உன்னை மிதிக்கின்றேன்” எனும் பாரதியின் வாக்கு இனி படம் வரும்பொழுது புரியும்

“எலேய் வேங்கையன் முவனே, நீ ஒத்தையில வந்தாலும் சரி பத்து பேரோட வந்தாலும் சரி மதுரைக்கு தெற்கே வந்துருல பாப்போம்

மதுரை என்னலே, மும்பை தமிழர்ல‌ பாதி நாங்கதாம்ல, நீ வந்துரு பாத்துருவோம்”


தமிழகத்தில் ஸ்டெர்லைட்டை அடுத்து மூட வேண்டியது சினிமா தொழிற்சாலை

ஆளாளுக்கு போராளிகள், புடுங்கிகள் என அங்கிருந்துதான் வந்து சமூகநலனை கெடுக்கின்றார்கள், சமூக அமைதியினை சீர்குலைக்கின்றார்கள்

ராமசந்திரனில் இருந்து இன்றைய பாரதிராஜா,சைமன், ரஜினி, கமல், இப்பொழுது பா.ரஞ்சித் எல்லாம் அந்த ஆலை உற்பத்தி செய்த நச்சு கிருமிகளே

அந்த ஆலை முதலில் மூடபடாமல் தமிழகம் உருப்படாது.

அது ஆலை முழுக்க சாக்கடை, அதிலிருந்து கொசுகூட்டம் உற்பத்தி ஆகி கொடூர நோய்களை பரப்பிகொண்டே இருக்கின்றது

மருந்து தெளித்தோ, கொசுவலை போட்டோ இதனை கட்டுபடுத்த முடியவில்லை

ஒரே தீர்வு அதனை மண் அள்ளிபோட்டு மூட வேண்டியதுதான்


தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் 3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது : செய்தி

மிஸ்டர் பாரதிராஜா & கோ, எங்கே வாயில் துண்டு பீடியுடன் மரத்தடியில் 3 சீட்டு விளையாடி கொண்டிருக்கின்றீர்கள்

உங்களுக்கான நேரம் இதோ….


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications